பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, November 27, 2012

Myths about drinking water - busted!

This is an interesting write-up on water sent by Parthasarathy Hosmane of Yahoo groups. Since the same contains some useful information, the same is being reproduced for the sake of friends.









உயரத்தின் அடித்தளம்


I am reproducing the mail received from my friend C.R.Sankaran. 

உந்துதலின் அளவுதான் உங்கள் உயரத்தின் அடித்தளம்
ஒரு ஜென் துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக் கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது.
நடந்த துறவி நின்றார். சீடர்களைத் திரும்பிப் பார்த்தார். ‘சீடர்களே! முயலும், அதைப் பின் தொடர்ந்து நரியும் ஓடுவதைப் பார்த்தீர்களா? முயலை நரி பிடித்துவிடுமா?என்று கேட்டார்.
குருவே! முயல் வேகமாக ஓடும் என்பது உண்மைதான். ஆனால், நரி முயலை விட வேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றது. அதனால் நிச்சயம் இந்த நரி அந்த முயலைப் பிடித்துவிடும். இதில் கேள்விக்கு இடமேது?’ என்று சிரித்துச் சீடர்கள் தங்கள் அறிவின் ஆழத்தை வெளிப்படுத்தினர்..
சீடர்கள் சிரித்ததைப் பார்த்துக் குருவும் வாய்விட்டுச் சிரித்தார். ‘கேள்விக்கு இதில் இடமிருப்பதை உணர்ந்ததனால்தான் நான் உங்களுக்குக் குருவாக இருக்கிறேன். சிந்திக்க இதில் இடமில்லை என்று நினைப்பதனால்தான் இன்னமும் நீங்கள் சீடர்களாகவே இருக்கிறீர்கள்’ என்றார் குரு.கேள்விக்கும், சிந்தனைக்கும் இதில் எங்கே இடம்?’ என்று சீடர்கள் மீண்டும் ஒரே குரலில் கேட்டனர். ‘கேள்விகளால் நடத்தும் வேள்விகளால்தான் உலகத்தின் உண்மைகள் ஒவ்வொன்றும் புலப்படும். என் கேள்விகளுக்கு முதலில் நீங்கள் பதில் சொல்ல முயலுங்கள் என்ற துறவி ‘முயலும், நரியும் ஏன் ஓடுகின்றன? என்று கேள்விக் கணையைத் தொடுத்தார்..
நரியிடமிருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல் ஓடுகிறது. அந்த முயலைக் கவ்விப் பிடித்து உணவாக்கிக் கொள்ள நரி ஓடுகிறது என்று சீடர்கள் தெளிவாகப் பதில் தந்தனர்.உயிர் முக்கியமா? உணவு முக்கியமா? என்று அடுத்த கணையை வீசினார் குரு. ‘இது என்ன கேள்வி? இன்றில்லாமற் போனால் உணவை நாளை நாம பெறக்கூடும். ஆனால், இருக்கும் உயிரை இழந்துவிட்டால் திரும்பவும் அதை நாம் பெற முடியாதே! இழந்தால் பெறக்கூடிய உணவை விடவும், திரும்பப் பெறமுடியாத உயிர்தான் உலகத்தின் உயிரினங்கள் அனைத்துக்கும் முக்கியம்’ என்று ஒருவன் சொல்ல, மற்றவர் அனைவரும் அதை அழுத்தமாக அமோதித்தனர்..
சீடர்களே! இப்போது சிந்தியுங்கள். இழந்தால் பெறமுடியாத உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உந்துதலுடன் முயல் ஓடுகிறது. பசிக்கு இரை தேடும் உந்துதலுடன் நரி ஓடுகிறது. உணவின் உந்துதலைவிட உயிரின் உந்துதல் பெரிதல்லவா! அதனால் அதிகபட்ச உந்துதலுடன் ஓடிக் கொண்டிருக்கும் முயலை நரியால் பிடிக்க முடியாது’ என்றார் குரு..
அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே முயல் ஒரு புதருக்குள் மறைந்து விட்டது. நரி எங்கே முயல் மறைந்தது என்றறியாமல் ஏமாற்றத்துடன் அங்குமிங்கும் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது.உந்துதலின் அளவுதான் ஒவ்வொரு மனிதனின் உயரத்தின் அடித்தளம். இதை உணர்த்துவதுதான் இந்த ஜென் கதையின் நோக்கம்..
உந்துதல் இல்லாத மனிதவாழ்வில் சாதனைகளுமில்லை: சரித்திரமுமில்லை.முதல் உலகப் போரில் ஜெர்மானியப் படையில் இலட்சக்கணக்கான வீரர்களுள் ஒரு வீரனாய் துப்பாக்கி தூக்கிய இட்லர்தான் இரண்டாம் உலகப் போர் உருவாவதற்கே காரணமானான். பிரெஞ்சுப் படையில் ஒரு சாதாரண சோல்ஜராய் இராணுவ வாழ்க்கையைத் தொடங்கிய நெப்போலியன்தான் இங்கிலாந்தை அச்சத்தால் அலைக்கழித்த பிரெஞ்சுப் பேரரசின் சர்வாதிகாரியாய் சரித்திரம் படைத்தான்.ஆஸ்திரியாவைச் சேர்ந்த இட்லர் ஜெர்மனியின் ஆட்சியாளனாய் மாறியதும், மத்தியதரைக் கடலில் உள்ள கார்சிகா தீவில் பிறந்த நெப்போலியன் பிரான்சின் அதிகார நாற்காலியில் அமர்ந்ததும் வரலாறு அதுவரை கண்டிராத அதிசயங்கள்..
இந்த அதிசயங்கள் அரங்கேறியதற்கு அவர்கள் உள்ளத்தில் உருவெடுத்த உந்துதல்தான் அடிப்படைக் காரணம்..
கிரேக்கத்தின் சின்னஞ் சிறிய மாசிடோனியா நகரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த அலெக்சாண்டரை உலகாளச் செய்தது எது? உலகப் படத்தில் குண்டூசிபோல் இருக்கும் ரோமை செல்வம் கொழிக்கும் பேரரசாக சீசரை உருவாக்கச் செய்தது எது? உந்துதல்!.
செருப்பு தைப்பவனுக்கு மகனாகப் பிறந்த அபிரஹாம் லிங்கனை அமெரிக்க வல்லரசின் முதல் மகனாய் உயர்த்தியதும், அந்த அமெரிக்காவே வியந்து பார்த்த ஆன்ம ஞானி விவேகானந்தராய் நரேந்திரனை உருவாக்கியதும் அவரவர் போக்கில் உருவெடுத்த உந்துதலே!.
ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற மனத்தின் முனைப்புதான் உந்துதல். ஒவ்வொருவர் வாழ்விலும் வெற்றிபெற சிந்தனைதான் முதலீடு; முனைப்புதான் வழிமுறை; கடும் உழைப்பே தீர்வு’ என்கிறார் அப்துல்கலாம்..
கனவு காணுங்கள். தீவிரமாகக் காணப்படும் கனவுகள் எண்ணங்களாக மாறி ஒருநாள் நிச்சயம் நனவாகும். உந்துதலோடு செயற்கடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு தேவை’ என்கிறார் கலாம்.வெற்றிக்கு வழி என்ன?’ என்ற தேடலிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடலாகாது. வெற்றி என்பது சிலருக்கு மட்டுமே ஆண்டவன் விசேஷமாய் வழங்கும் ஆசீர்வாதமில்லை..
வெற்றியைக் கரம்பற்ற நாம் மூன்று படிகளில் ஏறினால் போதும். அந்த மூன்று படிகள்… ஆசைப்படு-ஆசைப்படுவதை அடையமுடியும் என்று நம்பு – அந்த நம்பிக்கை நிறைவேறும் வரை இடையறாது செயற்படு. இதுதான் வெற்றிக்கான மூலமந்திரம். இந்த சூத்திரத்தின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால் போதும். வெற்றித் தேவதையின் கைகளில் இருக்கும் மாலை ஒரு நாள் உங்கள் கழுத்தை அலங்கரிக்கும்..


