பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 30, 2013

அரசியல்வாதிகள் எத்தனை விதம்? உடனடி உதவி தேவை இக்கணம். ஆனால் இவர்களது பிதற்றல்கள் எந்த விதத்தில் மக்களுக்கு உதவப் போகிறது? நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

1. Uttarakhand floods: Modi visit only for photo op, says Congress


2.

Shocker in Uttarakhand: MPs almost come to blows over flood-relief work


3.

Uttarakhand floods: Samajwadi Party accuses Congress of playing politics


4.

The Congress, however, rejected the criticism by the Samajwadi Party, saying that it was important to provide relief and rescue.


5.

Rahul Gandhi, who was earlier blamed by the opposition for not visiting Uttarakhand, visited the flood-hit state on Monday.


"பரோபகாரம் ஹிதம் சரீரம்"

                                                   "பரோபகாரம் ஹிதம் சரீரம்"

இந்த உடலை எடுத்ததன் நோக்கம் பிறருக்கு உதவி செய்தல் என்கிறது நமது பண்டைய நூல்கள். நான், எனது எனும் சுயநலம் கோலோச்சும் இந்த நாளில் பிறரைப் பற்றி சிந்திக்க நேரமில்லா மனித வாழ்க்கை ஒரு இயந்திர வாழ்க்கையாக மாறிவிட்டது.

கூட்ட நெரிசலில் அல்லாடும் ஒரு கிழத்தை எக்கித் தள்ளிவிட்டு தான் பேருந்தில் ஏறி இடம்பிடிக்கும் இளசுகளைப் பார்த்திருப்பீர்கள். புனித யாத்திரை செல்லும் இடங்களில் இரவு படுத்துறங்க சரியான இடம் கிடைக்காத நேரத்தில் கூட முதியவர்கள், உடல் நலம் இல்லாதவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை தந்து தான் பின்னர் இடம் தேடவோ, அல்லது இடமில்லாவிட்டாலும் அனுசரித்து நடந்து கொள்ளவோ கூடிய மனம் படைத்தவர்கள் எத்தனை பேர்?

அடுத்த வீட்டாருக்கு ஒரு துன்பமென்றால், தன் வீட்டுக் கதவு தாழ்ப்பாளை உட்புறம் போட்டுக் கொண்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து மகிழும் மனப்பான்மை கொண்டவர் எத்தனை பேர்?

இத்தனைக்கும் இடையே பாலைவனச் சோலை போல ஆங்காங்கே நல்ல மனம் படைத்த மேலோர்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை. அவர்களை இனம் கண்டு பிடிப்பதுதான் சிரமம். அப்படிப்பட்டவர்கள் தனக்கு உணவு இல்லாவிட்டாலும் பிறர் பசி நீக்க பாடுபடுவதைப் பார்த்திருக்கிறோம். பிறரால் சுமக்க முடியாத சுமைகளை, மனச்சுமை உட்பட, அனைத்தையும் தான் சுமக்க முன்வரும் அற்புதப் பிறவிகளைச் சந்தித்திருக்கிறோம். ஏமாற்று, பொய், பித்தலாட்டம், திருட்டு, கொள்ளை, சந்தர்ப்பவாதம் என்று இவை அனைத்திலும் ஊறித் திளைத்த மக்கட்கூட்டத்தின் இடையே பிறந்த மாணிக்கங்கள்தான் இதோ இந்தப் படத்தில் காணப்படும் மனிதப் பாலத்தின் அங்கங்களாக விளங்கும் நமது இந்திய ராணுவ வீரர்கள். வாயால் ஆறுதல் சொல்பவர்கள், பொருளால் பணத்தால் உதவி செய்பவர்கள் இவர்கள் அனைவரைக் காட்டிலும் இன்னலில் சிக்கிக்கொண்ட மனிதர்களைத் தங்கள் முதுகில் தாங்கிக் கரைசேர்க்கும் இந்த உண்மை தேசபக்தர்களைப் பாருங்கள். இந்தப் படம் பற்றி விளக்கவா வேண்டும். இந்த வீரர்களும், அவர்தம் குடும்பத்தாரும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ அந்த கேதாரநாதனை வழிபடுவோம். ஜெய் ஹிந்த்!

Tuesday, June 25, 2013

"மழை"

"மழை" எனும் தலைப்பில் மகாகவி பாரதியார் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அந்தப் பாடலைப் பார்ப்போமா?

"திக்குகள் எட்டும் சிதறி ‍ தக்கத்
     தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌
 பக்க மலைகள் உடைந்து ‍ வெள்ளம்
     பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட‌
 தக்கத் ததிங்கிட தித்தோம் ‍ அண்டம்
     சாயுது சாயுது சாயுது ‍ பேய்கொண்டு
 தக்கை யடிக்குது காற்று ‍ தக்கத்
     தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட‌

 வெட்டி யடிக்குது மின்னல் ‍ கடல்
     வீரத் திரை கொண்டு விண்ணை யிடிக்குது
 கொட்டி யிடிக்குது மேகம் ‍ கூ
     கூவென்று விண்ணைக் குடையுது காற்று
 சட்டச்சட சட்டச்சட டட்டா ‍ என்று
     தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
 எட்டுத் திசையும் இடிய ‍ மழை
     எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

 அண்டம் குலுங்குது தம்பி!  தலை
     ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
 மிண்டிக் குதித்திடு கின்றான்  திசை
     வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
 செண்டு புடைத்திடு கின்றார்;  என்ன‌
     தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
 கண்டோம் கண்டோம் கண்டோம்  இந்தக்
     காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.

இனி உத்தர்கண்ட் மாநிலத்தில் இயற்கை செய்த பேரழிவையும், அதன் பாதிப்பு சிவபெருமான் கோயில் கொண்ட கேதார்நாத்தை எந்த பாடு படுத்தியது என்பதையும் பார்ப்போம்.






அத்தனையும் அழிந்தும் அந்த ஆலயம் மட்டும் நிற்கும் அதிசயத்தை என்னவென்பது? அந்த ஆலயத்தின் பின்புறம் இருந்த ஒரு பெரிய பாறை அடித்து வந்த வெள்ளத்தைத் தடுத்து ஆலயத்தின் இருபுறங்களுக்கும் பிரித்து அனுப்பி ஆலயத்தைக் காப்பாற்றி விட்டது என்கிறார்கள். இதை என்ன வென்பது?

Sunday, June 23, 2013

நூல் வெளியீட்டு விழா

           தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு

          நூல் வெளியீட்டு விழா: தஞ்சை பெசண்ட் அரங்கம்.
           நாள்: 2013 ஜூலை 6ஆம் தேதி மாலை 6 மணி.

தலைமை & நூல் வெளியிடுவோர்: திருமிகு சீ.நா.மீ.உபயதுல்லா அவர்கள்.
                      தமிழ்நாடு அரசு முன்னாள் அமைச்சர்.

