பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, December 31, 2012

சின்னஞ்சிறு மலருக்கு அஞ்சலி

டெல்லி கொடூரம்.

புது டெல்லியில் ஓடும் பேருந்தில் மனித உருவில் வந்த சில மிருகங்களால் சீரழிக்கப்பட்ட அந்த சின்னஞ்சிறு பெண் தன் தாய் மண்ணில் உயிரை விடாமல் அன்னிய மண்ணுக்குக் கொண்டு சென்று அங்கு உயிரை விடும்படி செய்துவிட்டார்கள். இந்தியாவின் அவமான நிகழ்ச்சியில் தன் உயிரை  இழந்துவிட்ட அந்த சின்னஞ்சிறு மலருக்கு அஞ்சலி செலுத்துவோம். இப்போது நாம் வேறு என்ன செய்ய முடியும்?


சுவாமி விவேகானந்தரின் 150ஆம் பிறந்த நாள் விழா.-- 1

                            சுவாமி விவேகானந்தரின் 150ஆம் பிறந்த நாள் விழா.

புதிய இந்தியாவைப் படைப்பதில் முன்னணியில் இருந்த மூவர் சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதி, மகாத்மா காந்தி ஆகியோர். முதல் இருவரும் இப்பூவுலகில் மிகக் குறைந்த ஆண்டுகளே வாழ்ந்தார்கள் என்றாலும் வரலாற்றை மாற்றி எழுதுமளவுக்கு சாதித்துவிட்டுச் சென்றார்கள். இன்று நாம் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கும் இவ்விருவரின் கருத்துக்கள் தீர்வு காண்பதாக இருப்பதை காண்கிறோம். தனி மனிதனின் வாழ்க்கையை முதன்மையாக வைத்து சிந்தித்தவர் சுவாமி விவேகானந்தர். ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள் அந்த நாட்டில் வாழும் மனிதர்களே. அந்த அற்புத மகானுடைய 150ஆம் ஆண்டு பிறந்த நாள் 2013 ஜனவரி 12இல் தொடங்குகிறது. அவர் பிறந்த நாளையொட்டி ஜனவரி 1முதல் "பாரதி பயிலகம் வலைப்பூவில்" ஒவ்வொரு நாளும் அவருடைய சிந்தனைத் துளிகளை இடம்பெறச் செய்யவேண்டுமென்பது நமது அவா. அதன்படி அதன் முதல் ஆக்கம் 2013 ஜனவர் 1இல் வெளிவருகிறது. இனி ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சிறு கருத்துத் துளிகளை இதே வலைப்பூவில் காணலாம். படித்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

                                  1. இந்தியப் பெண்மையின் இலட்சியம்.

ஓ இந்தியா! உனது பெண்மையின் இலட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே! நீ வணங்கும் கடவுள் துறவியருக்கெல்லாம் பெருந்துறவி, அனைத்தையும் தியாகம் செய்துவிட்ட உமாபதி சங்கரர் என்பதை மறவாதே!

இந்தியாவில் பெண்மையின் இலட்சியம் தாய்மை -- அற்புதமான, தன்னலமற்ற, துன்பங்களையெல்லாம் ஏற்றுக்கொள்கிற, என்றும் மன்னிக்கும் இயல்புடையவள் தாய்!

கீழை நாட்டுப் பெண்களை மேலை நாட்டு அளவுகோலால் மதிப்பிடுவது சரியல்ல. மேலை நாட்டில் பெண் என்றால் மனைவி; கீழை நாட்டிலோ அவள் தாய். இந்தியாவில் பெண்களைத் தெய்வ வடிவங்களாகவே கருதுகிறோம். ஒரு பெண்ணின் வாழ்க்கை தாய்மை என்ற ஒன்றையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஓர் உண்மையான தாயாகத் திகழ அவள் கற்பு நெறியில் நிலைபெற்றவளாக இருக்க வேண்டும்.

நமது பெண்கள் அவ்வளவு படித்தவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தூய்மையில் சிறந்தவர்கள்.

ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனைத் தவிர மற்ற ஆண்களைத் தன் பிள்ளைகளாகப் பார்க்க வேண்டும். ஒவ்வோர் ஆணும் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தன் தாயாகக் காண வேண்டும். மேலை நாட்டினர் பெண்களிடம் காட்டும் மரியாதை இருக்கிறதே, அதைக் காணும்போது எனக்கு வெறுப்பே மிகுகிறது. பால் வேற்றுமையை மறந்து, மனிதர்கள் என்னும் அடிப்படை மீது இருபாலரும் சந்திக்கக் கற்றுக் கொள்ளும் போதுதான் மேலை நாட்டுப் பெண்கள் உண்மையாக முன்னேறுவார்கள். அதுவரை அவர்கள் விளையாட்டுப் பொருட்கள், அதற்கு மேல் எதுவும் அல்ல. இவை எல்லாம்தான் விவாகரத்திற்குக் காரணமாகின்றன. ஆண்கள் குனிந்து பெண்களுக்கு நாற்காலி அளித்து உபசரிக்கின்றனர்; அவர்களின் அழகைப் புகழ்கின்றனர்; 'அப்பப்பா, உன் கண்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!' என்கின்றனர். இதற்கு அவர்களுக்கு உரிமை ஏது? ஆணுக்கு அவ்வளவு தைரியமா? அந்தப் பெண்கள் இதை அனுமதிக்கலாமா? இவை மனிதனின் மோசமான குணத்தை வளர்க்கின்றன, உயர்ந்த நோக்கங்க்களை அல்ல.

'நான் ஆண், நான் பெண்' என்னும் எண்ணங்களைவிட்டு, நாம் மனிதர்கள், அன்பு காட்டவும் உதவி புரியவும் பிறந்திருக்கிறோம் என்று நினைக்க வேண்டும்.

பெண்களைப் புறக்கணித்தது -- இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம்.

பாரத நாட்டில் இரு பெரும் பாவங்கள் உள்ளன - (1) பெண்களை மிதித்து நசுக்குதல், (2) ஜாதி ஜாதி என்று ஏழைகளைக் கசக்கிப் பிழிதல்.

அமெரிக்கர்கள் தங்க்கள் பெண்களை மதிக்கிறார்கள். அதனால்தான் சுகமாக, கற்றறிந்தவர்களாக, சுதந்திரர்களாக, ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். நாம் பெண்களை இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள், வெறுக்கத்தக்கவர்கள், தூய்மையற்றவர்கள் என்றெல்லாம் வசைபாடுகிறோம். விளைவு? நாம் மிருகங்க்களாக, அடிமைகளாக, முயற்சியற்றவர்களாக, ஏழைகளாக இருக்கிறோம்.

சக்தியில்லாமல் உலகிற்கு முன்னேற்றம் கிடையாது. நமது நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலமிழந்து கிடப்பது ஏன்?நம் நாட்டில் சக்தி அவமதிக்கப்படுவதுதான் காரணம்.

நன்றி: "எனது பாரதம் அமர பாரதம்" ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை.

Wednesday, December 26, 2012

ஹிந்து பண்டிகை நாட்கள்



அடுத்துவரும் ஆண்டுகளில் ஹிந்து பண்டிகை நாட்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழ்கண்ட லிங்கைக் கிளிக் செய்து பாருங்கள். உங்களுக்கு வேண்டிய பண்டிகைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் எப்போது வரும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நன்றி: திரு சி.ஆர்.சங்கரன், சென்னை.

http://www.hinduism.co.za/hindu.htm#Hindu%20Festivals2008

JAVANDHARAI

Dr.Kousalya standing near the wall


MARABU FOUNDATION (REGD)
( A Foundation to Promote Peace and Harmony Through Traditional Arts Literature and Education)
Jatavallabar House, 6/78 Thillaisthanam, Thanjavur - 613 203.
Phone No. 04362-260606


JAVANDHARAI – A TRADITIONAL KOLATTAM FESTIVAL

India, particularly Tamil Nadu, is rich in traditional art forms and the festivals connected with them which are slowly vanishing and some have already vanished.  One such festival is Kollatta javandharai. Kolattam is an art form played by striking two sticks, against each other, by holding one in each hand accompanied by Music. It is one art form which is prevalent all over India. Javandharai is a festival of Kolattam. There is a myth connected with the festival.
Once upon a time, a demon called Basavasura was torturing the people by beating them with sticks, in the form of a bull/cow. Bhooma Devi, the Goddess of Earth, Unable to bear the sufferings of the people, pleaded with Vishnu/Shiva. The Almighty ultimately killed him and at the time of his death, the asura realized his folly and received a boon. Accordingly, if innocent children assemble and perform Kolattam before his idol for a period on one mandala (48 days), the place should gain good showers of rain, a fruitful harvest and prosperity. Thus, the festival came into existence, with slight local variations in the southern districts of Tamilnadu, where agriculture is the principle occupation.

The Javandharai begins the day after Deepavali(new Moon day) and goes on for one Mandala(48 days). The local traditional potter moulds a clay idol of a cow and calf. It is received ceremoniously in a house. Seeds  different traditional grains are sown into 5 small pots so that they germinate and grow into healthy plants at the end of the festival, symbolizing fertility. It is called Paaligai or Mulaippaari. Girls below thirteen years of age  assemble everyday and perform Kolattam for traditional kolattam songs in front of the installed idol of Cow and calf. Children are invited to perform kolattam in the houses of the village and the ones nearby, where they are honoured. On the concluding day, all the children take  oil bath and in the evening, they are dressed in the traditional attire presented to them after which they go in a procession to the bank of Kaviri, performing kolattam. A small boy taking the installed idol, leads the procession accompanied by the entire village and the visitors. The idol is then immersed in the  river and the Paaligai is dissolved in the waters by the elderly ladies On their way back, Haarathi is performed before the houses. This will be followed by a grand communal feast.
The traditional festival was revived in our village after a gap of forty years in 1989 by our co-ordinator Dr. Rama. Kausalya, ex-principal, Thiruvaiyaru Music College. Now Marabu Foundation has been conducting this wonderful festival. This year, the javandharai began on November 16th which will conclude on 3rd January 2013. All the like minded fraternity are requested to patronize and extend their support in preserving this age old tradition and to participate in the concluding day function.


Contact Information

For further information please contact Dr. Rama Kausalya, Marabu Foundation, Jatavallabar House, 6/78, Thillaisthanam, Thanjavur Dt., 613 203. Phone: (04362) 260606 

            Dr.Rama Kousalya, in the midst of her students at Thillaisthanam

Tuesday, December 25, 2012

மகாகவி பாரதியாரின் 131ஆவது பிறந்த நாள் விழா

மகாகவி பாரதியின் கருத்துக்கள் எந்த காலத்துக்கும் பொருந்தும்.
                     தாமரை இதழ் ஆசிரியர் சி.மகேந்திரன் பேச்சு.