Sunday, November 25, 2012

ஆன்மிகம் தேவையா?


நான் படித்ததில் பிடித்தவை!
(நன்றி: "காலைக் கதிர் - வாரக் கதிர்")

ஆன்மிகம் தேவையா?

மனிதர்களுக்கு எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், கூடவே ஆன்மிக உணர்வும் இருக்க வேண்டும். ஆன்மிகம் என்பதுதான் மனிதனின் மன அமைதிக்குச் சிறந்த மருந்து. மற்ற ஜீவன்கள் ஆன்மிகத்தில் ஈடுபட முடியாது. மனிதனுக்கு அந்த வாய்ப்பு உள்ளது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோடி கோடியாகப் பணம் இருந்தாலும் மனமானது அதைப் பெருக்கவும், காப்பாற்றிக் கொள்வதிலேயுமே ஈடுபடும். இதில் உள்ள அக்கறை மற்றும் ஆர்வத்தை ஆன்மிக வழியில் செலுத்தினால், துன்பங்களை மறக்கலாம்; மன அமைதி பெறலாம்.

அந்தக் காலத்தில் அரசர்களெல்லாம் வயதாகி விட்டால், ராஜ்யத்தை மகனிடம் ஒப்புவித்து விட்டு தவம் செய்ய காட்டுக்குப் போய் விடுவர். அங்கேதான் மனம், ராஜ்ய விஷயங்களில் ஈடுபடாமல் பகவானிடம் ஈடுபடும். அப்படி போவதற்கு வைராக்கியம் வேண்டும். நாட்டை ஆண்டது போதும்; இனி ராஜ்யம் வேண்டாம்; இதைவிட உயர்ந்ததான பேரின்ப ராஜ்யத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் கானகம் சென்று, தவத்தில் ஈடுபட்டனர். அதுதான் பகவானை அடையும் ஒரே வழி.

பரதர் என்ற சக்கரவர்த்தி, இப்படித்தான் எல்லாவற்றையும் துறந்து தவம் செய்யக் காட்டுக்குப் போனார். ஆனால், அங்கே ஒரு மான் குட்டியின் மீது அன்பும், பாசமும் வைத்ததால் தவம் குறைந்து மீண்டும் பிறவி எடுக்க வேண்டு வந்தது. அதனால், கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆசாபாசங்களை விட்டுவிட்டு பகவானை அடையும் வழியைப் பார்க்க வேண்டும்.

இங்கே காணும், அனுபவிக்கும் சுகமெல்லாம் அநித்யமானது. சரீரமே ஒருநாள் அழியக் கூடியது; அப்படியிருக்க, சரீரம் அனுபவிக்கும் சுகம் மட்டும் நிரந்தரமானதா? இல்லையே! சரீரம் அழிந்தாலும் ஜீவன் அழிவதில்லை. அது பாவ புண்ணியங்களுக்குத் தக்கபடி மீண்டும் பிறவி எடுக்க வேண்டியுள்ளது.

எதன் மேலும் பாசம் வைக்காமல், பகவானிடம் பக்தி வைத்தால், பிறவிக்கடலைத் தாண்டலாம். மீண்டும் பிறக்க வேண்டியிராது. இது எல்லோருக்கும் சாத்தியமாகாது. ஆகவே, ஆன்மிக மார்க்கத்தில் பற்றுதலும், வைராக்கியமும் இருந்தால் இறைவனைச் சேரலாம். பந்த பாசங்களை விட்டுவிட யாருக்கு மனசு வரும்? முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே!