முதல் பிரதிகளைப் பெறுவோர்:

             திரு பாபாஜிராஜா போன்ஸ்லே, தஞ்சை மூத்த இளவரசர்
             திரு இரா.முத்து, உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை
             முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
           
நூல் விமர்சனம்: முனைவர் இராம. கெளசல்யா, மரபு பவுண்டேஷன்
                 திரு அருள், அனன்யா பதிப்பகம், தஞ்சாவூர்
                 திரு அ.சதாசிவம், எம்.ஏ., சூரப்பள்ளம், பட்டுக்கோட்டை
                 திரு த.கோ.குருநாதன், தஞ்சாவூர்.

 நூலாசிரியர் உரை. திரு வெ.கோபாலன், பாரதி இலக்கியப் பயிலகம்.

அன்பர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கும் திருவையாறு பாரதி இயக்க நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள்.

            திரு நீ.சீனிவாசன், திருவையாறு
            திரு நா. பிரேமசாயி, திருவையாறு
            திரு இரா. மோகன், தஞ்சாவூர்.
            

Friday, June 21, 2013

யோக சக்தி

    மகாகவி பாரதியாரின் அற்புதமான பாடல் இது. இதில் சில வரிகளை கோடிட்டுக் காண்பித்திருக்கிறேன். அவை எந்த நாளும் நம் மனதில் ஆழப்பதிந்திருக்கும் வரிகள். மகாகவி நம் காலத்தில் வாழ்ந்த தெய்வீகக் கவிஞர்.
     யோக சக்தி 
    வரங் கேட்டல்

    விண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்
          வீரை சக்தி நினதருளே - என்றன்
    கண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு
          கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்
    பண்ணும் பூசனை கள்எல்லாம் - வெறும்
          பாலை வனத்தில் இட்ட நீரோ, - உனக்
    கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? - அறி
          வில்லா தகிலம் அளிப்பாயோ?

    நீயே சரணமென்று கூவி - என்றன்
          நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி
    தாயே! எனக்கு மிக நிதியும் -அறந்
          தன்னைக் காக்கு மொருதிறனும் - தரு
    வாயே என்றுபணிந் தேத்திப் - பல
          வாறா நினது புகழ்பாடி - வாய்
    ஓயே னாவதுண ராயோ? - நின
          துண்மை தவறுவதோ அழகோ?

    காளீ வலியசா முண்டி - ஓங்
          காரத் தலைவியென் னிராணி - பல
    நாளிங் கெனையலைக்க லாமோ, - உள்ளம்
          நாடும் பொருளடைதற் கன்றோ? - மலர்த்
    தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது
          தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்
    நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
          நீலியென் னியல்பறி யாயோ?

    தேடிச் சோறுநிதந் தின்று - பல
          சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
    வாடித் துன்பமிக உழன்று - பிறர்
          வாடப் பலசெயல்கள் செய்து - நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
          கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
    வேடிக்கை மனிதரைப் போலே - நான்
          வீழ்வே னென்று நினைத் தாயோ? 


    நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
          நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
    முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
          மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
    என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
          கேதுங் கவலையறச் செய்து - மதி
    தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
          சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் 


    தோளை வலியுடைய தாக்கி - உடற்
          சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
    வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு
          மாறா வுடலுறுதி தந்து - சுடர்
    நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
          நண்ணித் திகழுமுகந் தந்து - மத
    வேளை வெல்லுமுறைகூறித் - தவ
          மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.

    எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
          யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
    பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
          பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
    நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
          நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
    பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
          பாடத் திறனடைதல் வேண்டும். 


    கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
          கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
    புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
          போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
    வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
          விந்தை தோன்றிட இந்நாட்டை - நான்
    தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
          சூழும் வீரமறி வாண்மை.

    கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
          கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
    நாடும் படிக்குவினை செய்து - இந்த
          நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
    சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
          தாயே! உனக்கரிய துண்டோ? - மதி
    மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
          முற்றும் விட்டகல வேண்டும்.

    ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
          அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
    பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
          பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
    உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
          உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
    வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
          வாழி! நின்ன தருள் வாழி!

    ஓம் காளி! வலிய சாமுண்டீ!
    ஓங்காரத் தலைவி! என் இராணி! 

Wednesday, June 19, 2013

பழமொழிகள்

ஒரு சில தமிழ்ப் பழமொழிகள்

ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
 ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
 இக்கரைக்கு அக்கரை பச்சை.
 இனம் இனத்தையே சாரும்.
 இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
 இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
 ஈர நாவிற்கு எலும்பில்லை.
 உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய 
 உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
 உளவு இல்லாமல் களவு இல்லை.

 உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப 
 உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
 ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
 ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
 எளiயாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
 எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே, 
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
 எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
 எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

 எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
 எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு. 
 கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
 கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
 கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
 கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
 கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,  நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
 கடுகு சிறுத்தாலும் காரம் குறை யாது.
 கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும். 
 கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.

 கரும்பு தின்னக் கூலியா?
 காலம் போகும் வார்த்தை நிற்கும்.
 காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
 காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
 காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
 காற்றுள் போதே தூற்றிக்கொள்.
 நாளை கிடைக்கப்போகும் பலாக்காயினும் இன்று கிடைக்கும் களாக்காய் மேல்.
 குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
 குடல் காய்ந்தால் குதிரை  வைக்கோல் தின்னும்.
 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

 குளiக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
 கெண்டையைப் போட்டு வராலை இழு.
 கெடுவான் கேடு நினைப்பான்.
 கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
 கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
 கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
 கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
 கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
 கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
 சர்க்கரை என்றால் தித்திக்குமா?

 சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
 சிறு துரும்பும் பல் குத்த  உதவும்.
 சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
 சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
 சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
 சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
 தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
 தன் கையே தனக்கு உதவி.
 தன் வினை தன்னைச் சுடும்.
 தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.

 தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
 தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
 தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
 தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
 தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
 தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
 துணை போனாலும் பிணை போகாதே.
 துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
 தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
 தூங்குகிற பசு பால் கறக்காது. 

 நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
 நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும். 
 நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
 நிறை குடம் நீர் தளும்பாது.
 நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
 நெருப்பு இல்லாமல் புகை இருக்காது. 
 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
 பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்
 பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே.
 பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

 பாம்பின் கால் பாம்பு அறியும். 
 பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன். 
 பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி. 
 மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை, பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். 
 வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
 வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
 விளையாட்டு வினையாயிற்று.
 வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும். 
 வெறுங்கை முழம் போடுமா?

 வெளுத்ததெல்லாம் பாலா, கறுத்ததெல்லாம் தண்ணீரா?
 வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
 வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?