"மகாகவி பாரதியார் நூறு ஆண்டுகளுக்கும் முன்பு அன்றைய சமுதாயத்தையும், அரசியலையும் படம்பிடித்துக் காட்டிச் சென்றிருக்கிறார். அவை அன்றைய நிலைமைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துகிறது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஆடி மகிழ்ந்த பாரதி அந்தச் சுதந்திரத்தைப் பார்க்கமுடியவில்லை. ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகு நாம் பெற்ற சுதந்திரம் என்னவாயிற்று என்பதை அவன் பார்த்திருந்தால் அவன் மனம் என்ன வேதனைப்படும் என்பதை நினைக்க நம் மனம் பதறுகிறது."

"தாமரை" இதழின் ஆசிரியரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளருமான சி.மகேந்திரன் திருவையாறு பாரதி இயக்கம் கொண்டாடிய மகாகவி பாரதியார் 131ஆவது பிறந்த நாள், பாரதி இயக்கத்தின் 35ஆம் ஆண்டு நிறைவு விழாவில் இப்படிப் பேசினார். 

அவர் மேலும் பேசுகையில் 'நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்' என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாடிச் சென்ற பாரதி இன்று இருந்தால், இது நமக்கு உரிமையான நாடுதானா என்று அச்சப்பட்டிருப்பான். இங்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் அப்படிப்பட்ட அச்சத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் நமது நாட்டின் சின்னஞ்சிறிய கிராமங்களில்கூட வாரச்சந்தைகள் நடைபெற்று வந்திருக்கிறது. கிராமத்து மக்கள் உற்பத்தி செய்யும் தானியங்களையும், விளைபொருட்களையும், கால்நடைகளையும் கொண்டு விற்கவும், பண்டமாற்று செய்து கொள்ளவும் இத்தகைய சந்தைகள் பயன்பட்டன. இன்று அயல்நாட்டு பெரு வர்த்தக நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தில் நுழைந்து இங்கு சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பதோடு, அவர்கள் விற்கும் பொருட்களை விளைவிப்பது, அதற்கான நிலங்களை வாங்குவது, அங்கெல்லாம் தங்கள் தொழிலாளர்களை நியமிப்பது போன்ற செயல்களால் இந்திய நாட்டு வியாபாரம், விவசாயம், சிறு வியாபாரம் முதலியவற்றை பூண்டோடு அழிக்க முன்வந்திருக்கின்றனர். 

இந்திய நாட்டில் இயற்கை வளங்களை நவீன அறிவியல் நுட்பங்களால் கண்டறிந்து எங்கெங்கு அரியவகையான தாதுப்பொருட்கள் கிடைக்கின்றனவோ, அந்த நிலங்களையெல்லாம் மொத்தமாக வாங்கி, அங்கு குடியிருக்கும் பழங்குடி மக்கள், கிராம மக்கள் முதலியோரை இடம்பெயர வைத்து நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப் படுத்திவரும் கேட்டை நம் நாட்டு மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இப்படியே போனால் இந்தியா மீண்டும் அடிமைப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

'தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா, இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?' என்று சர்வேஸ்வரனிடம் முறையிட்டான் பாரதி. காரணம் தங்கள் குருதியையும், வியர்வையையும் சிந்திப் பெற்றது இந்தச் சுதந்திரப் பயிர். அதன் பெருமை தெரியாமல் மீண்டும் அதை அன்னியரிடம் அடகு வைக்கும் போக்கைக் கண்டு தேசபக்தி உடையவர்கள் வாய்மூடி இருக்க முடியுமா? இங்கு இளைஞர்களும், மாணவர்களும் கூடியிருக்கிறீர்கள். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இந்த நாடு மீண்டும் அடிமைப்பட்டுவிடாமல் காக்கும் பெரிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. அதனால்தான் இந்த இளைஞர்கள் கூடியிருக்கிற அவையில் நாம் எதிர்கொள்ளவிருக்கிற அபாயத்தைப் பற்றிச் சற்று விரிவாகக் கூறுகிறேன்.

பாரதி வாழ்ந்த காலத்தில், தமிழர்கள் பிழைப்பை நாடி பல அந்நிய தேசங்களுக்குக் குறிப்பாக தென்னாப்பிரிக்கா, மொரீஷஸ், பிஜித் தீவுகள், இலங்கை போன்றவிடங்களுக்கு கங்காணிகள் ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் சென்றனர். அங்கு சென்றால் தங்கக் கட்டியாக சம்பாதிக்கலாம் என்கிற ஆசையில் இவர்களும் அங்கெல்லாம் சென்று பட்ட துன்பங்களை பாரதி கவிதையில் வடித்துக் காட்டியிருக்கிறான். "கரும்புத் தோட்டத்திலே" எனும் பாடலில் பிஜித் தீவில் நம் தமிழ் மாதர் கால்களும் கைகளும் ஓய்ந்து வருந்துவதைச் சொல்லி, அவர்கள் விம்மி, விம்மி அழும் குரலை கேட்டிருப்பாய் காற்றே என்று கேட்டு கண்ணீர் வடிக்கிறார்.

நம் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டிய கடமை உங்களுக்கெல்லாம் இருக்கிறது. 'தேடிச்சோறு நிதம் தின்று, கூற்றுக்கு இரையெனப் பின் மாயும், வேடிக்கை மனிதர்களைப் போலன்றி' நீங்கள் உங்கள் உள்ளங்களில் ஒரு கனலை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. பாரதி எல்லா காலத்துக்கும் பொறுத்தமானவன் என்பதற்கு இன்றைக்கு நிலவும் சூழலே சாட்சி. 'மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?' என்றான் பாரதி. ஆனால் இன்று தமிழகத்தின் நெற்களஞ்சியம் நீரின்றி வாடும்படி தண்ணீர் கொடுக்க மறுப்பதும் மனிதர் உணவை பறிப்பது ஆகாதா? எங்கோ குடகில் பிறந்து, கேரளத்தின் வயநாட்டு தண்ணீருடன் கர்நாடகம் வழியாக தமிழகம் வரும் தண்ணீரை, கர்நாடகம் நமக்குத் தர மறுப்பது ஏன்? மத்திய அரசும், நீதிமன்றங்களும் தீர்ப்பளித்தும் அவற்றை மதிக்காமல் ஒரு மாநிலம் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது, இந்திய அரசியல் சட்டத்தை அவர்கள் மதிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இந்திய இறையாண்மைக்கே இது ஆபத்து அல்லவா?

நீங்கள் நடத்தும் இந்த இயக்கம் பாரதி இயக்கம். வெறும் சங்கமல்ல இதுவொரு இயக்கம். இந்த இயக்கம் நாடு முழுவதும் பரவ வேண்டும். இந்திய மக்கள் பரிபூரண சுதந்திரம் பெற்று மக்கள் ஒற்றுமையோடும், இறையாண்மைக்கு மதிப்பளித்தும், நாட்டு நலனைப் பேண வேண்டும்" என்று சி.மகேந்திரன் பேசினார்.

திருவையாறு பாரதி இயக்கம், தஞ்சை நியு டவுன் ரோட்டரி சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம் இவை இணைந்து மகாகவி பாரதியாரின் 131ஆவது பிறந்த நாள் மற்றும் பாரதி இயக்கத்தின் 35 ஆண்டு நிறைவிழாவினை திருவையாற்றில் கொண்டாடியது.

விழாவில் காலை கல்லூரி மாணவர்களின் ஆய்வரங்கம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை அளித்தார்கள். பிற்பகலில் இசைக்கல்லூரி மாணவியரின் இசையரங்கம் நடைபெற்றது.

நிறைவு விழாவிற்கு குறள்நெறிச் செல்வர் சி.நா.மீ.உபயதுல்லா தலைமை வகித்தார். குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பாரதி பவுண்டேஷன் அறங்காவலர் இரா.மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.

(பாரதி இயக்கம் திருவையாறு, பாரதி இலக்கியப் பயிலகம், நியுடவுன் ரோட்டரி சங்கம், ரோட்டரி சமுதாயக் குழுமம் ஆகியோர் சார்பில் நடந்த இந்த விழாவுக்கு சிங்கப்பூரில் வசிக்கும் கோ.ஆலாசியம் அளித்த நன்கொடையும் பயன்பட்டது)

Monday, December 24, 2012

"Why We Shout In Anger"


Never get angry or abusive or you'll regret it for the rest of your life.

"Why We Shout In Anger"

A Hindu saint who was visiting river Ganges to take bath found a group of family members on the banks, shouting in anger at each other. He turned to his disciples smiled 'n asked.

'Why do people shout in anger shout at each other?'

Disciples thought for a while, one of them said, 'Because we lose our calm, we shout.'

'But, why should you shout when the other person is just next to you? You can as well tell him what you have to say in a soft manner.' asked the saint

Disciples gave some other answers but none satisfied the other disciples.
Finally the saint explained, .

'When two people are angry at each other,
 their hearts distance a
 lot.
 To cover that distance they must shout to be able to hear each other. The angrier they are, the stronger they will have to shout to hear each other to cover that great distance.

What happens when two people fall in love? They don't shout at each other but talk softly, Because their hearts are very close. The distance between them is either nonexistent or very small...'

The saint continued, 'When they love each other even more, what happens? They do not speak, only whisper 'n they get even closer to each other in their love. Finally they even need not whisper, they only look at each other 'n that's all. That is how close two people are when they love each other.'

He looked at his disciples and said.

'So when you argue do not let your hearts get distant, Do not say words that distance each other more, Or else there will come a day when the distance is so great that you will not find the path
 to return.'
"Why We Shout In Anger"
A Hindu saint who was visiting river Ganges to take bath found a group of family members on thebanks, shouting in anger at each other
. He turned to his disciples smiled 'n asked.
'Why do people shout in anger shout at each other?'

Disciples thought for a while, one of them said, 'Because we lose our calm, we shout.'

'But, why should you shout when the other person is just next to you? You can as well tell him what you have to say in a soft manner.' asked the saint

Disciples gave some other answers but none satisfied the other disciples.
Finally the saint explained, .

'When two people are angry at each other, their hearts distance a lot. To cover that distance they must shout to be able to hear each other. The angrier they are, the stronger they will have to shout to hear each other to cover that great distance.

What happens when two people fall in love? They don't shout at each other but talk softly, Because their hearts are very close. The distance between them is either nonexistent or very small...'

The saint continued, 'When they love each other even more, what happens? They do not speak, only whisper 'n they get even closer to each other in their love. Finally they even need not whisper, they only look at each other 'n that's all. That is how close two people are when they love each other.'

He looked at his disciples and said.