(இதைத்தான் ஹிந்து மதமும், நமது புராண இதிகாசங்களும், பகவத் கீதை முதலான அனைத்து ஞான நூல்களும் கூறுகின்றன. இவற்றை மீண்டும் மீண்டும் படிப்போம், சிந்திப்போம், பயன்பெறுவோம்.")

Tuesday, November 20, 2012

பிச்சைக்காரர்கள் தொல்லை

பிச்சைக்காரர்கள் தொல்லையை நாம் தினமும் சந்திக்கிறோம். சில சமயங்களில் நம் தோளைத் தட்டி நாம் திரும்பிப் பார்க்கும் போது பிச்சைப் பாத்திரத்தை நீட்டுவார்கள். இந்த தொல்லைக்குத் தீர்வு இல்லையா? ஏன் இல்லை. சீனாவில் பாருங்கள், பிச்சைக்காரர்கள் கூண்டுக்குள். பிச்சையிடுவோர் வெளியில். விரும்பினால் அவர்கள் பாத்திரத்தில் பிச்சையிடலாம். நம் தோளைத் தட்டி பிச்சைக் கேட்கும் நிலைமை அங்கு இல்லை. நாமும் ஏன் இந்த முறையைக் கடைப்பிடிக்கக் கூடாது?

For your kind attention please!

For your kind attention please!


Starting January 1, 2013, banks will not accept cheques that do not conform to the new standards under the chequeTruncation System (CTS).
As per a directive from the Reserve Bank of India (RBI), all lenders are mandated to phase out all non-CTS cheques by the end of December.
India’s largest lender, the State Bank of India (SBI) said it has issued a public notice requesting all its branches to start issuing cheques with CTS-2010 standardized features. The bank also requested its customers to surrender non-CTS cheques. 

SBI said that it would only accept cheques that conform to new standards from January 1. SBI said all the non-CTS cheques will be out of circulation from December 31, 2012.

Traditionally, cheques were sent to the issuing bank physically for the purpose of verification. The process took 2-3 days for local clearances and more time for branches in other cities.

Under the new system, only scanned images of cheques will be required for clearances. This substantially cuts down the delay suffered due to clearing processes.

However, banks need to issue cheques with standardized features for the system to accept them. Apart from standardization, the new cheques will also have enhanced security features.
“The homogeneity in security features acts as a deterrent against frauds and the fixed placement specifications felicitate straight-through-processing at drawee banks’ end through the use of image character recognition technology,” said RBI in a notification issued in September.
RBI also directed banks to ensure replacement of non-CTS post dated cheques that may have been held for Equated Monthly Installments before December 31, 2012. While most private banks have migrated to the new system, public sector banks are in the process to do so.
 
Photobucket

Is it Safe or dangerous?

                                                                     Is it Safe or dangerous? 

Tuesday, November 13, 2012

அடே! பையா! தூங்காதே, படி.

பரீட்சைக்கு நேரமாச்சு!

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்குத் தேர்வு பயம். தேர்வு நெருங்கிவிட்டதால் எப்படியாவது படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும். சிலருக்குப் பெற்றோர்கள் டீ தயாரித்துக் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள். சிலர் தாங்களாகவே தூங்காமல் விழித்திருந்து படித்து தேர்வுக்குத் தயார் செய்து கொள்வார்கள். ஆனால் அந்தக் காலத்தில் தனியே, தன் சுய முயற்சியால் படிக்கும் மாணவர்கள் தூங்காமல் இருக்கப் பல வழிகளைக் கையாள்வர்கள். அதில் ஒருவழிதான் இந்தப் படத்தில் பார்க்கிறீர்கள். அடே! பையா! தூங்காதே, படி. இது ஒரு நல்ல வழிதான்.

Monday, November 12, 2012

முதலாளி, தொழிலாளி வித்தியாசங்கள்.