உத்தர்கண்ட் வெள்ளம்

ஆண்டுதோறும் ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் சென்று வருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பக்தர்களை அழைத்துச் செல்ல டெல்லியில் பல டூரிஸ்ட் நிறுவனங்கள் உள்ளன. இந்த ஆண்டு எதிர்பாராமல் இப்படியொரு அதிர்ச்சி. யாத்ரீகர்கள் சுமார் 75000 பேர் அந்தப் பகுதியில் பெய்த மழை வெள்ளம், நிலச்சரிவில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். எங்கள் நண்பர் திரு செல்வவிநாயகமும் அவர் மனைவியும் தொடர்பு எல்லைக்கு அப்பால் எங்கோ சிக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய குழந்தைகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரமாயிரம் யாத்ரிகர்கள் நலமாக வந்து சேர இறைவனை பிரார்த்திப்போம். அந்த வெள்ளக் காட்சிகள் சிலவற்றை இங்கு பாருங்கள்.
photos: courtsy: Visu Iyer.

Tuesday, June 18, 2013

நியுயார்க் நகரம்

இன்றைய நியுயார்க் நகரம் பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் நகரம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகரம் எப்படி இருந்திருக்கும்? தெரிந்து கொள்ள நமக்கு ஆசை இருக்கிறதல்லவா? இதில் ஐந்து படங்களைப் பாருங்கள். அத்தனையும் அன்றைய நியுயார்க். இப்போது அந்த நகரத்துக்குச் சென்று பார்த்தவர்கள் இதனை அதிகமாக ரசிக்க முடியும். பாருங்கள்!

Delency Street in Lower East side New York. Photo taken on 29-7-1908

                           Manhattan Bridge under construction. Photo taken on 5-6-1908

6th Avenue, 40th Street of Manhattan. The man reading the News paper reads the news "Nazi Army 75 miles away from Paris"  on 18-5-1940

                                          3rd Avenue Elevated Train across Lower Manhattan

                                      42nd Street in 1890, Two small girls walking along the road.

Monday, June 17, 2013

நல்வழி

 ஆசிரியர்: ஒளவையார் 

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து து¡மணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

1. புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.

2.சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட் டாங்கில் உள்ள படி .

3.இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழல் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

4.எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லால்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.

5.வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்திவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்து¡ரம் தாம்நி¨ந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

6.உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்க்கம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேரி னால்என்
உடலோடு வாழும் உயிர்க்கு.

7.எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல் நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

8.ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - கேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 

9.ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று(
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

10.ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென்(று) இட்டுண் டிரும் .

11.ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.

12.ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.

13.ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்பவர் - ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்.

14.பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கள்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச் சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.

15.சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத அல்லாம்
மிதியே மதியாய் விடும்.

16.தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

17.செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவம் என்னஅறிந்(து) அன்றிடார்க்(கு) இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்.

18.பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டா - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் .

19.சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.

20.அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.0

21.நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.

22.பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம் .

23.வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை .

24.நீறில்லா நெற் றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை .

25.ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

26.மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனில்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

27.ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல் .

28.உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன = கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.

29.மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - கரந்தமுதம்
கற்றா தால்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர் .

30.தாம்தாம்முன் செய்தவினை தாமே அநுபவிப்பார்
பு ந்தா மரைபோல் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமே விதி.

31.இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ் சாத்
தாரத்தின் நன்று தனி .

32.ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

33.வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்திப்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தில்
வேருக்கு நெக்கு விடும்.

34.கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாரும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.

35.பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - து¡வா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. 

36.நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்டொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.

37.வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நு¡லகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி. 

38.நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 

39.முப்பதால் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு .

40.தேவர் குறளும் திருநான் மறைமுடிவு ம்
முவர் தமிழும் முனிமொழியு ம் - கோவை
திருவா சகமும் தி முலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். 

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டைப் படமெடுத்த ராணுவ அதிகாரி


தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒரு செய்தி. அந்த செய்தியின்படி கேரளத்திலுள்ள கண்ணூர் எனுமிடத்தில் வானில் பறந்த ஒரு பறக்கும் தட்டை ராணுவ அதிகாரியொருவர் தன்னுடைய கைபேசியின் மூலம் படமெடுத்ததாக அவருடைய மனைவி தெரிவித்திருக்கிறார்.

மேஜர் செபாஸ்டியன் சசாரியா என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர். இவர் ஒரு புதிய கைபேசியை வாங்கினார். அதில் புகைப்படமெடுக்கும் வசதி இருந்ததால் கண்ணூரில் இவர் பல படங்களை எடுத்திருக்கிறார். அப்படி எடுத்த ஒரு படத்தில் பறக்கும் தட்டு ஒன்று காணப்படுவதைக் கண்டு இவர் அதிசயித்துக் குரல் எழுப்பியிருக்கிறார். முதலில் இவர் பறக்கும் தட்டை படமெடுத்ததாகச் சொன்னதை மற்றவர்கள் நம்பவில்லை. ஏதோ தமாஷ் செய்கிறார் என்று நினைத்தார்கள்.

மேஜர் செபாஸ்டியன் அந்தப் பறக்கும் தட்டைத் தன்னுடைய கண்களால் பார்க்கவில்லை. ஆனால் அவர் எடுத்த புகைப்படமொன்றில் அந்த பறக்கும் தட்டு காணப்படுவதைக் கண்டு மற்றவர்கள் ஆச்சர்யமடைந்தனர். ஊர் சுற்றி புகைப்படமெடுத்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய், இது குறித்த இணைய தளங்களையும், அமெரிக்க விண்வெளி நிலையம் நாசா குறித்த இணையதளங்களுக்கெல்லாம் தோண்டித் துறுவி ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள்.

எதிலும் சந்தேகம் தீராத இவர்கள் அந்த கைபேசியை உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்குத் தொலைபேசியில் பேசி, அந்த கைபேசியில் ஏற்கனவே இதுபோன்ற ஏதாவது உருவம் பதிவு செய்யப்பட்டிருந்ததா, அல்லது புதிதாக எடுத்தப் படத்தில்தான் அது வந்திருக்கிறதா என்றெல்லாம் விசாரித்திருக்கிறார்கள். அந்த நிறுவனம் அப்படியெல்லாம் எந்த படத்தையும் கைபேசியில் பதிவு செய்து வைத்திருப்பதெல்லாம் கிடையாது, புதிதாக நீங்கள் படமெடுத்த போதுதான் அது பதிவாகியிருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.