'So when you argue do not let your hearts get distant, Do not say words that distance each other more, Or else there will come a day when the distance is so great that you will not find the path to return.'

Saturday, December 22, 2012

"தர்மாம்பாள் குறம்"


 திருவையாற்றில் அமைந்திருக்கும் அருள்மிகு ஐயாறப்பர் ஆலயம் சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கரிகால் பெருவளத்தான் எனும் சோழமன்னனுக்கு அகப்பேய் சித்தர் என்பவர் வழிகாட்ட அங்கு பூமியில் புதைந்து கிடந்த சிலாரூபங்களை எடுத்து இந்தக் கோயிலை எழுப்பித்தான் என்கிறது புராணம். மேலும் தொடர்ந்து பல காலங்களிலும் பல மன்னர்களும், செல்வந்தர்கலும் கோயிலை விரிவு படுத்தியிருக்கிறார்கள். சித்தரொருவர் ஸ்தாபனம் செய்த இந்தக் கோயிலின் மூலவர் ஐயாறப்பரின் லிங்க வடிவம் கல்லால் ஆனது அல்ல. அதனால் இந்த லிங்கத்துக்கு அபிஷேகம் கிடையாது. உத்ஸவருக்குத்தான் அபிஷேகம். புனுகு சட்டம் மட்டும் சாத்தப்படும். இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்துக்கு மேலுள்ள விமானத்தில் பல சித்தர்கலின் சிலாவடிவங்கள் இருக்கின்றன. உயிரோட்டமுள்ள இந்த சிற்பங்கள் சுதைவடிவிலானவை. இப்படிப்பட்ட பல அரிய சிறப்புக்களுள்ள இந்த ஆலயத்தின் குடமுழுக்கு 2013 பிப்ரவர் 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தருமையாதீன கட்டளை விசாரணை முனைவர் குமாரசாமி தம்பிரான் சுவாமிகளின் அரிய முயற்சியால் இந்த விழா சிறப்புற நடக்கவிருக்கிறது. இங்கு அம்பாளின் பெயர் தர்மசம்வர்த்தினி என்கிற அறம்வளர்த்தநாயகி. தர்மாம்பாள் எனவும் அழைப்பர். இந்த அம்மனின் பேரில் ஒரு குறம் பாடப்பட்டிருக்கிறது. குறவஞ்சி எனும் அமைப்பில் அமைந்த இந்தப் பாடலைப் பற்றி திருவையாறு இசைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தில்லைஸ்தானம் மரபு ஃபவுண்டேஷனின் முனைவர் ராம.கெளசல்யா எழுதி ஓம் சக்தி இதழின் ஒரு தீபாவளி மலரில் வெளியான ஒரு கட்டுரையையும் இப்போது தருகிறேன். இதனைப் படித்து இன்புறும் அன்பர்களுக்கு இந்த "தர்மாம்பாள் குறம்" நூலையும் விரவில் இந்தத் தளத்தில் வெளியிடுவேன். அன்பர்கள் அனைவரும் ஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு விழாவிற்கு வந்து பயன்பெறுமாறும், இவ்வூரின் ஸ்தல பெருமையை உணரவேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறேன். இனி கட்டுரையைப் படியுங்கள்.

             தர்மாம்பாள் குறம்
(ஓம் சக்தி இதழ் 2005ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
                                ஆசிரியர்: முனைவர் ராம. கெளசல்யா.

சமுதாயத்தின் சிந்தனைகளும் கொள்கைகளும் காலத்திற்கேற்ப மாறுகின்றன. இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி என்பர். ஆக, சமுதாயச் சிந்தனை மாற்றங்களுக்கு ஏற்ப மொழியும் காலந்தோறும் புதிய வடிவங்களை அளிக்கின்றது. அவ்வகையில், அரசர்களை யும் வள்ளல்களையும் மையப்படுத்தி நின்ற தமிழ் இலக்கியம் சாதாரண மக்களையும் மையப்படுத்தி எழத்தொடங்கியது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் குறம், குளுவ நாடகம், குறவஞ்சி, நொண்டி நாடகம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்கள் தமிழிலக்கிய உலகில் தோன்றிப் பிரபலமாயின.

தமிழ் மரபில் குறி பார்த்தல் சிறப்பிடம் பெறுகிறது. தலைவியிடம் வேறுபாடு காணப்பட, நற்றாயும், செவிலித்தாயும் கட்டு வைத்தும், கழங்கு வைத்தும் வெறியாட்டின் வாயிலாகக் குறி பார்த்து வேறுபாட்டிற்கான காரணத்தை அறிய முற்படுகின்றனர்.

"கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்" தொல்.கள.நூ.25: 3-4

குறுந்தொகை கட்டுவிச்சியை அகவன் மகள் என்கிறது. குறி பார்ப்பவள் கட்டுவிச்சி எனப்பட்டாள்.

"அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே" குறுந். பா. 23

மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சிநில மகளிர் குற மகளிர் எனப்பட்டனர். பன்னிரு பாட்டியல், குறத்திப் பாட்டு என்றதொரு இலக்கிய வகைக்கு இலக்கணம் தருகிறது.

"இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலமும்
திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே"

"குறத்திப் பாட்டும் அதனோடற்றே"

பத்துப் பாக்களால் அமையும் இக்குறத்திப் பாட்டிற்கு ஒரு சான்றுகூட இன்று கிடைக்கவில்லை.

கலம்பகத்து உறுப்பாகக் குறம் என்ற ஒன்று காணப்படுகிறது. குறத்தி குறி கூறுதல் தொடர்பான குறம், குறவஞ்சிகளில் இடம்பெறும் நிகழ்வுகளும் செயல்களும் இதில் உள்ளன.

குறவனை மையப்படுத்திக் குளுவ நாடகம் என்ற ஒன்றும் எழுந்தது. குறத்திப் பாட்டும் கலம்பகத்து உறுப்பாகிய குறமும் சேர்ந்து குறம் என்ற வடிவத்தையும், குறவன் குறித்த செய்திகளைத் தரும் குளுவ நாடகமும் குறமும் சேர்ந்து குறவஞ்சி என்ற வடிவத்தையும் அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குளுவ நாடகம் காலத்தில் பிற்பட்டது என்று கருதுவாரும் உண்டு. இவ்வகையில் மீனாட்சியம்மை குறம் முதல் குறமாகவும், கும்பேசர் குறவஞ்சி முதல் குறவஞ்சியாகவும் கருதப்படுகிறது.

ஏறத்தாழ பதினெட்டு குறங்களின் பெயர்கள் கிடைக்கின்றன. வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, குறவஞ்சி என்று குறிக்கப்பட்டாலும் குறமே ஆகும். கிடைக்கும் குறங்களுள் தர்மாம்பாள் குறம் பல்வகைச் சிறப்புகளையும், தனித்த கூறுகளையும் கொண்டதாக உள்ளது.

தர்மாம்பாள் குறம் வி.எஸ்.வாலாம்பாள் என்பவரால் இயற்றப்பட்டிருக்கிறது. இக்குறம் 1915இல் முதல் பதிப்பும், 1938இல் இரண்டாம் பதிப்பும், 1947இல் மூன்றாம் பதிப்புமாக மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இதிலிருந்தே இக்குறம் பரவலாகப் பாடப்பட்டு வழக்கிலிருந்ததை உணர முடிகிறது.

தர்மாம்பிகையே குறத்தியாக வந்து காவேரி அம்மனுக்குக் கடலரசனை அடைய அருளியதாக இக்குறம் அமைந்துள்ளது. கிளைக் கதையாக பஞ்சநதீசர் - தர்மாம்பிகை இணையும் கதையும் காணப்படுகிறது.

இக்குறம் கண்ணிகளாக அமைந்துள்ளது. நிகழ்வுகள் உட்தலைப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. திருவையாற்றுப் பகுதியில் இக்குறம் பெண்களால் தங்கள் நாள் வழிபாட்டில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களோடு பாடப்படுவதை இக்கட்டுரையாளர் கேட்டிருக்கிறார்.

அக்காலத்தில் இத்தகைய பாடல்கள் மெட்டுக்கள் என்று அழைக்கப்பட்ட இசையமைப்பு முறையாலேயே குறிக்கப்பட்டன. சான்று: ஆண்டிப்பண்டாரம் மெட்டு, பாம்பாட்டி மெட்டு, ஆறுமுக வடிவேலவனே மெட்டு. இவை ஆழ்ந்த இசை ஞானம் இல்லாதவர்களையும் எளிமையாகப் பாடவைத்தன.

இக்குறத்தில், மூன்று மெட்டுக்கள் குறிக்கப்பட்டாலும், அவை எந்த மெட்டு என்று குறிக்கப்படாததால் பாடுபவர்களே மெட்டுக்களைப் பாடல்கலின் அமைப்பிற்கேற்ப உணர்ந்து பாடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒருவகையான ஓதும் (RECITATION) முறையிலும் இவை பாடப்பெற்றன. அந்த ஊர் குடும்பத்துப் பேச்சு நடை இக்குறம் முழுவதும் விரவி வருவதைக் காணமுடிகிறது.

கடவுள் வணக்கத்துடன் தர்மாம்பாள் குறம் தொடங்குகிறது. கணபதி, சரசுவதி, ஆறுமுகவேலவன் ஆகியோர் வேண்டப் படுகிறார்கள். லோபாமுத்திரை காவேரி நதியாகி, அகத்தியரைப் பிரிந்து சஹ்யமலையில் பிறந்து சமுத்திரருக்கு மாலையிட வருகிறாள். குடகு மலையிலிருந்து ஐயாறு வரை அவள் வரும் அழகு ஒரு சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அமராவதி, பவானி, லட்சுமணா, ஹேமவதி, காஞ்சனா என்னும் தோழிகளைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு வருகிறாள்.

".............................................................................
உயர்ந்துவரும் நுரையழகும் உத்ஸாகக் கொந்தளிப்பும்
பெருகியந்தக் காவேரிநதி அலைமோத வந்துவிட்டாள்
குயில்கூவி குதூகலிக்க குளிர்ந்தகாற்று வீசிவர
சோனைதூரத் தென்றல்வீச சிறந்தநதி யாகவந்தாள்
கனத்தசெடி குடிசைகளும் காட்டுமிருகம் பலவகையும்
வாழையுடன் கமுகுதென்னை வாரிக்கொண்டு வந்துவிட்டாள்
............................................................................
வயல்களெல்லாம் நிரப்பிக் கொண்டு வேகமாக வந்துவிட்டாள்
அறம்வளர்த்தாள் படித்துறைக்கு ஐந்துமுகத்தோடு வந்தாள்."