ரஷ்ய கம்யூனிசம் இந்திய மண்ணில் ஏன் வேரூன்ற முடியவில்லை? 

இந்தக் கேள்விக்கு ரஷ்யப் புரட்சி முடிந்த நிலையில் மகாகவி பாரதியே இதற்கான பதிலை எழுதிவிட்டார். அவர் என்ன சொல்கிறார்? பார்ப்போம்.

"ருஷ்யாவில் 'சோஷலிஸ்ட்' கட்சியார் ஏறக்குறைய நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிவிடக் கூடுமென்று தோன்றுகிறது. 'சோஷலிஸ்ட்' கட்சியென்பதைத் தமிழில் சமத்துவக் கட்சி என்று சொல்லலாம். அதுகூட சரியான மொழிபெயர்ப்பாகாது. சொத்து விபாகம் செய்திருப்பதில், இப்போது சிலர் செல்வரென்றும், பலர் ஏழைகளென்றும் ஏற்பட்டிருப்பதை மாற்றி உலகத்திலுள்ள சொத்தை அதாவது பூமியை உலகத்து ஜனங்களுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், தொழில் விஷயத்தில் இப்போது போட்டிமுறை இருப்பதை மாற்றிக் கூடியுழைக்கும் முறையை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்னும் மேற்படி கட்சியாளருடைய முக்கியமான கோட்பாடு, ஆதலால் இந்தக் கட்சிக்கு ஐக்கியக் கட்சி என்று பெயர் சொல்லுவது பொருந்தும் என்று தோன்றுகிறது. இதை 'அபேதக் கட்சி' (பேதமில்லாத) என்று சொல்வாருமுளர்.

இந்தக் கட்சி இந்தியாவில் ஏன் இதுவரை (பாரதி எழுதிய காலத்தில்) ஏற்பட்டு விருத்தியடையவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். முதலாவது காரணம் ஹிந்து ஜன சமூக அமைப்பில் ஐரோப்பாவில் இருப்பது போலவே அத்தனை அதிகமான தாரதம்மியம் (ஏற்றத்தாழ்வு வித்தியாசங்கள்) இல்லை. முதலாளி, தொழிலாளி, செல்வன், ஏழை இவர்களுக்கிடையே ஐரோப்பாவில் உள்ள பிரிவும் விரோதமும் நம் தேசத்தில் இல்லை. ஏழைகளை அங்குள்ள செல்வர் அவமதிப்பது போலே நமது நாட்டுச் செல்வர் அவமதிப்பது கிடையாது. ஏழைகளுக்குத் தானம் கொடுப்பது என்ற வழக்கம் நமது தேசத்தில் இருக்குமளவு அந்தக் கண்டத்தில் கிடையாது. லண்டன் நகரத்தில் பிச்சைக்காரனைப் போலீஸ்காரன் பிடித்துக் கொண்டு போவான். பிச்சைக் குற்றத்திற்காக மாஜிஸ்டிரேட் தண்டனை விதிப்பார். நமது தேசத்தில் "தேஹி" (பிச்சையிடுங்கள்) என்று கேட்பவனுக்கு "நாஸ்தி" (இல்லை) என்று சொல்கிறவனை எல்லோரும் சண்டாளன் என்று தூஷிப்பார்கள்.

இங்கிலீஷ் நாகரிகம் நமது தேசத்தில் நுழையத் தொடங்கியதிலிருந்து இங்கும் சில மூடர் பிச்சைக்காரரை வேட்டையாடுவது புத்திக்கூர்மைக்கு அடையாளமென்று நினைக்கிறார்கள். பிச்சைக்காரன் வந்தால், "ஏண்டா தடி போலிருக்கிறாயே! பிச்சை கேட்க ஏன் வந்தாய்? உழைத்து ஜீவனம் பண்ணு" என்று வாயினால் சொல்லி விடுதல் எளிது. உழைக்கத் தயாராக இருந்தாலும், வேலையகப்படாமல் எத்தனை லக்ஷலக்ஷம் பேர் கஷ்டப்படுகிறார்கள் என்ற விஷயம் மேற்படி நாகரிக வேட்டை நாய்களுக்குத் தெரியாது.

சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பதும் உண்மைதான். இதையெல்லாம் நான் மறுக்கவில்லை. ஆனாலும், பிச்சையென்று கேட்டவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை; வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை.

சோம்பேறி! பிச்சைக்காரன் மாத்திரம்தானா சோம்பேறி? பணம் வைத்துக் கொண்டு வயிறு நிறைய தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு அதன் பிறகு ஏழைச் சோம்பேறிகளை சீர்திருத்தப் போவது விசேஷம். பொறாமையும் தன் வயிறு நிரப்பிப் பிற வயிற்றைக் கவனியாயிருத்தலும், திருட்டும், கொள்ளையும் அதிகாரமுடையவர்களும் பணக்காரர்களும் அதிகமாகச் செய்கிறார்கள். ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு; செல்வர் செய்யும் அநியாயம் அதிகம். இதைக் கருதியே ப்ரூதோம் என்ற பிரெஞ்சு தேசத்து வித்துவான் "உடைமையாவது களவு" என்றார்.

ஏழைகளே இல்லாமற் செய்வது உசிதம். ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது. அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை, ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளை விடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். ஐரோப்பிய இயந்திரத் தொழிற்சாலைகள் ஏற்பட்டதிலிருந்து ஏழைகளுக்கு முன்னைக் காட்ட்லும் அதிகத் துன்பம் ஏற்பட்டு இருக்கின்றனவேயன்றி ஏழைகளின் கஷ்டம் குறையவில்லை.

ஏழைகளைக் கவனியாமல் இருப்பது பெரிய ஆபத்தாக முடியும். கிறிஸ்துவ வேதத்தில் பழைய ஏற்பட்டில் ஆதியாகமத்தில் முதல் மனிதனாகிய ஆதாம் என்பவனுக்கும் அவனுடைய பத்தினியாகிய ஏவாளுக்கும் இரண்டு புத்திரர் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. மூத்த குமாரன் பெயர் காயீன். இளையவன் பெயர் ஆபேல். காயீன் ஆபேலிடம் விரோதமாய் ஆபேலைக் கொன்றுவிட்டானாம். அப்போது கடவுள் காயீனை நோக்கி, "உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே? என்று கேட்டாராம். அதற்குக் காயீன், "எனக்குத் தெரியாது. சகோதரனுக்கு நான் காவலாளியோ?" என்றானாம்.

அதுபோல உலகத்துக்குச் செல்வர் சகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு எடுத்துக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால், 'அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழையாயிருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா? என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாளிகள் ஒரு சபை கூடி அந்தக் கிராமத்திலுள்ள ஏழைகளின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய யோசனைகள் பண்ணி நிறைவேற்ற வேண்டும். அன்பினால் உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றிவிடலாம். அங்ஙனம் செய்யாமல் அஜாக்கிரதையாக இருந்தால் ஐரோப்பாவைப் போல் இங்கும், ஏழை செல்வர் என்ற பிரிவு பலமடைந்து விரோதம் முற்றி, அங்கு ஜனக்கட்டு சிதறும் நிலைமையிலிருப்பதுபோல் இங்கும் ஜன சமூகம் சிதறி மகத்தான விபத்துக்கள் நேரிட இடமுண்டாகும்.

பொருளாளிகள் இடைவிடாத உழைப்பையும் அன்பையும் சமத்துவ நினைப்பும் கைக்கொண்டால், உலகத்தில் அநியாயமாக உத்பாதங்கள் நேரிட்டு உலகமழியாமல் காப்பாற்ற முடியும். பராசத்தி மனுஷ்ய ஜாதியை அன்பிலும், சமத்துவத்திலும் சேர்த்து நலம் செய்க!