பிறகுதான் அவர்களுக்குப் புரிந்தது, தாங்கள் அதிசயத்தக்க ஒரு பறக்கும் பொருளை படமெடுத்திருப்பது. திரைப்படங்களில்தான் பறக்கும் தட்டு போன்றவைகளையெல்லாம் பார்த்திருந்த இவர்களுக்கு, இது ஒரு அதிசயமாகப் பட்டது. இதை இப்போது என்ன செய்வது, பார்த்தார்கள், அந்தப் படத்தை எடுத்து பத்திரிகையாளர்களிடம் கொடுத்து விட்டார்கள். இந்தப் படத்தைத் தாங்கள் வைத்துக் கொண்டு, அதில் பறக்கும் தட்டு பதிவாகியிருக்கிறது என்று சொல்லப்போக, அதைக் கேட்பவர்கள் இது பொய் என்றும், அப்படியொரு பொருள் கிடையாது என்றும் விவாதித்துத் தங்களை சங்கடத்தில் ஆழ்த்திவிடுவார்களோ என்று பயந்து அது தங்கள் கையைவிட்டுப் போனால் சரி என்று பத்திரிகாளர்கள்தான் இதற்குச் சரி என்று அவர்களிடம் கொடுத்துவிட்டார்கள். படத்தை எடுத்தவர் ராணுவ அதிகாரி என்பதால் அவர் இதுகுறித்து எந்த சர்ச்சையிலும் ஈடுபட விரும்பவில்லை.

இந்த விஷயத்தை பெங்களூரிலிருக்கும் வான்வெளி ஆராய்ச்சி மையத்துக்குத் தெரிவித்த போது, அங்கிருந்த பேராசிரியர் ஜெயந்த் மூர்த்தி என்பவர் இதெல்லாம் சும்மா, பறக்கும் தட்டுகள் என்பதெல்லாம் கிடையாது என்று அறிவித்து விட்டார். ஏதோவொரு பொருளின் பிரதிபிம்பம் இதுபோல ஒரு உருவத்தை உருவாக்கிக் காட்டி படத்தில் பதிந்திருக்கலாம், உண்மையாக அப்படி எதுவும் பறந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். எது உண்மை? பறக்கும் தட்டு இருந்தது உண்மையா? அதை படம் எடுத்தபோது அது பதிவானது உண்மையா? அல்லது அது ஒரு பொருளின் பிரதிபிம்பமாக இருந்து அதிர்ஷ்ட வசமாக படத்தில் பதிவானதா, எது உண்மை? தெரியவில்லை.

செய்தி: நன்றி: தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் 18 ஜூன் 2013, திருச்சி பதிப்பு.


The beginning of Tamil journalism

The beginning of Tamil journalism
S. MUTHIAH
C.R. Srinivasan bought the Whiteaway's building shortly after Independence and linked the Swadesamitran's fortunes with it. He named it Victory House, marking the success of the `Quit India' movement. It is here that one saw the birt h of Tamil journalism.

ACROSS FROM D'Angeli's Hotel were two Indo-Saracenic buildings that were landmarks in Madras throughout the 20th Century. The former no longer exists, replaced by a typical tasteless highrise, but in its loss only a bit of the city's architectural heritage has been lost. The latter underwent one remodelling, and is in the throes of another, but neither marks the significance of what flourished behind its once-handsome façade, namely, the beginnings of Tamil Journalism.
The building that vanished was first known as Tawker's Building. The Tawkers from Gujarat - a family that still calls Madras home - were the city's leading jewellers in the 19th Century, their business having been established in the city in 1761, shortly after they arrived here. The family was equally renowned for its philanthropy. A trust endowed by two women of the family built the Sri Kasi Viswanathar Temple in 1805 and the neighbouring Tawker's Choultry in Ayyanavaram and endowed several other charities. The Choultry was being used as a students' hostel the last I heard of it, but the tradition of the Tirupati umbrellas taken to Tirumala from Madras being kept in the Kasi Viswanathar Temple for the night still continues.
T.R Tawker and Sons bought the Mount Road site in 1893 and had Henry Irwin design them a showroom worthy of their jewellery and gem collection. T. Manavala Chetty, the contractor, built a building to last; little did he dream that in 80 years, it would be deliberately pulled down. When the golden era of Tawker's began to dull, the firm sold the building to the Rajah of Venkatagiri in 1926 who, in turn, sold it to Kasturi Estates five years later. The South Indian Cooperative Insurance Society, founded in 1932, bought the property in 1948 and, on the nationalisation of insurance in 1956, it became the Life Insurance Corporation's. From 1953, Indian Airlines occupied its ground floor in considerable spaciousness, but when it moved into its more modern offices in 1979, the LIC, an organisation not the most sympathetic to heritage or architecture, decided to pull it down. And so the building came down in 1980 - a classical Irwin design with a clock almost as famed as P.Orr's lost forever.
Next door remains the building that VGP, those pioneers of consumer durables' hire purchase, keep remodelling as they refurbish what has become a giant showroom. Interestingly, the building's beginnings go back to another merchandiser of consumer products. In the 1890s, Whiteaway, Laidlaw's, `Furnishers and General Drapers', were as much into textile retailing and tailoring as they were into selling a whole range of household requirements. The firm had branches throughout British India as well as in the capitals of many of the other British colonies in the East. Looking very much like its neighbour, the Whiteaway's building could very likely have been built around the same time as the Tawker's Building by the same team. But where it got the name it became known by, Victory House, is something I have not been able to discover with any certainty.
A story I've heard is that when C.R. Srinivasan bought the building shortly after Independence and linked the Swadesamitran's fortunes with it he named it Victory House, marking the success of the `Quit India' movement. Others hold that it's an older name, going back to Whiteaway's commemorating the Allied victory in the Great War. Whatever the reality, it is as the home of the Swadesamitran that I knew Victory House, even if most of the activities of that pioneering Tamil daily took place well behind the handsome Mount Road façade.
Rajavritti Bodhini and Dina Varthamani in 1855 and Salem Pagadala Narasimhalu Naidu's fornightlies, Salem Desabhimini in 1878 andCoimbatore Kalanidhi in 1880, were the earliest Tamil journals. But in 1882 there arrived on the Tamil publishing scene a journal that would transform Tamil Journalism. It was started by G. Subramania Aiyer, the Founder-Editor of The Hindu, while he was still with the paper he had founded. He was more familiar with English, but he was to hone his Tamil with the Swadesamitran; in the event he was never to become a great Tamil writer, but he created a whole new Tamil political vocabulary. His foray into Tamil journalism was to be later explained by Narasimhalu Naidu so: "(He) was conscious that those with a knowledge of English are a small number and those with a knowledge of Indian languages the vast majority. He felt that unless our people were told about the objectives of British rule and its merits and defects in the Indian languages, our political knowledge would never develop." Subramania Aiyer, an Anglophile in his early years, saw himself as a bridge of understanding and communication between the ruler and the ruled.
When Subramania Aiyer quit The Hindu 1898, feeling so fettered by his partner that he could not wage his impassioned campaigns for social reforms, he made the Swadesamitran his full-time business. Operating from premises at the rear of Whiteaway's, he made it a thrice-weekly paper, then, in 1899, the first Tamil daily. It was to enjoy this status for 17 years - and even thereafter did not meet any real challenge till Swararajya started in 1925, Tamil Nadu in 1927 andDinamani in 1934, but they too were unable to shake theSwadesamitran's primacy till the 1950s.
Subramania Aiyer's "pugnacious style, never qualifying words to soften the sharp tenor of a sentence," his use of words "dipped in a paste of extra pungent green chillies," made the Swadesamitransought by the zamindars and the plutocrats by the "Sanga Boyans and the Rama Boyans" as well as women and Tamils wherever they lived in the world. And the daily became even more popular when Subramania Bharati joined it in 1904. But with two heavyweights, something had to give way and Bharati left in 1906 to start his weekly, India. The next year, when Lala Lajpat Rai was arrested and agitation followed in the Punjab, Subramania Aiyer's attitude to the British changed and he became a trenchant political critic of the Raj. Arrested in 1908 for sedition, he broke when faced with hard labour and was a beaten man thereafter. Nevertheless, Bharati in 1914 wrote of him, "unaided he has made Tamil Journalism a fact of the world in spite of his imperfect early training in Tamil. ... They win who dare; Mr. Aiyer dared and he has succeeded in establishing a Tamil daily journal which, with all its faults, is the most useful paper in the Tamil country. His whole political gospel can be summed up in these words: `Peaceful but tireless and unceasing effort.' Let us sweat ourselves into Swaraj, he would seem to say."
Seriously ill in 1915, Subramania Aiyer persuaded A. Rangaswami Iyengar, Kasturi Ranga Iyengar's nephew and right-hand man at The Hindu, to take over the paper and he made the Swadesmitran "a new force, potent and pervasive... (changing) the placid atmosphere of Tamil Journalism". Rangaswami Iyengar brought in his kin C.R. Srinivasan to manage the business end of the paper and Bharati, back from Pondicherry, rejoined the paper in 1920. The three made the Swadesamitran " a literary masterpiece of political analysis."
When Rangaswmi Iyengar returned to The Hindu in 1928 to become a memorable editor, Srinivasan bought him out. And the readers of theSwadesamitran discovered what a trenchant writer Srinivasan could be. He made the paper such a success that he could buy the Whiteaway's building and make it better remembered as the home of the Swadesamitran. But after his death in 1962, the paper began to fade, especially in the face of the `new journalism' introduced by theDina Thanthi. And by the 1970s, the end was inevitable, a sad end to a paper that had created Tamil Journalism. 