காவேரி திருவையாற்றுக்கு வந்த செய்தியை ஆட்கொண்டார் அம்பிகைக்கு அற்விக்கிறார். அம்பிகை, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்களைத் தட்டினில் வைத்துக் காணிக்கையாக அளித்து, காவேரியை வரவேற்கிறாள். காணிக்கையைப் பெற்றுக் கொண்ட காவேரி, அம்பிகையை வணங்கி, தான் சமுத்திரரை அடைய மகிழ்ச்சியுடன் வழியனுப்பும்படி வேண்டுகிறாள்.

கல்யாணி தேவியோ, "சமுத்திரரை இங்கேயே வரவழைக்கிறேன்; மகிழ்ச்சியுடன் இருப்பாய்" என்று கூறுகிறாள். அதைக் கேட்டுக் கலங்கும் காவேரி, உடலை அங்கு வைத்துவிட்டு, சாட்சியாக ஓர் உருவம் எடுத்துக் கொண்டு கடலை நோக்கிச் செல்கிறாள். சமுத்திரரோ அம்மனின் கட்டளைப்படி, பாதாளத்தில் மறைந்து கொண்டு ஊரின் நடுவே வருகிறார். மகிழ்ச்சியுடன் வந்தால் உலகமெல்லாம் மூழ்கிவிடுமாம். சப்தஸ்தான சுவாமிகளும் வரவேற்று அளித்த மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு சமுத்திரரும் போய் மறைந்து விடுகிறார்.

சாட்சி என்னும் காவேரி கடலில் போய்த் தேட, அங்கு சமுத்திரர் இல்லை. திரும்பி வந்த காவேரி மனம் தளர்ந்து சமுத்திரரை அடைய வேண்டி, தர்மாம்பிகையை நினைத்து திருவையாற்றில் கன்னிகையாகத் தவம் இருக்கிறாள். அறம்வளர்த்தாள் அவளைப் பரிகசிக்கக் குறத்தி வடிவம் எடுக்கிறாள்.

குறத்தியாகிய தர்மாம்பிகை அணிந்துள்ள நகைகள் பாதாதி கேசம் வரை வருணிக்கப்படுகின்றன. அவள் அழகும் உருவ வருணனையும் சரளமாக வருகின்றன. ஐயாற்று வீதியில் வரும் குறத்தியிடம் ஊர்ப்பெண்கள் குறி கேட்கிறார்கள். மருந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு இங்கிதமாகக் குறிகள் சொல்லிவிட்டு ஆலயம் சென்று கைலாசநாதரைத் தரிசித்து வந்து பின் குறிகள் சொல்வதாகக் கூறி, ஆலயத்திற்குச் செல்கிறாள். சுவாமி சந்நதித் தூணில் சாய்ந்து அமர்ந்திருக்கும் குறத்தியின் அழகைக் கண்டு பிரமித்த காமனை நீராய் எரித்த சிவன் அவள் மீது மோகம் கொள்கிறார்.

தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு (இந்த வர்ணனையும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளது) குறத்தியிடம் வருகிறார்; அவள் யார் என்று வினவுகிறார். அவள் விவரிக்கிறாள்.

"..............................................................................
ஜாடியும் நான் குறச்சாதி தனிவழியும் வருவோம் நாங்கள்
சாம்ப பரமேசருக்கும் சம்பந்தங்களுண்டு
அப்பன் ஆயிஎன்னை அம்பிகையென் றழைப்பார்
என் அண்ணன் பெயர் சக்ரபாணி ஆறுமுகனென் பிள்ளை
குச்சுக்குக் காவலாயென் கிழவனாரும் இருப்பார்
கூடைமுறம் கட்டிநாங்கள் குறிபார்த்துச் சொல்வோம்
........................................................"

"உன் கணவன் கிழவனென்று சொன்னாயே, கந்தருவன் போன்ற நானே உன் அழகுக்கு ஏற்றவன்" என்று கம்பீரமாகச் சொல்கிறார். அவள் சினந்து இதனை மறுக்கிறாள். தன்னுடைய வளமான வாழ்க்கையை விவரித்து,

"இதைக் கேட்டல் என் கணவன் ஈட்டியினாலே குத்தி என்னை இழுத்தெரிவார்,
ஆசைபெரி தென்று சொல்லி உம்மை நானுமடைந்தால்
அறம் வளர்த்த நாயகியும் அக்கினியால் தகிப்பாள்"

என்று கூறுகிறாள். பிறகு குறத்தி தன் பெருமைகளையும், மலை வளத்தையும், நாட்டு வளத்தையும் ஈசருக்கு உரைக்கிறாள். இவற்றைக் கேட்கும் சரசுவதியும் லெட்சுமியும் காவேரியிடம் கூற, அவள் சகியை அனுப்பி, குறத்தியை அழைத்து வரச் செய்கிறாள். அதன்படியே குறத்தி திருக்காவேரிக் கரைக்கு வருகிறாள். காவேரியும் குறத்தியின் அழகைக் கண்டு திகைத்துப் போகிறாள். அவளுக்குக் குறி சொல்கிறாள் குறத்தி. அவள் யார் என்பதைக் கூறிவிட்டு, அவள் சமுத்திரரை அடைவாள் என்றும் கூறுகிறாள். மாதந்தோறும் காவேரியின் நிலை எப்படி மாறுகிறது? இதோ:

"மார்கழி மாதத்தினில் மணல் மேடு இடுவாய்
மடுக்களிலும் ஜலம் வற்றி வெகு நாற்றம் நாறும்
ஆற்றின் ஜலம் வற்றிவிட அனைவர்களுந்தவித்து
ஊற்றின் ஜலந்தனையெடுத்து உலகிலுள்ளோர் உழல்வார்
வைகாசி வஸந்தகாலம் வருவாய் வெள்ளம் பெருகி
வையகத்து மனிதரெல்லாம் முழுகிக் கதிபெறுவார்
ஆடிமாதம் பெருக்கெடுத்து அணைகரையில் போட்டால்
அப்போது நீயும் சமுத்திரரை அடைந்து மனமகிழ்வாய்!"

அவள் குறி சொல்லும் நேர்த்தியையும் அவள் முகத்தையும் கண்ட சங்கரர் தன்னை அடையும்படி கேட்கிறார். குறத்திச் சீறிச் சினக்கிறாள். அவள் துடுக்கான வார்த்தைகளைக் கேட்ட சிவசங்கரர் பார்வதிதான் வந்தாளோ என்று சுற்றுமுற்றும் பார்க்கிறார். அம்பிகையைத் தேடுகிறார்கள். அவளை எங்கும் காணாமல் சங்கரர் புலம்பி அழுகிறார். எல்லோரும் சுந்தரி சுந்தரி என்று அனற்றுகிறார்கள்.

சரசுவதியும் லெட்சுமியும் குறத்தியிடம் ஓடிச் சென்று சங்கரியாளை அழைத்துத் தரும்படி கேட்கிறார்கள். அவையிலுள்ளோர் ஏக்கமும் சங்கரர் வாட்டமும் கண்டு இரங்கி குறத்தி, சங்கரர் கரத்தைப் பிடித்து அவர்தம் அரிய செயல்களைக் கேலியாகக் குறி சொல்கிறாள்.

அவள் பரிகசித்துக் கூறக் கேட்ட மகாதேவர் குறத்தியைக் கண்டு இச்சைப் பட்டது தவறு என்று உணர்ந்து கொள்கிறார். சங்கரரின் வாட்டம் கண்ட சங்கரி தன்னை வெளிப்படுத்தி இறைவன் அடி பணிகிறாள். பலி ஸ்ருதி, மங்களத்துடன் தர்மாம்பிகை குறம் நிறைவு பெறுகிறது.

Courtesy:  Om Sakthi Magazine and Dr.Rama Kousalya.

சித்தக்கடல்


சித்தக்கடல்

மகாகவி பாரதியார் 1915இல் "சித்தக்கடல்" எனும் சிறு நூலில் 1915 ஜூலை 1ஆம் தேதி என்று தேதியிட்டுக் கீழ்வருமாறு எழுதுகிறார்.

"இந்த மனமாகிய கடலை வென்றுவிடுவேன். பல நாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த மனத்தை வெல்ல நான் படும் பாடு தேவர்களுக்குத்தான் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வ பக்திக் குறைவு, கர்வம், மமதை, சோர்வு முதலிய சம்ஸ்காரங்கள் மிகுதிப்பட்டிருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட வேண்டும்.

'சலோ! தெய்வமுண்டு. அது அறிவு மயம். அந்த அறிவுக் கடலில் நான் என்பது ஒரு திவலை. அதற்கும் எனக்கும் ஒரு குழாய் வைத்திருக்கிறது. அந்தக் குழாயை அஹங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அஹங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ சக்தியும் தெய்வ ஞானமும் எனக்கு உண்டாகும்."
----

புகையிலைச் சாற்றினால் தலை குறுக்கிறது. 20 தரம் புகையிலையை நிறுத்தி விடுவதாக ப்ரதிக்கினை செய்திருக்கிறேன். இதுவரை கைகூடவில்லை. ஸம்ஸ்காரம் எந்தனை பெரிய விலங்கு பார்த்தாயா? மகனே, ஸம்ஸ்காரங்களைச் சக்தியினால் வென்றுவிடு.
----

உடல் படுத்துக் கொண்டது. உடலை வைரம் போல இலாகவமுடையதாகவும், சிங்கத்தைப் போல வலியுடையதாகவும் செய்ய வேணும். உடனே வசப்படாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கை பெருந்துன்பந்தான். உடம்பே! எழுந்து உட்காரு. உடம்பு எழுந்துவிட்டது. முதுகு கூனுகிறது. அந்த வழக்கத்தைத் தொலைத்துவிட வேண்டும்.
----

வயிறு வேதனை செய்கிறது. உஷ்ண மிகுதியால், நோயற்று இருப்பதற்குச் சக்தியை ஓயாமல் வேண்டிக்கொள். நோயில்லையென்று மனத்தை உறுதி செய். மனம் போல் உடல்.
----

மகனே! உடல் வெற்றி கொள். அது எப்பொழுதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம். நீ தேவன். அது யந்திரம், நீ யந்திரி.

ஜூலை 2.

வியாதி பயம், சோம்பர். இன்று காலைப் பொழுதையும் இவை வந்து வீணாக்கிவிட்டன. செ... வழக்கம்போல் வந்தான். பரமேஸ்வரி, மகாசக்தி - உன்னிடத்தில் அமரத்தன்மை கேட்கிறேன். என்னை மனக்கவலையிலிருந்து விடுவிக்க வேண்டும். உன்னை எப்போதும் சிந்தனை செய்து கொண்டும், உனது மஹா அற்புதமான உலகத்தை எப்போதும் கண்டு தீரா மகிழ்ச்சியடைந்து கொண்டும், தர்மங்களை இடைவிடாமல் நடத்திக் கொண்டும் வருந்திறமை எனக்கு அருள் செய்ய வேண்டும்.