                                            =மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.


1984இல் திருமதி இந்திரா காந்தி அவர்களின் இறுதி யாத்திரையில் தலைவர்கள். குடியரசுத் தலைவர் ஜெயில் சிங், துணைக் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் ஆகியோருடன் இந்திரா காந்தியின் மகனும், அடுத்த பிரதமருமான ராஜிவ் காந்தி.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY0e2jBCbVRkESI2fogUcIrHU0jWTLu-jinthLRTFcs42KQu9ujlw39Etve9H86mDqbeEQ-dUo0wNBm0GkutuFYD2lEU7Ur0Gam3hfW9CB7zRdfUnAZ9THkyb_j0HFKQcwh-8qgYnUB2rW/s1600/Funeral+ceremony+of+prime+minister+Indira+Gandhi,+on+Extreme+Left+her+Son+and+Successor+Rajiv+Gandhi+-+1984.JPG

Thursday, November 8, 2012

தீபாவளி வாழ்த்துக்கள்!



தீபாவளி வாழ்த்துக்கள்!

பாரதி இலக்கியப் பயிலகத்தின் இந்த வலைத்தளத்துக்கு வந்து என்னுடைய படைப்புக்களைப் படித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.





அனந்த சக்தி

எறும்பு இறந்துபோன புழுவை இழுத்துச் செல்கிறது; எதனால்? சக்தியினால். தூமகேது அனேக லட்சம் யோசனை தூரமான தனது வாலை இழுத்துக் கொண்டு திசைவெளியில் மகா வேகத்தோடு சுழலுகின்றது; எதனால்? சக்தியினால். அந்த தூமகேது எழுபத்தைந்து வருஷத்தில் ஒரு மண்டலமாகத் தன்னைச் சுற்றி வரும்படி சூரிய கோளம் நியமிக்கிறது; எதனால்? சக்தியினால்.

ஓர் கன்னிகை பாடுகிறாள். நெப்போலியன் ஐரோப்பாக் கண்டம் முழுவதையும் வெல்லுகிறான். இவை இரண்டிற்கும் சக்தியே ஆதாரம். கண்ணுக்குப் புலப்படுவதும், ஊக்கத்திற்குப் புலப்படுவதுமாகிய வெளியுலகங்கூட எல்லையற்றதென்று பண்டிதர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த எல்லையற்ற உலகத்தை இயக்கும் சக்தி தானும் எல்லையற்றதாகும். அனந்தமானது. அதனினும் பெரிது. இவ்வித சக்தியை மனிதன் பாவனை செய்வதால் பலவிதப் பயன்களுண்டு.

"யத்பாவயஸி தத்பவஸி"

எதனைப் பாவிக்கிறாயோ நீ அதுவாக ஆகின்றாய்.

ஆனால், இங்ஙனம் பாவனை செய்வது லேசான காரியமென்று நினைத்துவிடலாகாது. உயிர் தழும்பியதும் கனல்வதுமான சிரத்தையுடன் பாவனை செய்ய வேண்டும். பொறி பறக்கும் பக்தியுடன் தியானம் செய்ய வேண்டும். இதனை வீண் கதையென்று நினைத்துவிட வேண்டாம். விடாமல் அனுஷ்டானம் செய்து பார்த்தால் இதன் பயன் தெரியும்.

துணிவு, உள்ளத் தூய்மை, ஏதாவதொரு மகத்தான லட்சியத்திலே அறிவை ஆணி கொண்டடித்தது போலப் பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நஷ்டங்களிலே சிந்தனை இல்லாமை -- இவைதான் யோகத்தின் இரகசியம்.

-- "மகாகவி சுப்பிரமணிய பாரதியார்"

புருனெய் நாட்டிலிருந்து கவிஞர் தனுசு அனுப்பியிருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கு உரித்தாக்குகிறேன்.