(Courtesy: The Hindu 23rd July 2003)


Tuesday, June 11, 2013

தனிப்பாடல்கள்

தமிழில் பல தனிப்பாடல்கள் இருக்கின்றன. அதில் மூன்றை மட்டும் இங்கு தருகிறேன். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

ஆற்றங்கரை பிள்ளையாரின் திருமணத்துக்கு யார் பெண் தருவார்?

ஆற்றங்கரை படித்துறைகளில் எல்லாம் அனேகமாக ஒரு அரசமரமும், அருகில் ஒரு பிள்ளையாரும் நிச்சயம் காணலாம். பிள்ளையார் பாவம் இப்படி தனிமையில் உட்கார்ந்திருக்கிறாரே, அவருக்கு யாராவது பெண் கொடுத்துத் திருமணம் செய்வித்து அவரைக் குடியும் குடித்தனமுமாகப் பார்த்தால் என்ன. ஒரு புலவருக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டுவிட்டது. ஆவர் பாடுகிறார் இப்படி:

"வீரம் சொரிகின்ற பிள்ளாய்
உனக்குப் பெண் வேண்டுமென்றால்
ஆரும் கொடார், உங்கள் அப்பன்
கபாலி; அம்மான் திருடன்
ஊரும் செங்காடு; நின்தன் முகம்
யானை; உனக்கு இளையோன்
பேரும் கடம்பன்; உன் தாய் நீலி
நிற்கும் பெருவயிறே."

வீரம் ததும்பும் முகமுடைய விநாயகப் பெருமானே! இப்படி ஆற்றங்கரையில் வந்து உட்கார்ந்திருக்கிறீரே? உனக்குப் பெண் கொடுக்க எவரும் தயாராயில்லையே, யாரும் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே. காரணம் என்ன தெரியுமா விநாயகா? உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார். உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி. உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு. உன்னுடைய முகமோ யானை முகம். உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன். உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி. உனக்கோ பானை வயிறு? பின்பு யார் பெண் கொடுப்பார். இதைக் கேட்டு விநாயகர் எழுந்தார், எதிரில் நிற்கும் புலவருக்கோ கண் தெரியாது. அந்தகக் கவி. என்ன செய்வது, ஒழிந்துபோ என்று விட்டுவிட்டார்.



பொய் சொல்லலாமா? யாரிடம் சொல்லலாம்? எங்கு சொல்லக்கூடாது?

"பொய்யருக்குப் பொய் உரைத்தால் வெற்றியாம்;
அவருக்குப் பொய்யாகாத
மெய்யருக்குப் பொய்யுரைத்தல் தேய்பிறைபோல்
தவம் குறையும், மிடியுண்டாகும்
துய்ய தாய் தந்தையர்க்குப் பொய்யுரைத்தால்
வறுமை பிணி தொலையா; என்றும்
உய்யவருள் தேசிகற்குப் பொய் உரைத்தால்
நரகமது உண்மைதானே."

அந்தகக் கவி வீரராகவர் பாடியுள்ள கவிதை இது. பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவனிடம் பொய் சொன்னால் வெற்றி உண்டாகும்; பொய் சொல்வதை விரும்பாத ஒருவனிடம் போய் பொய் சொன்னால் நாம் செய்த புண்ணியங்கள் தேய்பிறை போல் மெல்ல தேய்ந்து போகும்; அதோடு விட்டுவிடுமா வறுமைப் பிணி பீடிக்கும்; தூய்மையான பெற்றோர்களிடம் போய் பொன் சொன்னால், நம்மைப் பீடித்திருக்கிற வறுமையும் பிணியும் நீங்கவே நீங்காது; வாழ வழிகாட்டும் ஆசிரியரிடம் பொய் சொன்னால் நரகத்துக்குச் செல்வது நிச்சயமாம்.


கல்வி மட்டும்தான் சதமென எண்ணினேனே!

"அட கெடுவாய்! பல தொழிலும் இருக்கக் கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
திட முளமோ கனம் ஆடக் கழைக் கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லை;
தட முலை வேசையராகப் பிறந்தோமில்லை
சனியான தமிழை விட்டுத் தையலார்தம்
இட மிருந்து தூது சென்று பிழைத்தோமில்லை;
என்ன சென்மம் எடுத்துலகில் இரக்கின்றோமே!"