மனமாகிய குரங்கு செய்வதையெல்லாம் எழுதிக்கொண்டு போனால் காலக்கிரமத்தில் அதை வசப்படுத்தி விடலாம் என்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்கு முன்பாக அதன் இயல்புகளையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்த முடியாது. சித்தத்தை வசப்படுத்துமுன் சித்தந்தை அறிய வேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வன்ஹால் அதன் தன்மை முழுவதையும் அறிய ஹேதுவுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம்.

பராசக்தீ! ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மையில்லாமலும் வஞ்சகமில்லாமலும் எழுதுவதற்கு எனக்குத் தைரியம் கொடுக்க வேண்டும்.

நாம் எழுதுவதைப் பிறர் பார்க்க நேரிடும் என்று கருதி நமது துர்ப்பலங்களை எழுத லஜ்ஜை உண்டாகிறது. பராசக்தீ! என் மனத்தில் அந்த லஜ்ஜையை நீக்கிவிட வேண்டும்.

பாரதியினுடைய மனநடைகளை எழுதப் போகிறேன். நான் வேறு, அவன் வேறு. நான் தூய அறிவு. அவன் ஆணவத்தில் கட்டுண்ட சிறு ஜந்து. அவனை எனக்கு வசப்படுத்தி நேராக்கப் போகிறேன். அவனுடைய குறைகளை எழுத அவன் லஜ்ஜைப்படுகிறான். அந்த லஜ்ஜையை நான் பொருட்டாகாதபடி அருள் செய்ய வேண்டும்.

எழுது. பராசக்தியின் புகழ்ச்சிகளை எழுது. அடா! பாரதீ, அதைக்காட்டிலும் உயர்ந்த தொழில் இவ்வுலகத்தில் வேறொன்று இல்லை. பராசக்தி வாழ்க. அவள் இந்த அகில உலகத்துக்கு ஆதாரம். அகிலம் நமக்கு மூன்று வகையாகத் தெரிகிறது. -- ஜடம், உயிர், அறிவு என இவை தம்முட் கலந்தன. அறிவுலகத்திலே பல படிகள் இருப்பதாக யோகிகள் நிச்சயித்திருக்கிறார்கள்.

இவற்றுள் ஜடத்துக்கு உயிரும், உயிருக்கு அறிவும் காரணமாமென்று யோகிகள் சொல்லுகிறார்கள்.

இவை அனைத்திற்கும் மூலப் பொருளாய், இவையனைத்தையும் தனது உறுப்புக்களாகக் கொண்டு, இவையனைத்தும் தானாய், இவையனைத்தின் உயிர்நிலையாக ஒரு பொருள் உண்டு. அதனை மஹாசக்தி என்கிறோம். அதை இடைவிடாமல் தியானம் செய்வதால் உனது குறைகள் எல்லாம் நீங்கும். பெரிய பொருளை இடைவிடாது பாவனை செய்யும் அறிவுதான் பெருமையடைகிறது.

சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தீயை த்யானம் செய்யுமானால் அவளுடைய சாயை இதிலே படும். அதிலே சுகமுண்டு. ----


பத்திரிகைகளுக்கு வியாஸங்கள் எழுதவேண்டும், கடிதங்கள் எழுதவேண்டு. சோம்பர் உதவாது. வெற்றிலை போடுவதைக் குறைக்க வேண்டும். பணமில்லாததைப் பற்றிக் கவலைப் படலாமா? மூடா, மூடா, மூடா, நாம் சுத்த அறிவில்லையா? உலக வ்யவஹாரங்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆணவக் காட்டிலே அகப்பட்ட சித்தத்தின் விருப்பப்படி இந்த உலகில் ஏதாவது நடக்கிறதா? சாகாத ஜந்து உண்டா? எல்லா ஜந்துக்களும் உயிரை ஓயாமல் காக்கின்றன. அதில் பயனுண்டா? உயிரே ஜீவனுடைய வசமில்லாதபோது வேறெதைப் பற்றிக் கவலைப்படுவதிலேயும் என்ன பயன்? பராசக்தியின் கட்டளைப்படி உலகம் நடக்கிறது. உனக்கு வேண்டிய இன்பங்களை அவளிடம் வேண்டிக் கொள். அவல் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு சுகமாக இரு.

எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப்போய்விடும்.

"உத்யோகினம் புருஷஸிம்ஹ முபைதி லக்ஷ்மீ"

பராசக்தியைத் தியானம் செய்து கொண்டேயிருந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும். உடலும் உயிரும் ஒளி பெற்று வாழும். நூறு வயதுக்குக் குறைவில்லை. இது ஸத்தியம். நூறு வயது நிச்சயமாக வாழ்வாய். மனிதனுக்கு இயற்கையிலே நூறாண்டு ஏற்பட்டது. இயற்கை தவறாமல், மூடக் கவலைகளில்லாமல் இருந்தால் நூறு வயது அவசியம் வாழலாம். மகனே! அச்சத்தைப் போக்கு.

மண்ணையும், காற்றையும், கடலையும் எத்தனை யுகங்கள் ஒரே வடிவத்தில் வைத்துக் காப்பாற்றுகிறாய்? பராசக்தீ, எனது கருவிகரணங்களிலே நீ பரிபூரணமாக ஸந்நிதி கொண்டு என்னையும் அங்ஙனமே காக்க வேண்டும்.

இன்பமில்லையா?

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆத்மா நீ.

உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக்கூடாதா?

முதலாவது எனக்கு என்மீது வெற்றி வரவேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாகிவிட்டது. இரண்டு மாதகாலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழு துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை. இருவருக்கும் எப்போதும் சஞ்சலம், பய, பயம், பயம்! சக்தி உன்னை நம்பித்தான் இருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினாய், உன்னை வாழ்த்துகிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம் -- தீராத குழப்பம். எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா? கடன்கள் எல்லாம் தீர்ந்து தொல்லையில்லாதபடி எனது குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச்சிவப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும்.

தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?

மனைவியைப் பிரிந்து செல்லும்படி சொல்லுவதில் பயனில்லை. அவளும் உன் சரணையே நம்பி, என்னுடன் எப்போதும் வாழ்ந்துகொண்டு, உனது தொழும்பிலே கிடைக்கும் புகழில் பங்கு பெற்று மேன்மையுற விரும்புகிறாள்.இயன்றவரை உண்மையோடுதான் இருக்கிறாள். அவளையும் நீ சம்ரக்ஷணை செய்ய வேண்டும்.

அவளுக்கு நோயின்மை, கல்வி, கவலையின்மை, பக்தி, ஞானம் முதலிய சோபனங்களெல்லாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

குழந்தையை உனது குழந்தையாகக் கருதி, இவ்வுலகில் நீடித்துப் புகழுடன் வாழும்படி திருவருள் செய்ய வேண்டும். காசியிலிருக்கும் குழந்தையையும் நீதான் காப்பாற்ற வேண்டும்.

எனது க்டும்ப பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சி புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது. தாயே! ஸம்மதந்தானா?

மஹாசக்தீ! என்னுள்ளத்தில் எப்போதும் வற்றாத கவிதையூற்று ஏற்படுத்திக் கொடு.

ஓயாமல் வியாதி பயங்கொண்டு உளைகின்ற நெஞ்சமே! தூ! தூ! தூ! கோழை!

புகையிலை வழக்கம் தொலைந்துவிட்டது, பராசக்தியின் அருளால். இனிக் 'கஸரத்' வழக்கம் ஏற்பட வேணும். நெஞ்சு விரிந்து, திரண்டு, வலிமையுடையதாக வேணும். இரத்தம் மாசு தீர்ந்து, நோயின்றி, நன்றாக ஓடி, உடலை நன்கு காத்துக் கொண்டிருக்க வேணும் - பராசக்தியின் அருளால்.

செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது? பொய் வாயிதா, பொய் வாய்தா, பொய் வாய்தா - தினம் இந்தக் கொடுமைதானா? சீச்சீ!

மஹாசக்தீ, நீயிருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம் - சரி! இப்போது உன்னை வையமாட்டேன். என்னைக் காப்பாற்று, உன்னைப் போற்றுகிறேன்.

பிறருக்கு நான் தீங்கு நினையாதபடி நீ அருள் புரிந்தால் நல்லது. துஷ்டர்களைக்குட நீ தண்டனை செய்து கொள். எனக்கு அதிலே சந்தோஷமில்லை. எனக்குப் பிறர் செய்யும் தீங்குகளை நீ தவிர்க்க வேண்டும். நான் உன்னையே சரணடைகிறேன்.

சொல்லு! மனமே, சொல்லு, பராசக்தி
வெல்க, பராசக்தி வெல்க!
----



Wednesday, December 19, 2012

பேசித் தீர்த்துக் கொள்ளலாம்


நாவடக்கம்

நம்முள் பல பிரச்சனைகள் தோன்றுவதற்கு நம்முடைய பேச்சே காரணம். அவசியத்துக்கு மட்டும் பேசினால் போதாதா? சிலருக்கு எப்போதும் யாரிடமாவது ஏதாவது பேச வேண்டுமென்கிற அரிப்பு. அப்படி பேசுவதும் அறிவு பூர்வமாகவும், அவசியமானதாகவும் இருந்தால் நன்று. இல்லாவிட்டால் தீது. இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையானாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர். அரசியல் கட்சியார் நாங்கள் விவாதத்திற்குத் தயார் என்கின்றனர். ஒரு பிரச்சினையைப் பேசிப் பேசித் தீர்க்க முடியுமானால் உலகில் எந்தப் பிரச்சினையும் பூதாகாரமாக வளர வாய்ப்பில்லையே. வாசாலகத்தால் பேசியே பிறரை மடக்கி விட முடியும், அவர்களுடைய நியாயமான கருத்துக்களைக் கூட பொசுக்கி விட முடியும் என நினைப்பவர் பலர். இந்த விவாதம் அதாவது "தர்க்கம்" குறித்து பாரதி சொல்வதைப் பார்ப்போம்.

"விரைந்து கேட்க; மெல்லச் செல்லுக" (இது பைபிள் வாசகம்)

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்: "பிறர் குணதோஷங்களைப் பற்றித் தர்க்கிப்பதிலே பொழுது செலவிடுவோன், பொழுதை வீணே கழிக்கிறான். தன்னைப் பற்றி சிந்தனை செய்தாற் பயனுண்டு. ஈசனைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. பிறரைப் பற்றி யோசித்தல் வீண்."

'ஹெர்மஸ்' என்ற புராதன மிசிர (எகிப்து தேசம்) ஞானி: "மகனே! விவாதத்தில் நேரங்கழித்தல் நிழலுடன் போராடுவதற்கு நிகராகும்."