ஆழ்கடல் எனும்
வலை உலகில் கிடைத்த
முத்துக்கள்!

யாழ் ஒலியென
நான் நேசிக்கும்
ஓசைகள்!

வாழ்நாள்
நீட்டிக்க வைக்கும்
ஆசைகள்!

ஏழுலகிலும்
நான் விரும்பும் 
அதிசயங்கள்!

வானத்தில்
நான் விரும்பும்
வானவில்!

வையத்தில்
எதிர் பார்க்கும்
மழைமுகில்!

அங்கொன்று இங்கொன்றுமாய்
இருக்கும் 
புள்ளிகள்!

ஒன்றோடு ஒன்றாக 
இனைந்த
கோலங்கள்!

எனக்கு 
இவை யாவுமாகி
கிடைத்த 
நட்பு நெஞ்சங்கள்!

உங்கள் அனைவருக்கும்
மனம் நிறைந்த 
தீபாவளி
நல் வாழ்த்துக்கள்!

-தனுசு-

இருள் மறைந்து ஒளி பரவ
வறுமை மறைந்து வளமை பெருக
துயரம் மறைந்து இனியவை வளர
ஊழல் மறைந்து உலகம் சிறக்க
தீயவை மறைந்து நல்லவை உயர
பொய்மை மறைந்து வாய்மை விளங்க
அல்லவை மறைந்து நல்வழி திறக்க
அறியாமை மறைந்து அறிவு செழிக்க
இத்திரு நாளில் இறைவனை வேண்டுவோம்!

உறவினை வளர்த்து உயர்ந்து நிற்போம்
விளக்கின் ஒளியில் இறைவனைக் காண்போம்
நன்மை செய்து நலமே பெறுவோம்
நேர்மை காத்து நேயம் வளர்ப்போம்
நியாயம் உணர்ந்து நயம்பட வாழ்வோம்
நாணய்ம் காத்து பயனுற வாழ்வோம்!
உடல் நலம்பேணி மகிழ்வொடு வாழ்வோம்!


என் வி சுப்பராமன்   

தேன் சொட்டும் கவிதை
திகட்டாத அன்பு
வான் முட்டும் கற்பனை
வாஞ்சை மிகு வாழ்த்து 
கூன் பட்டாலும் 
கோணாத நட்பு
காணப் பட்டேன்
கவிதையின் கருவிலே
காணமல் போனேன் 
கவிதா உருவிலே
இன்பம் மனதிலே
இழையோடும் உணர்விலே
இணைய வகுப்பிலே
இணைந்தோம் இப்பிறப்பிலே
இருந்தும் களிப்போம்
இடைவிடா நட்பிலே!

தீப ஆவளி வாழ்த்துக்கும் 
தீம் பாட்டுக்கும் 
நன்றி! நன்றி!!
நன்றிகள் கவிஞரே!

இந்த தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய தீப ஆவளி வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஆலாசியம் கோ.

Wednesday, November 7, 2012

லாரல் ஹார்டி.



இந்த நகைச்சுவை ஜோடியின் அட்டகாச நடிப்பை இப்போது எழுபது அல்லது எண்பது வயதைத் தாண்டியவர்கள் அவர்களுடைய இளம் வயதில் பார்த்து ரசித்திருப்பார்கள். நம்மூர் நகைச்சுவை ஜோடிகள் பலருக்கு முன்னோடியாக இருந்தவர்கள் இவர்கள். இவர்களில் லாரல் குண்டாகவும் சற்று மந்தமானவராகவும் ஹார்டி ஒல்லியான குறும்புக்காரராகவும் இருப்பார். வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த இந்த ஜோடியின் பழைய புகைப்படம் இது. இதையாவது பார்த்து ரசிப்போம்.




Stan Laurel and Oliver Hardy signing autographs for young fans on the set of their second feature film, Pack Up Your Troubles, MGM, 1932