தமிழ் படித்து புலமை மிகுந்தோம் எனும் பெருமையோடு செல்வம் மிகுந்தாரிடம் சென்று ஈயென்று இளித்துப் பல்லெல்லாம் தெரியக் காட்டி இரந்து நிற்கும் கேடுகெட்ட ஜென்மமே! (தன்னையே சொல்லிக் கொள்வது) என்ன ஜென்மம் எடுத்தாய் நீ! உலகத்தில் பிழைப்புக்காக செய்யக்கூடிய தொழில்களா இல்லை. அத்தனை வழிகள் இருக்கும்போது அதையெல்லாம் விடுத்து கல்விதான் உயர்ந்தது, அறிவுக் கண்ணைத் திறக்க வல்லது என்று அறிவில்லாமல் கல்வி கற்றாயே! மாறாக நடுத் தெருவில் மக்கட் கூட்டத்தின் மத்தியில் உயர்ந்த கம்பங்களை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணைத்து அந்தக் கயிற்றின் மீது ஏறிநின்று ஆடுகின்ற கழைக்கூத்தை ஆடத் தெரிந்து கொள்ளவில்லை; தெருவில் ஒரு கூடையைக் கவிழ்த்து அதில் மாங்கன்றை முளைக்க வைத்துக் காட்டும் செப்பிடுவித்தையைக் கற்று தேரவில்லை; அதெல்லாம் போகட்டும் உடல் அழகை உள்ளபடி காட்டி ஆண் மனங்களைச் சலனப்படுத்தி அவர்களிடமிருந்து காசைப் பறிக்கும் வேசியாகவும் பிறக்கவில்லை; இந்தச் சனியன் பிடித்த தமிழை உயிர் என்றும், உணர்வென்றும், மூச்சு என்றும், செல்வம் என்றும் எண்ணி தமிழைப் படித்ததற்குப் பதிலாக கணிகைப் பெண்களுக்குத் தூது போயாவது பிழைக்கவும் முடியவில்லை, என்னடா ஜென்மம் எடுத்து இப்படி கால் காசுக்கும் அரைக் காசுக்கும் லோலோ வென்று அலைந்து பிச்சை எடுக்கிறேனே! என்ன பிறவி என் பிறவி என்று ஏங்கித் தவிக்கும் ஒரு ஏழைப் புலவனின் ஓலக் குரல் இது.



Monday, June 10, 2013

வெற்றிவேற்கை (8)


வெற்றிவேற்கை (8)

வெற்றிவேற்கை விளக்கக் கட்டுரையின் நிறைவுப் பகுதி இது. சிறார்களுக்கான இலக்கியம் என்று இதுபோன்ற இலக்கியங்களை நாம் அலட்சியப் படுத்திவிடக் கூடாது. சின்னஞ்சிறிய வயதில் மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துக்களை இதுபோன்ற இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. படிக்கின்ற காலத்தில் இதன் முக்கியத்துவம் தெரியாமலே படித்து பின்னர் மறந்தும் போய்விடுகின்றோம். அதனால்தான் இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்க வேண்டும். இராமாயணக் கதை தெரியாதவர் எவரேனும் நம்மில் இங்கு உண்டோ? அப்படி இருந்தும் ஒவ்வொரு ஊரிலும் எத்தனை முறை இராமாயணம் சொல்லும் போதும் நாம் திரும்பத் திரும்பப் போய்க் கேட்கிறோமே, ஏன்? நல்ல விஷயங்களை அப்படி பலமுறை கேட்பதால் அவை நம் அடிமனதில் பதிந்து தவறு செய்யாமல் நம்மைக் காக்கும் என்பதால்தான். அதுபோலவே இதுபோன்ற நீதிநூல்களை அடிக்கடிப் படித்து நினைவில் கொள்ள முயற்சி செய்வோமே!

71. தன் ஆயுதமும் தன் கையிற் பொருளும்
பிறன் கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.

ஒருவன் தன் வாழ்க்கையை நடத்த ஏதேனும் ஒரு தொழில் புரிந்தே ஆகவேண்டும். அப்படி ஒரு தொழில் செய்ய என்னென்ன தேவை. தொழில் நடத்த ஒரு இடம் தேவை. மூலதனம் தேவை, உழைக்க ஆட்கள் தேவை, அவர்களை வழிநடத்த முதல் போடுபவனின் உழைப்பு தேவை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தொழில் நடத்த விரும்புகின்றவன் தன்னிடமுள்ள இடம், தளவாடங்கள், மூலதனம் இவை அனைத்தையும் வேறொருவன் கையில் கொடுத்துவிட்டு தான் நிம்மதியாகப் படுத்து உறங்குவானானால், அவனால் என்ன சாதிக்க முடியும்? அப்படிப்பட்டவன் சோம்பேறியாக எதற்கும் பயனின்றி வீணில் பொழுதைக் கழிக்கும் அறிவிலியாக இருப்பான். அவன் இந்த சமூகத்தில் ஒரு பதரைப் போன்றவன்.

72. வாய்ப்பறை ஆகவும் நாக்கடிப்பு ஆகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்.

இப்போது போல தொலை தொடர்பும், ஒலி பெறுக்கி, வானொலி, தொலைக்காட்சி இவைகள் வராத காலத்தில் ஊர்மக்களுக்கு ஒரு செய்தியை அறிவிக்க பறை அறைந்து ஒருவன் தெருத்தெருவாகப் போய் சொல்ல வேண்டிய செய்தியை "இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் ......." என்று தொடங்கி சொல்ல வந்த செய்தியைச் சொல்லிக் கொண்டே செல்வான். அதற்கு அவனுக்குப் பயன்படுவது பறையும், கையில் இரு குச்சிகளும்தான். குச்சிகளைக் கொண்டு பறையை அடித்துக் கொண்டு செய்தியை பரப்புவது அவன் தொழில். பறையொலி கேட்டதும் மக்களும் ஏதோவொரு செய்தி சொல்ல வந்து கொண்டிருக்கிறான், என்னவென்று கேட்போம் என்று கவனமாக இருந்து செய்திகளை அறிந்து கொள்வார்கள். அதுபோலவே அந்தக் காலத்தில் பெரியோர்கள் மக்களுக்கு ஏதேனும் நல்ல செய்திகளை, அறிவுரைகளை, வழிகாட்டுதல்களைச் சொல்ல வேண்டுமானால், தங்களது வாயைப் பறையாகவும், நாக்கை குச்சிகளாகவும் பயன்படுத்தி செய்திகளை, அறிவுரைகளைச் சொல்லுவார்கள். அப்படி அவர்கள் சொல்லும் நல்ல செய்திகளை மக்கள் கவனத்துடன் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.

73. பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால்
மெய்போலும்மே மெய்போலும்மே.