'ஸொக்ராதெஸ்' (சாக்ரடீஸ்) என்ற கிரேக்க ஞானி: "அறியாதார் பேச்சை நிறுத்தினாற் கலகமில்லை"

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்: "வாதாடுவதனால் பிறன் தனது பிழைகளை அறிந்துகொள்ளும்படி செய்ய முடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும்போது, அவனவன் பிழைகளை அவனவன் தெரிந்து கொள்வான்."

திருவள்ளுவர்: "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு."

"பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றாதவர்."

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!


                                அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

மனிதருக்குள்தான் அன்பு தழைக்க வேண்டுமா? இந்த குழந்தையிடம் அந்த உராங் உடாங் எனும் குரங்குக் குட்டிக்குத்தான் எத்தனை அன்பு. ஐந்தறிவுள்ள அந்த குட்டிக் குரங்குக்குள்ள அன்பு மனிதருக்குள் இருந்திருந்தால் டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடூரம் நடந்திருக்குமா? உயிர்களிடம் அன்பு வேணும், அது வாழும் முறைமையடி பாப்பா என்று நம் பாரதி சொன்னதை மனதில் கொண்டால் கொடுமைகள் அரங்கேறுமா?


Sunday, December 16, 2012

வாழ்வு ஓர் கனவு!

வாழ்வு ஓர் கனவு!

"உலகெலாமோர் பெருங்கனவு அஃதுளே
     உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
 கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
     கனவினும் கனவாகும் இதனிடை
 சிலதினங்கள் உயிர்க்கு அமுதாகிய‌
     செப்புதற்கரிதாக மயக்குமால்
 திலத வாணுதலார் தரு மையலாம்
     தெய்விகக் கனவன்னது வாழ்வே."

பாரதியின் இந்தக் கருத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது பட்டினத்தாரின் பாடல்: "பொய்யாய் பழங்கதையாய் மெல்லப் போனதுவே".

காந்திமதிநாதரும் மகாகவியும்


                                           காந்திமதிநாதரும்   மகாகவியும்

எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்பார் தமிழ்ப் புலவர். பாரதியினும் வயதில் மூத்தவர். மன்னர் அவையில் பாரதியின் புலமையைச் சோதித்துக் கொண்டு அவரை ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னார்கள். காந்திமதிநாதன் "பாரதி சின்னப் பயல் ," எனும் ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்திருக்கிறது. பாரதி உடனே பாடினார்.

"ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்
 ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் ‍ மாண்பற்ற‌
 காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
 பாரதி சின்னப் பயல்"

"காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப் பயல்" எனும் பொருள்படும்படி அமைந்தது இந்தப் பாடல். உடனே வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடி பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?

"ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
 ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற‌
 காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
 பாரதி சின்னப் பயல்"

வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். அதுதான் பண்பாடு.

வயதில் மூத்த காந்திமதிநாதனை பாரதி அவமதித்து அவரைச் சின்னப் பயல் என்று பாடிவிட்டார் எனும் செய்தியை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்கள், உடனே அவன் மாற்றிப் பாடி அவரைப் பெருமைப் படுத்தியதையும் எடுத்துரைக்க வேண்டும்.

beautiful Lie and a painful Truth

Death asked Life :Why does everyone love you and hate me.

Life replied :Because I am a beautiful Lie and you are a painful Truth

Wednesday, December 12, 2012

மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா



            திருவையாறு பாரதி இயக்கம் -  பாரதி இலக்கியப் பயிலகம்
                                                                         நடத்தும்
                                        மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா
                         திருவையாறு பாரதி இயக்கத்தின் 35ஆம் ஆண்டு விழா

அன்புடையீர்!
வணக்கம். மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டியும், திருவையாறு பாரதி இயக்க 35ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான மாணவர் கருத்தரங்கம் திருவையாற்றில் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் படிப்பதற்கு கீழ்கண்ட தலைப்புகளில் ஏதாவதொன்றில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவற்றிலிருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை எழுதியவர்களே விழாவில் கலந்து கொண்டு படிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படாத மற்ற கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவ மாணவியர் பெருமளவில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

                                                 கட்டுரைத் தலைப்புகள்:-
                      1. மகாகவி பாரதியாரின் நிறைவேறாத ஆசைகள்.
                      2. மகாகவி பாரதியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள்
                      3. மகாகவி பாரதியாரின் மரபும் புரட்சியும்
                      4. மகாகவி பாரதியாரின் இசைக் கோட்பாடுகள்


                                                கருத்தரங்க நிகழ்வுகள்
         இடம்: திருவையாறு அரசர் கல்லூரி வளாகம், திருவையாறு.
   தலைமை: திரு ஆராவமுதன், முதல்வர், அரசர் கல்லூரி, திருவையாறு
                       நேரம்: காலை 10-00 மணி முதல் 4-00 மணி வரை.
                                      நிறைவு விழா: மாலை 4-00 மணிக்கு.

                                        சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை:
           முனைவர் இரா. காமராசு, எம்.ஏ.,பி.எட்.,எம்.பிஃல்.,பி.எச்.டி.,
              தமிழிலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

                           பாரதி இயக்கத்தின் 35ஆம் ஆண்டு விழா 
       இடம்: சரஸ்வதி அம்பாள் பள்ளி, மேட்டுத் தெரு, திருவையாறு.
             நாள்: 25-12-2012 செவ்வாய்க்கிழமை மாலை 4-00 மணி.
                                            சிறப்புச் சொற்பொழிவு:
                                              திரு சி.மகேந்திரன்,
                                                                   "Thamarai" Editor, Chennai.



உன் பெயர் சொல்லி வாழ்வோம்!

11-12-2012 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் வானவில் பண்பாட்டு இயக்கத்தார் நடத்திய மூன்று நாள் பாரதி விழாவில், அப்போதே சொல்லி கவிபாட வைத்தனர். அப்போது நான் எழுதி வாசித்த கவிதை (?) இது. பிழை இருந்தால் பொருத்தருள்க!


                                        உன் பெயர் சொல்லி வாழ்வோம்!

எட்டப்பன் செய்த துரோகச் செயலுக்கு
ஈடுசெய்ய நினைத்தானோ இறைவன் இன்று!
கரிசல்மண் நிறைந்த தென்பாண்டிபூமியிலே, பாரதி!
பெருமைமிகு குடியிலே உன்னைப் பிறக்கவைத்தான்! 1.

அச்சமில்லை என்றுசொல்லி மனத்துள் அச்சம்நீக்கி
இச்சைமிகு வாழ்க்கைமுறை அறவே நீக்கி
உச்சியிலே விடுதலையின் விதை விதைத்து
அச்சமின்றி தலை நிமிர்ந்து வாழவைத்தாய்! 2.

காலனை அழைத்துச் சற்றேமிதிப்பேன் என்றாய்!
காளியிடம் சென்றென்னைச் சோற்றுக்கு அலையவிட்டால்
பாடவே மாட்டேனுன்னை, நாத்திகனாய்விடுவேன் என்று
சூளுரைத்த உந்திறத்தை என்னவென்று நானுரைப்பேன்! 3.

என்ன அவசரமோ? இளமையிலே மாண்டுபோனாய்!
அந்தணனாம் சங்கரனும், அயோத்தியின் இராமபிரான்
கண்ணபிரான் முதலான அனைவருமே மாண்டபோதும்
நான்மட்டும் சாகாமல் இருந்திடுவேன் என்றாய்! 4.

தேடிதினம் சோறுதின்று ஒயாமல் சுகத்தை நாடும்
வேடிக்கை மனிதர்களின் முகத்திரையை நீகிழித்தாய்!
சின்னஞ்சிறு கதைகள்பேசி துன்பத்தைப் பிறர்க்குத் தந்து
கூற்றுக்கு இரையாகப் போவோரைச் சாடுகின்றாய்! 5.

பிறர்துன்பங் கண்டுமனம் வாடுபவன் புண்ணியனாம்
ஊருக்கு உழைத்திடுதல் யோகத்தின்பாங்கு என்றாய்,
ஊர்நன்மை நாடுவதே யாகம்எனச் சொல்லியென்றன்
வேருக்கு நீர்வார்த்த வழிகாட்டி நீயன்றோ? 6.

குப்பையிலே குருக்கத்திப் பூமலர்ந்தார்ப் போல்
கெளரவர் குலத்துதித்த விதுரன் பெருமைசொல்லி
ஏச்சாலும், இழிவாலுமவன் நிலைகுலையா குணம்சொல்லி,
ஏற்றமிகு நீதியை உலகுக்கு எடுத்துரைத்தாய்! 7

நரம்பெல்லாம் முறுக்கேற மனத்துள் உரமூட்டி
எரிதழலால் உள்ளத்து தீமையெல்லாம் எரித்திட்டாய்
ஊருக்கு நல்லவையும் உண்மையையும் எடுத்துச்சொன்னாய்
பேருக்கு வாழாமல், பாரதியே! பார்வாழ வாழ்ந்திட்டாய்! 8.

வாழ்க நீயே!

தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.















Tuesday, December 11, 2012

பாரதி பதினாறு!

இன்று மஹாகவி பிறந்த நாள்! அவர் ஆசியைக்கோரி..........

                     பாரதி பதினாறு!

”கவிதை மேதை” பார்புகழ் பாரதி
கருணை வடிவாய் நிற்பவன் பாரதி!

’கவிதா மூர்த்தி’யாய்ச் சிறந்தவர் பாரதி
கவிஞர்க்குப் பாதை வகுத்தவர் பாரதி!

காந்தியைக் குருவாய்க் கொண்டவர் பாரதி
காலத்தைக்  கடந்து நிற்பவர் பாரதி!

பற்பல மொழிகள் பயின்றவன் பாரதி
சொற்களால் உலகை வென்றவன் பாரதி!

எதிர்வரும் காலம் கண்டவன் பாரதி
என்றும் மனத்தில் அமர்ந்தவன் பாரதி!

கற்பனை வளத்தில் சிறந்தவன் பாரதி
மனிதனை நன்றாய் அறிந்தவன் பாரதி!

கவிதை வானில் மறையா பாரதி
மக்கள் எவரும் மறவா பாரதி!

அகிலம் அனைத்தும் உணர்ந்தவன் பாரதி
உலகில் அனைவரும் போற்றும் பாரதி!