சிலருக்குப் பொய் பேசுதல் என்பது இயல்பானது. வாயைத் திறந்தால் பொய்கள் வந்து கொட்டும். பொய் பேசுபவனுக்கு, பொய் பேசாமல் சிறிது நேரம்கூட இருக்க முடியாது. யாரிடமாவது ஏதாவதொரு பொய்யை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருப்பான். அப்படி அவன் பொய் பேசுவதில் அவனுக்குக் கொஞ்சம் கூட கூச்சமோ, அவமானமோ கிடையாது. அவனுக்குத் தொழில் பொய் பேசுதல். அப்படிப்பட்டவர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டு அவனைக் கண்டதுமே இவன் இனி பேசப்போகின்றவை அனைத்தும் பொய்களே, அவற்றை நம்பிவிடக்கூடாது என்று மனத்தை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். சாதாரண மக்களைக் காட்டிலும் இதுபோன்றவர்கள் அதீத திறமைசாலிகளாக இருப்பர். அவர்கள் சொல்லும் பொய் உண்மை போலவே இருக்கும். சந்தர்ப்பங்களை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் சொன்னது மெய்யோ என்று எண்ணத் தோன்றும், அத்தகைய வாசாலகர்கள் அவர்கள். அவர்களைப் போன்றவர்கள் சொல்லும் செய்திகளை நன்றாக ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

74. மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே.

சிலர் உண்மையை மட்டுமே பேசுவார்கள்; பொய் பேசத் தெரியாதவர்கள். ஆனால் அவர்களுக்குப் பொய் பேசுபவனைப் போல வாசாலகமாகப் பேசி பிறரை நம்ப வைக்கவோ, சரளமாகப் பேசவோ தெரியாது. அதனால் அவன் உண்மையைத் தட்டுத் தடுமாறி சொல்லும் முறையைப் பார்த்து, இவன் பொய் சொல்லுகிறானோ என்று எண்ணத் தோன்றும். பொய் பேசுபவனுக்குத்தான் நல்ல திறமை வேண்டும். உண்மை பேசுபவன் எதார்த்தவாதி, ஆகையால் அவன் வெகுஜன விரோதியாகவே இருப்பான். பேசும் திறன் இல்லாமையால் அவன் பேசும் உண்மை கூட பொய் போலத் தெரியும். அதற்காக அவன் பேசுவதெல்லாம் பொய் என்று எண்ணிவிடாமல், அவன் சொல்பவைகளை நன்கு ஆராய்ந்து பார்த்து அதிலிருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

75. இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந்தவர் தாம்
மனம் உற மறுகிநின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாள் ஆகும்மே.

நெடிய வரிகள் இவை. இதன் பொருளைப் பார்ப்போம். ஒருவர் மற்றொருவர் மீது ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு வழக்குத் தொடர்கிறார். வழக்கைத் தொடர்பவர் வாதி, வழக்குத் தொடுக்கப்பட்டவர் பிரதிவாதி. இவ்விருவரும் நீதிபதியிடம் செல்கின்றனர். அந்த நீதிபதி இவ்விருவரும் சொல்லும் கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். பின்பு அவர்கள் சொன்னவற்றில் இருக்கும் உண்மையை, நியாயத்தை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். பின்னர் அவ்விருவரும் ஒப்புக்கொள்ளும் விதத்தில் தன்னுடைய தீர்ப்பை நியாயம், நடுநிலை தவறாமல் அளிக்க வேண்டும். அப்படிக்கின்றி நீதிபதி நடுநிலை தவறி தீர்ப்புக் கூறிவிடுவாராயின் நியாயம் தன் பக்கம் இருப்பவர் வருந்தி கண்ணீர் சிந்துவர். அப்படி பாதிக்கப்பட்டவர் நீதி தவறிவிட்டதே என்று கண்ணீர் வடித்தால், அந்தக் கண்ணீர் தவறான தீர்ப்பை அளித்த நீதிபதியை மட்டுமல்ல, அவருடைய சந்ததி முழுவதையும் அறுத்து அழித்துவிடுகின்ற வாளாக மாறிவிடும். அவரைக் காக்க பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவருமே வந்து நின்றாலும் அவரைக் காப்பாற்ற முடியாது. தவறான தீர்ப்பைக் கொடுத்தவரும் அவருடைய சந்ததியினரும் அழிவது திண்ணம்.

76. பழியா வருவது மொழியாது ஒழிவது.
சிலர் உணர்ச்சிப் பெறுக்கில் பழிவரும் சொற்களைப் பேசிவிடுவர். உதிர்த்த சொல்லைத் திரும்பப் பெறமுடியாது. ஒரு பழமொழி உண்டு, 'வடக்கே போன மேகமும், பறத்தையர் வீட்டுக்குப் போன செல்வமும் திரும்ப வராது'. சொல்லுக சொல்லை அச்சொல்லை பிறிதோர் சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து. கோபமோ, மகிழ்ச்சியோ எந்த உணர்வில் இருக்கும்போதும் நாம் சொல்லுகின்ற சொல் நம் மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் வேண்டும். வீண் பழியை உண்டாக்கும் சொற்கள் தவிர்க்கப் படவேண்டும். நம்மை மறந்த நிலையில் கூட நம் வாயில் பழிச்சொற்கள் வரக்கூடாது; அப்படி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக பேசுகின்ற போதே நல்ல சொற்களை மட்டுமே பேசிப் பழக்கப்படுத்திக் கொண்டால், விரும்பினால்கூட தீய சொற்கள் நம் வாயில் வராது. கெட்ட, தீய சொற்களைச் சொல்லாமல் விடுதல் நன்று.

77. சுழியா வருபுனல் இழியாது ஒழிவது.
ஆற்றில் புதுவெள்ளம் வருகிறது. அந்த புதுவெள்ளத்துக்கு வேகம் அதிகம். அதனை உணராமல் அந்த ஆற்று சுழலில் ஒருவன் இறங்கினால் அது அவனை மூழ்கடித்துவிடும். மனமும் ஒரு ஆற்றைப் போன்றதுதான். அது கோபம், ஆத்திரம் அடையும்போது, சுழன்று வரும் காட்டாற்று வெள்ளம் போல வேகமாக வரும். அப்படி நம்மை அறியாமல் அந்த கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் ஆட்பட்டு அதில் இறங்கிவிடுவோமானால் அது நம்மை அடித்துக் கொண்டு போய் மூழ்கடித்து விடும். இந்த ஆபத்தை உணர்ந்து செயல்படுதல் விவேகமான செயல்.

78. துணையோடு அல்லது நெடுவழி போகேல்.
வாழ்க்கையில் நாம் எந்த முடிவையும் எடுக்கும் முன்பாக நம்மீது உண்மையான அக்கறையும் பற்றும் உள்ள ஒருவரிடம் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது நல்லது. எல்லா நேரங்களிலும் நம் மனம் சரியாக சிந்தித்து முடிவெடுக்கும் என நம்பமுடியாது. சில சந்தர்ப்பங்களில் நாம் தனித்து எடுக்கும் முடிவு தவறானதாகக்கூட இருந்து விடலாம். அதனால் ஏற்படும் விளைவுகள் நமக்குப் பாதகமாக அமைந்துவிடும். நெடுவழிப் பயணம் மேற்கொள்ள விருக்கிறோம். அப்படி நெடும்பயணம் போகும் போது வழியில் என்னென்ன இடையூறுகள் வரலாம், என்னென்ன தடைகள் ஏற்படும், ஆபத்துக்கள் வந்தால் எப்படி சமாளிப்பது போன்ற பலவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்படியானாலும் தனித்து அவற்றைச் சமாளிப்பதைக் காட்டிலும் உடன் ஒருவன் துணையாக வந்தால் நம் பயணம் இனிதாக முடியும் அல்லவா. ஆகவேதான் நெடுவழியில் பயணம் செய்யும்போது ஒரு துணையையும் கூட்டிச் செல்வது நலம். அந்தப் பயணம் வாழ்க்கைப் பயணம் என்றால், வாழ்க்கைத் துணைவி, மனைவி துணையாக வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

79. புணை மீது அல்லது நெடும்புனல் ஏகேல்.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நமக்குத்தான் நீச்சல் தெரியுமே என்று அதில் இறங்கிவிடக் கூடாது ஆற்று நீரின் வேகம் பொதுவாக ஆபத்தானதாக இருக்கும். ஆகவே ஆற்றைக் கடக்க படகு, பரிசல்  அல்லது தெப்பம் இவற்றைக் கொண்டு கடக்க வேண்டுமே தவிர நீந்திப் போய்விடலாம் என்று ஆற்றில் இறங்கிவிடக் கூடாது. எந்த வேலையில் இறங்கும் போதும் அதிலுள்ள சாதக பாதங்களைக் கணக்கிட்டு, பாதகமாக இருக்குமென்றால் அதற்குத் தேவையான பாதுகாப்புகளைப் பலப்படுத்திக் கொண்டு அந்த காரியத்தில் ஈடுபடவேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வு தேவை என்பதை இந்த வரி நமக்குக் கூறுகிறது.

80. எழில் ஆர்முலைவரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே.

இது மிக முக்கியமான அறிவுரை. பொதுவாக ஆண், பெண் இருபாலரிலும் ஆண்களே, பெண்களைக் கண்டு மயங்கி, தன்வயம் இழந்து, புத்தி கெட்டு பொருந்தாத செயல்களைச் செய்யத் துணிபவர்கள். சபலம், அல்லது பெண்களின் அழகிய மார்பு, செவ்வரி படிந்த மயக்கும் கண்கள், சாகசமான பேச்சு இவற்றால் மதிமயங்கி செய்யக்கூடாதவற்றையும் செய்யத் துணிந்துவிடுவார்கள். இது உலக இயற்கை. இறைவன் படைப்பில் பெண்களுக்கு அத்தகைய சாகசத்தைக் கொடுத்து, ஆணுக்கு பலவீனத்தையும் கொடுத்து படைத்திருக்கிறான். அழகிய பெண்கள் என்பதற்காக, அவள் சாகசமாக இன்பம் தரும் சொற்களைக் கொஞ்சிக் கொஞ்சிச் சொல்கிறாள் என்பதற்காக ஏமாந்துவிடாமல் இருப்பவனே ஆண்மகன். ஒரு பெண்ணுக்கு மிகவும் சிரமமான காரியமொன்று ஆகவேண்டியிருக்கிறது. அவள் அடுத்த பெண்ணிடம் சொல்வாள், அதோ பார் அங்கு ஒரு அசடு, பெண்களைப் பார்த்து வழிந்து கொண்டிருக்கிறது. அதனிடம் சொன்னால் போதும் ஓடிப்போய் இந்தக் காரியத்தை செய்துமுடித்துவிட்டு வந்து நிற்கும், அதனிடம் சொல்லி இந்தக் காரியத்தை முடித்துக் கொள்ளலாம் என்பாள். புரிந்து கொண்டால் சரி! இதற்கு மேல் சொல்லி நமக்கு ஏன் வீண் வம்பு.

81. வழியே ஏகுக வழியே மீளுக.
எந்தவொரு செயலைச் செய்ய வேண்டியிருந்தாலும், அதற்குரிய நேர்வழியில் சென்று அந்தச் செயலை முடிக்க முயற்சி செய்தல் வேண்டும். எதற்கும் குறுக்கு வழி தேடக்கூடாது. நமக்கென்று சிலர் அமைவார்கள். இந்த செயலுக்கு ஏன் இப்படி அலைகிறாய், எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார், அவரிடம் சொன்னால் போதும் காரியம் முடிந்துவிடும் என்று குறுக்கு வழி காண்பிப்பார். வேண்டாம். எதையும் நேர் வழியில் சென்று சாதிப்போம். அதனால் கால தாமதம் ஆனாலும், செலவு ஆனாலும் பரவாயில்லை. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு தேவை. அவசரமாகப் போக வேண்டியிருப்பதால் ஒரு பயண ஏஜண்டிடம் சென்று யார் பெயரிலோ பதிவான ஒரு டிக்கெட்டில் பயணம் செய்கிறோம். சில நேரங்களில் அந்த ஏஜெண்டே டிக்கெட் பரிசோதகரிடம் போட்டுக் கொடுத்து விடுவார். பாதி வழிப் பயணம் செய்கையில் அந்த பரிசோதகர் வந்து உன்னுடைய பெயர், முகவரி அனைத்தையும் துறுவித் துறுவிக் கேட்டு உண்மையை வரவழைத்து தண்டம் அழ வைத்துவிடுவார். தேவையா இந்த அவமானம். ஆகவே நேர்வழி செல்லுதலே வாழ்க்கையை நேர்மையாக நடத்தும் வழி. நம் போக்கும், வரத்தும் நேர்மையாக இருத்தல் அவசியம்.

82. இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே.
இதுவரை எண்பத்தியோறு அறவுரைகளைப் பார்த்தோம். பிறருக்கு புத்திமதி சொல்வதி எளிது. அதனைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இருந்தாலும் சொல்லுவதைச் சொல்லி வைத்தால், கேட்பவர்கள் கேட்டுக் கொண்டு அதன் வழி நடக்கட்டும், இல்லையேல் விதிவிட்ட வழி, நாம் என்ன செய்ய முடியும் என்று வாய்மூடி இருக்கத்தான் வேந்தும். இவ்வுலகத்தில் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய நீதிகளை இதுவரை பார்த்தோம். கடைபிடித்தல் அவரவர்க்குரிய உரிமை.

83. வாழிய நலனே! வாழிய நலனே!!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதல்லால் வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். அதுதான் எந்த இலக்கியமும் கூறும் சுப வாக்கியம் (ஸ்வஸ்தி வசனம்) . வாழி உலகம், வாழி மக்கள், வாழிய நலங்கள் எல்லாம்.

இதுவரை வெற்றிவேற்கை வாக்கியங்களைப் பார்த்தோம். நமக்குத் தெரிந்த வகையில் அதற்கு விளக்கங்களைக் கொடுத்தோம். பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி! வாழ்க!