பாரதித் தொண்டன்

என் வி சுப்பராமன்

Thursday, December 6, 2012

நீதிவெண்பா


                                                           நீதிவெண்பா

பிற்கால தமிழிலக்கிய வரிசையில் "நீதிவெண்பா" எனும் நூலும் ஒன்று. இதன் ஆசிரியர் பெயர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. சம்ஸ்கிருத மொழியிலுள்ள நீதி சாஸ்திரங்களை வெண்பாக்களாகப் பாடிவைத்திருக்கும் இந்நூலில் 100 பாடல்கள் இருக்கின்றன. ஒருக்கால் இவை சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்பாகக் கூட இருக்கலாம். மிகவும் எளிமையான இந்த நூலிலிருந்து சுவாரசியமான ஒருசில பாடல்களை அதன் கருத்துரையோடு தந்திருக்கிறேன். பயனுள்ளதாக இருக்குமானால் மகிழ்ச்சி. இலக்கியக் கூட்டங்கள், ஆசிரியர்கள் இவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாகப் பயன்படக் கூடிய அவசியமான கருத்துக்கள் இந்தப் பாடல்களில் உண்டு. படித்தபின் கருத்துக்களையும் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

1. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் கருத்தை வலியுறுத்தும் வகையில் எவர் எந்த குடியில் பிறந்திருந்த போதிலும் நல்லவர்கள், இவர், இன்னார் என்று பாராமல் எல்லா குடிகளிலும் வந்து பிறப்பர் என்பது இந்தப் பாடலின் கருத்து. தாமரை மலர் சேற்றில் மலர்கிறது; தங்கம் (பொன்) பூமிக்கடியில் இருண்ட சுரங்கங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது; ஒளிவீசும் முத்து கடலில் வாழும் சிப்பியின் வயிற்றிலிருந்து கிடைக்கிறது; சாமரம் வீசுகிறார்கள் அல்லவா அந்தக் கால மன்னர்களுக்கு விசிறி போல, அந்தத் தோகை ஒரு வகை மானின் உடலில் வளர்ந்த மயிர்; கோரோசனை என்பது ஒருவகை பசுவின் வயிற்றில் கிடைக்கிறது; நாம் அருந்துகின்ற பால் பசுவின் உடலில் உற்பத்தியாகி அதன் மடியின் மூலம் கிடைக்கிறது; இனிமையான தேன் தேனீக்களால் எச்சில் படுத்தி உறிஞ்சப்பட்டு கூடுகளில் சேகரித்ததை நாம் அபகரித்துக் கொள்கிறோம்; நாம் அணியும் பட்டு, பீதாம்பரங்கள் பட்டுப்பூச்சி உருவாக்கிய கூட்டிலிருந்து கிடைக்கிறது; இறைவனின் பூசைக்கு உகந்த புனுகு என்பதும், ஜவ்வாதும் ஒரு வகைப் பூனையின் கழிவிலிருந்து கிடைக்கிறது. தீ எதிலிருந்து எழுந்தால் என்ன? தீ தீதான் அல்லவா? மேற்படி பொருட்கள் எப்படிப்பட்ட இழிவான இடத்தில் தோன்றியிருந்தாலும் அதனுடைய பெருமை மட்டும் குறைவதில்லை அல்லவா? இதை விளக்கும் இந்தப் பாடல்.

தாமரை பொன் முத்துச் சவரம் கோரோசனை பால்
பூமருதேன் பட்டுப் புனுகு சவ்வாது - ஆமழல்மற்று
எங்கே பிறந்தாலும் எள்ளாரே; நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என்?

2. 'அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்' என்பது தமிழ் வேதம். மூங்கில் வளரும் போதே அது நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் வளருமானால் அதனை எந்த வகையிலும் வளைத்துப் பயன்படுத்தலாம். அரசனுடைய சிம்மாசனத்துக்கு மேல் விதானமாக அப்படிப்பட்ட மூங்கில் பயன்படும். ஆனால் அப்படி வளையாமல் நிமிர்ந்து உறுதியாய் விளையுமானால் அது கழைக்கூத்தாடிகளின் கையில் பயன்படும் வித்தைக் கோலாகத்தான் பயன்படும். ஒன்று மேன்மையையும், மற்றது தாழ்ந்தும் போகக் காரணம் அவற்றின் வளர்ச்சி முறை. உடல் வருத்தி வளைந்து கொடுத்துப் போனால் உயர்வும் பெறுவர். அப்படி உடல் வருத்தாமல் உழைக்காமல் நின்றால் அவர்கள் கீழ்மை அடைவர் என்பது கூற்று.

வருத்தவளை வேயரசர் மாமுடியின் மேலாம்;
வருத்த வளையாத மூங்கில் - தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதின்யெல்லா ந்திரிந்து
தாழும் அவர் தம்மடிக்கிழ்த் தான்!

3. சிலர் கிடைத்த போதெல்லாம் வயிறு புடைக்க உண்பர். சிலர் விரதம், நோன்பு என்று உடலை வருத்தி அளவோடும், காலத்தோடும் உண்பர். இப்படி பல வகையாக உண்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? ஒரு வேளை மட்டும் உண்பவன் யோகியாம். இரு வேளை உண்பவன் போகியாம். மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க உண்டு களிப்பவன் ரோகியாம். நான்கு வேளையும் உண்பதே வேலையாக இருப்பவனுடைய உயிர் உடலைவிட்டு விரைவில் போய்விடும் என்பதை அறிக! இதுதான் இந்தப் பாட்டின் கருத்து.

ஒருபோது யோகியே; ஒண்தளிர்க்கை மாதே!
இருபோது போகியே; என்ப - திரிபோது
ரோகியே; நான்கு போது உண்பான் உடல்விட்டுப்
போகியே என்று புகல்.

4. ஒரு சிலரைப் பார்த்து 'இவனுக்குப் நாக்கில் விஷம்' என்பார்கள். அவன் பேச்சு அப்படி விஷம் போல பாய்ந்து துன்பம் தருமாம். பாம்பைப் போல கொடியவன் அவன். யார் யாருக்கு எங்கு விஷம் என்பதைத் தெரிந்து கொண்டால் நல்லதுதானே! பார்ப்போம். ஈ இருக்கிறதே மிக அற்பமான ஜந்து, அதற்கு தலையில் விஷம் சேர்ந்திருக்கும். தேளுக்கு கொடுக்கில் விஷம்; பளபளக்கும் பாம்புக்குப் பல்லில் விஷம்; ஆனால் தீய நோக்கங்களும் நடத்தையுமுடைய தீய மனிதர்க்கு உடல் முழுதும் விஷம். எப்படி?

ஈக்கு விடந்தலையில் எய்தும்; இருந் தேளுக்கு
வாய்த்த விடங்கொடுக்கில் வாய்க்குமே - நோக்கரிய
பைங்கண் அரவுக்குவிடம் பல்அளவே; துர்ச்சனர்க்கு
அங்கமுழு தும்விடமே யாம்.

5. இப்போதெல்லாம் சாலையில் வரும் வாகங்களைக் கண்டு காததூரம் ஓடி ஒதுங்க வேண்டியிருக்கிறது. நாம் ஒழுங்காக வாகனங்களிலோ, நடந்தோ போனாலும், கண்மூடித் தனமாக தலைபோகிற வேகத்தில் இருசக்கர வாகங்களை ஓட்டிக் கொண்டு வரும் விடலைகளைப் பார்த்து அஞ்சி ஓடவேண்டியிருக்கிறது. சரி! இனி யாருடம் எத்தனை தூரம் ஒதுங்கிப் போகவேண்டும் என்பதைப் பார்க்கலாம். கொம்பு உள்ள கால்நடைகளான மாடு, ஆடு, மான் போன்றவற்றிடமிருந்து காத்துக் கொள்ள ஐந்து முழம் தள்ளிப் போக வேண்டும். குதிரையிடமிருந்து பத்து முழம் தள்ளிப் போய்விட வேண்டும். மதங்கொள்ளக்கூடிய யானையிடமிருந்து ஆயிரம் முழம் ஒதுங்கி ஓடிவிட வேண்டும். ஆனால் நம்மைப் போலவே மனிதர்களா உருவிலும், உள்ளத்தால் வஞ்சனையும் சூதும் மேலோங்கி நிற்கும் மானுடவர்க்கத்திடமிருந்து கண்காணாத தூரம் போய்விடுவதே நன்று.

 கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்க்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
வீங்க்குவதே நல்ல நெறி.     

6. 'ஈயத்தை வெள்ளியாக்கலாமா?' அல்லது 'செம்பைப் பொன்னாக்கலாமா?' கெட்ட மனிதனை நல்லவனாக ஆக்க முடியுமா? முயன்றுதான் பாருங்களேன். ஆனால் அனுபவம் என்ன சொல்லுகிறது தெரியுமா? படியுங்கள். தினசரி நம் உணவில் சேர்த்துக் கொள்கிறோமே உள்ளிப்பூண்டு, அதன் வீச்சம், நாற்றம் அல்லது மணம் அது ஒரு வித நெடியுள்ளது. அதை மாற்றி நல்ல நறுமணம் கொண்டதாக ஆக்குவதற்காக உடலுக்கு பீச்சியடித்துக் கொள்கிறார்களே நறுமண திரவம் அதை அடித்தாலும் அதன் தனித்தன்மை வாந்த நெடி மாறிவிடுமா என்ன? மாறாது அல்லவா? அது போலத்தான் பொறாமையும், நன்மை தீமை அறியாத தீமை குணங்கள் நிறைந்தவனை நல்லவனாக மாற்றிட முடியாது என்கிறது இந்தப் பாடல்.

அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ? - திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ? கரை.

7. ஒரு நல்ல மனைவி எப்படி இருக்க வேண்டும்? அவரவர் மனதுக்குத் தோன்றியபடி தங்கள் வேட்கையைத் தெரிவிப்பார்கள். ஆனால் சாத்திரம் என்ன சொல்கிறது என்பதைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது குறித்து நல்ல அனுபவமும், ஆராய்ச்சியும் செய்து தேர்ந்த அறிஞர் பெருமக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒரு மனைவி கணவனிடம் தாயைப் போல கருணையும், பணிப்பெண்ணுக்குரிய பணிவும் அடக்கமும் சீலமும், ஓவியர்மணி ரவிவர்மா வரைந்த மகாலட்சுமி படங்களைப் பார்க்கிறோமல்லவா அதைப் போல வசீகரமான அழகும், பூமியைப் போல, அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல பொறுமையைக் கடைப்பிடித்தும், கட்டிலில் இன்பத்தை அள்ளி அள்ளித் தரும் ஒரு விலைமாதைப் போலும் அவள் விளங்க வேண்டுமாம். ஆலோசனை சொல்வதில் ஒரு மந்திரி போல இருக்கவேண்டும். எனக்குத் தெரியவில்லை, யாரோ சொன்னதை இங்கு எடுத்துச் சொல்கிறேன் அவ்வளவுதான்.

அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் - வண்ணமுலை
வேசி துயிலும் விறல்மந்திரி மதியும்
பேசில் இவைஉடையாள் பெண்.

8. சத்தமாகப் பேசி, கூச்சலிட்டு, ஊர் அதிரும்படியாக அதிர்வேட்டுச் சிரிப்பை உதிர்க்கும் சில பெண்களைப் பார்த்து வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்வார்கள் 'அடக்கமாக இரு' என்று. என்ன பொருள்? அப்படி தன்னடக்கம் இல்லாமல் ஒரு பெண் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பர்கள் என்று கருதாமல் கத்திப் பேசுவதும், இடிச்சிரிப்பு சிரிப்பதுமாக இருந்தால் இந்த பூமி அதிருமாம். அவளைப் போலவே இன்னொரு பெண்ணும் சேர்ந்துவிட்டாள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர்கள் பேசினால் வானத்து விண்மீன்கள் எல்லாம் பொலபொலவென உதிர்ந்து போய்விடுமாம். அவர்களே மூன்று பேராக இருந்தால் கடலில் வீசும் அலைகள் ஒய்ந்து கடல் நீரும் வற்றிப் போய்விடுமாம். ஒருக்கால் இவளைப் போல பல பெண்கள் பேசினால் என்னவாகும் இந்த உலகம்? என வியந்து கேட்கிறார் இந்தப் பாடலின் ஆசிரியர். நான் இல்லை; தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்.

பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் விண்மீன்கள் - பெண்மூவர்
பேசில் அலைசுவறும்; பேதையே! பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாமோ பின்!

9. 'உருவம் கண்டு இகழாமை வேண்டும்'. எந்த தோற்றத்தில் மாமேதைகள் இருப்பர் என்று யார் அறிவார்? ஒரு ஊரில் ஐந்து பேர் சேர்ந்து கட்டிய திரையரங்கம் அவர்களுக்குள் வேற்றுமை ஏற்பட்டதால் வழக்கு உயர்நீதிமன்றம் சென்று அவர்கள் ஆணைப்படி அந்த அரங்கம் ரிசீவர் முன்னிலையில் ஏலத்துக்கு வந்தது. ஏலம் கேட்க பலர் வந்திருந்தனர். அவர்களில் உயர்ந்த தொகைக்கு ஒருவர் கேட்டார். அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கவில்லை. உடல் பருமனாக முழங்கால் வரை கட்டிய வேட்டியும், மேலே சட்டை இல்லாமல், கருத்த மேனியில் தோளில் ஒரு துண்டும் அணிந்திருந்தார். அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து விட்டது. ரகசியமாக அவர் யார் என்று விசாரித்தனர். அவர் அந்த ஊரில் ஒரு மிகப்பெரிய மொத்த வணிக முதலாளி, பல வர்த்தக நிறுவனங்களுக்கு அதிபர் என்று தெரிய வந்தது. இறுதியில் அவர்தான் அந்த அரங்கத்தை ஏலத்தில் எடுத்துப் பின்னர் பலகாலம் நிர்வாகியை அமர்த்தி அரங்கை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இதை எதற்காகச் சொல்கிறே என்றால் எவருடைய தோற்றத்தையும் கண்டு இகழாமல் இருத்தல் நன்று. கடல் உப்பு பார்ப்பதற்கு கற்பூரம் போலத்தான் இருக்கிறது, அது கற்பூரமாகி விடுமா? அதுபோல அற்பர்கள் தவசிகள் போலவும், நல்லவர்கள் போலவும் வேடமிட்டாலும் நல்லவர் ஆகிவிடுவாரா?

கற்பூரம் போலக் கடலுப்பு இருந்தாலும்
கற்பூரம் ஆமோ கடலுப்பு - பொற்பூரும்
புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்
புண்ணியர் ஆவாரோ புகல்?

10. 'நிறை குடம் தளும்பாது' என்பர். முற்றும் கற்றுணர்ந்தவன் இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பான். மூடன் ஒன்றுமில்லாததையெல்லாம் ஆகா ஓகோ என்று பேசிக் கொண்டு அலட்டித் திரிவான். மேலோர் அமைதி காப்பர், அற்பர்கள் எதைவேண்டுமானாலும் கூசாமல் பேசுவர். இது எதைப் போல என்றால், வெண்கலத்தைத் தட்டினால் கணீரென்று ஓசை எழுப்பும், விலை உயர்ந்த தங்கத்தைத் தட்டினால் அப்படிப்பட்ட ஓசை எழுமா, எழாது அல்லவா? அதனால்தான் சிவபெருமான் திருஞானசம்பந்த மூர்த்திக்குக் கொடுத்த பொற்தாளத்துக்கு ஓசையைத் தனியாக வழங்கி அருள் புரிந்தாராம். ஓசை ஒலியெலாம் ஆனவன் அல்லவா அந்த சிவபெருமான்.

சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்; ஆன்றமைந்த
முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே - வெற்றிபெறும்
வெண்கலத்தின் ஓசை மிகுமே; விரிபசும்பொன்
ஒண்கலத்தில் உண்டோ ஒலி?

(முதல் பகுதியை இந்தப் பத்துப் பாடல்களுடன் நிறைவு செய்கிறேன். படிப்பவர்களுக்குப் பிடித்திருந்தால் மேலம் சில பாடல்களையும் அடுத்த பகுதியாக வெளியிடுகிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால்தான் எனக்கு உங்கள் கருத்து புரியும்!)




Wednesday, December 5, 2012

WRITING CTS CHEQUES


Check your cheque status, only those in new format will be honoured from January 1

You may not be able to use your old cheques from next year with the implementation of the new Cheque Truncation System (CTS-2010), which will eliminate physical movement of cheques for clearing.
You may not be able to use your old cheques from next year with the implementation of the new Cheque Truncation System (CTS-2010), which will eliminate physical movement of cheques for clearing.
 
Add one more item — get a new cheque book — to your list of 'things to do' before the New Year. You may not be able to use your old cheques from next year with the implementation of the new Cheque Truncation System (CTS-2010), which will eliminate physical movement of cheques for clearing. Instead, only their electronic images, along with key information, will be captured and transmitted. It will make the clearing process more efficient, secure and quicker; but for that, you must switch to new cheques with prescribed standard features before December 31.

"Customers need not worry about the impending CTS implementation. I am sure they will not be inconvenienced due to the migration process. Some transitory period, from January 1 to March 31, could be given during which both types of cheques will be accepted. Banks are sending messages to customers now so that they comprehend the urgency and act upon it," says AC Mahajan, chairman, Banking Codes and Standards Board of India (B CSBI ).

CHECK YOUR CHEQUE'S ST ATU S

If you have ordered your cheque books recently, say, a month ago, you may already have the new cheque leaves with you. Since most banks have already migrated to the new system, chances are that your bank would have sent you CTS-compliant cheque leaves.

However, if you have received the cheque book more than two or three months ago, you need to run a status check. For instance, the compliant ones will have the newrupee symbol (.`) inscribed near the numerical 'amount' field.

"Visibly, there will only be the following difference: "Please sign above" is mentioned on the cheque leaf on right had side bottom; and, void pantograph (wavelike design) is embossed on left hand side of the CTS cheque leaf," explains Anindya Mitra, senior vice-president, retail liabilities group, -
Check your cheque status, only those in new format will be honoured from January 1Check your cheque status, only those in new format will be honoured from January 1


GET YOUR OLD CHEQUE BOOKS REPLACED

If you haven't received the new form of cheque books already, speak to your bank as early as you can. "Banks could adopt two methods to replace the old cheques. One is to send new cheque books by registered post and ask users to cancel the old ones. Customers may be asked to show proof of the same to the bank. They may also ask customers to surrender the older ones. Or, the customers can visit the bank branch themselves to surrender the old cheques and receive the CTS-compliant ones," says Mahajan. Banks will not charge any fee for replacing the old cheque leaves.

ISSUE NEW POST-DATED CHEQUES FOR EMIS

If you have issued post-dated cheques (PDCs) for your home or auto loan EMIs, you will have to issue fresh cheques. "RBI's guidelines to NBFCs state that if they have accepted post-dated cheques from their customers for future EMI payments, they should get them replaced with CTS-2010 standard compliant cheques before December 31, 2012 . This will be applicable to banks as well," explains VN Kulkarni, chief credit counsellor with the Bank of Indiabacked Abhay Credit Counselling Centre.

"Most of our customers have opted for the ECS (electronic clearing system) mode for their EMI payments. So, the new sys-tem will not impact them. Only a small percentage of borrowers pay their EMIs through post-dated cheques. We are asking them to give us new cheques and accept their older cheques back," says Abhijeet Bose, head, retail assets and strategic alliances,
Not all banks will return your older cheques, though. You needn't be concerned about it as these cheques will be non-compliant with CTS standards and hence not be valid.

To avoid these hassles, you can simply switch to the ECS mode, where the EMI amount is debited from your account every month. It will also save you the trouble of altering the amount on PDCs in case of any change in EMIs.
ENCASH ANY OLD CHEQUES NOW

This tip is mainly for procrastinators. For instance, if you have received a cheque on December 1 that does not conform to CTS 2010, you should not delay its encashment.

"As per RBI mandate, the same (old format cheques) are to be accepted till December 31, 2012 . RBI instructions on whether the same will be permitted after December 31 are awaited," says Mitra. It is better to present it for payment immediately rather than risking its dishonour after December 31.
EXERCISE CAUTION WHILE WRITING CTS CHEQUES

You have to be careful while writing the new cheques. For instance, cheques with alterations in crucial fields like payee's name and amount in figures or words will not be processed under the new system.

"In case of any corrections, a new cheque will have to be issued. The ones with alterations will not be accepted even if the drawer puts his full signature authenticating the changes.

Such cheques will be returned," adds Kulkarni. "Also, it is important to use image-friendly-coloured-inks while writing the cheques." As per RBI guidelines, you should use dark-coloured inks for the purpose.

Monday, December 3, 2012

சிங்கங்கள் பாடு தேவலாம்!




சிங்கங்கள் பாடு தேவலாம்!

தண்ணீர் இல்லாத காட்டில் சுற்றித் திரிந்து எங்கோ ஒரு மூலையில் எல்லா சிங்கங்களும் நீர் அருந்தும் வகையில் ஒரு நீர்நிலை கிடைத்து விட்டது. ஆனால் பாவம்! டெல்டா மாவட்ட விவசாயிகள் கானல் நீராக தூரத்தில் கர்நாடகத்தில் இருக்கும் நீருக்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்களே! இறைவா! இந்த சிங்கங்களுக்கு இரங்கி நீர்நிலையைக் காண்பித்த நீ, நீருக்குத் தவிக்கும் எம் சகோதரர்களுக்கு இரங்க மாட்டாயா?