பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 28, 2016

திருவையாற்றில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனை

                 
திருவையாற்றில் சலசலத்து ஓடும் காவிரியாற்றின் கரையில் ஸ்ரீமதி நாகரத்தினம்மாள் எனும் இசை, நாட்டியத் துறை வல்லவர் ஒருவர் தன் சொந்த முயற்சியால் எழுப்பி, இப்போது தியாகராஜ சுவாமிகள் ஆராதனைக் கமிட்டியால் நிர்வகிக்கப்படும் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சமாதிக்கு எதிரில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பந்தலில் ஏராளமான இசை ரசிகர்கள் முன்னிலையில் தலைசிறந்த இசைக் கலைஞர்கள் கூடி இன்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி ஆராதனை செய்கின்றனர்.

கர்நாடக சங்கீதம் இன்று வளம் பொங்கி நிற்பதற்குக் காரணமான கர்நாடக இசை மூவரில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஒருவர்; மற்ற இருவர் முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி. ராம பக்திக்கு ஆஞ்சநேயனை உதாரணமாகச் சொல்வார்கள். அந்த அனுமனைப் போல சதா காலமும் ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக் கொண்டு அவர் மீது பற்பல சாகித்யங்களை இயற்றிப் பாடி இன்று வரை அந்த கீர்த்தனங்கள் பல்லாயிரம் இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு வருகிறது என்பது எத்தகைய சாதனை?

ஸ்ரீதியாகராஜரின் ராமபக்தி, அவர் மீது இசைத்த சங்கீதம் இவைகளைத்தான் நாதோபாசனா என்கின்றனர். நாதத்தை, இசையை உபாசிப்பது, அதாவது வழிபடுவது என்பது இதன் பொருள். ஒருவன் தன் இதயத்தின் ஆழத்தில் பரவிக்கிடக்கும் பக்தியைச் சொற்களால் விளக்க முடியுமா? முடியும் என்பதைத் தன் சாகித்யங்களால் நிரூபித்துக் காட்டியிருப்பவர் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள். நமது வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும் இந்த பக்தியைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றன. அதை மிக எளிதாகத் தன் சாகித்தியங்கள் மூலம் இவ்வுலகுக்குக் கொடையாக அருளிச் செய்திருக்கிறார் தியாகராஜர்.
ஐந்து ஆறுகள் இந்தப் பகுதியில் ஓடுவதால் இவ்வூர் ஐயாறு எனப்பட்டதாக பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆறு என்பதற்கு மார்க்கம், வழி என்றும் பொருள் உண்டு. இறைவனின் பாதாரவிந்தங்களை அடைய பல துறைகள் உண்டு, அவற்றில் ஐந்து வழிகளைக் காட்டுமிடம் திருவையாறு என்பதால் இந்தப் பெயர் உண்டானதாகவும் சொல்வர். 
புராண வரலாறுகளின்படி திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி தந்தருளிய தலம் இது. சுந்தரமூர்த்தி சுவாமிக்கு திருக்கண்டியூரிலிருந்து ஐயாற்று ஈசனை தரிசிக்கவென்று காவிரி வெள்ளம் கடுகி விலகி வழிவிட்டதாகவும் செய்திகள் உண்டு. தனக்குப் பூஜைகள் செய்துவந்தவர் காசி சென்று திரும்பாததால், சிவனே அந்த வேதியர் வடிவம் தாங்கி தன்னையே பூசித்துக் கொண்ட நிகழ்ச்சியும் இத்தலத்துக்கு இருக்கிறது. இங்குள்ள அம்மைக்கு அறம்வளர்த்தநாயகி என்று பெயர். ஐயன் அளந்த இருநாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரெண்டு அறங்களைச் செய்ததால் இந்தப் பெயர் வந்ததாகக் கூறுவர்.

இப்படிப்பட்ட பெருமைகளை உள்ளடக்கிய திருவையாறு தலம் பண்டைய நாட்களிலிருந்தே கலைஞர்கள் வசித்து வரும் இடமாக இருந்திருக்கிறது. நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் காலத்தில் வந்த பெரும் கலைஞர்கள் எல்லாம் இங்கே வசித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வம்சம் தெலுங்கு பேசும் நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியிருந்தனர். அந்த வம்சத்தில் 1767ஆம் வருஷம் மே மாதம் 4ஆம் தேதி சர்வஜித் வருஷம் சைத்ர மாதம் சுக்ல சப்தமி புஷ்ய நட்சத்திர புண்யகாலத்தில் பிறந்த குழந்தைதான் தியாகராஜர். இவர் வாழ்ந்த சூழ்நிலை, இராம பக்தி ஆகியவை காரணமாக இவர் சுமார் இருபத்திநாலாயிரம் கீர்த்தனங்களை இயற்றியுள்ளார். இவருடைய தாய் மொழி தெலுங்கு, ஆகையால் இவரது பெரும்பாலான பாடல்கள் தெலுங்கு மொழியில் அமைந்துள்ளன. சம்ஸ்கிருத மொழியில் சில பாடல்கள் உண்டு, அவைகளில் பஞ்சரத்ன கீர்த்தனைகளுள் ஒன்றான “ஜகதானந்ததாரகா” எனும் பாடல் மிகவும் பாராட்டத் தகுந்த பாடல். இவருடைய கீர்த்தங்கள்தான் இன்றைக்கும் கர்நாடக இசைக்கு உயிர் மூச்சாக இருந்து வருகிறது என்பதிலிருந்தே இசையின் மீது இவருடைய தாக்கம் எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஸ்ரீதியாகராஜர் பிரம்மச்சாரியா, கிருஹஸ்தரா, சந்நியாசியா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் என்பதிலிருந்து இவர் ஒரு சந்நியாசி என்று நினைப்பர். ஆம் தன் வாழ்வின் கடைசி கட்டத்தில் இவர் துறவறம் மேற்கொண்டதால் அதுவும் சரியே. தனது 18ஆம் வயதில் இவர் பார்வதி எனும் பெண்ணை மணந்து கொண்டார், அவர் அடுத்த ஐந்தாம் ஆண்டில் இறந்து போனார். பின்னர் அவருடைய சகோதரியான கமலாம்பா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சீதாமகாலட்சுமி எனும் பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் திருமணமாகி ஒரு மகனையும் ஈன்றெடுத்திருக்கிறாள். ஆனால் துரதிர்ஷ்டம் அந்த குழந்தையும் இறந்து போனது; ஆகவே ஸ்ரீ தியாகராஜருக்கு நேரடி வாரிசு என்று யாரும் இல்லாமலே போய்விட்டது.

ஆனால் ஸ்ரீதியாகராஜரின் மூத்த சகோதரர் ஜல்பேசன் என்பவருக்கு வாரிசுகள் உண்டு, இன்றும் கூட அந்த வாரிசுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 1847 ஜனவரி 6ஆம் தேதி புஷ்ய பகுள பஞ்சமியில் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

ஸ்ரீதியாகராஜரின் இசை புகழ்பெற இரண்டு காரணங்கள், ஒன்று அவைகளில் நிறைந்திருந்த பக்தி ரசம். மற்றொன்று அவருடைய குருவான சொண்டி வெங்கடரமணையா என்பவரிடம் அவர் கற்றுக்கொண்ட சுத்தமான இசை. பக்தி எனும் சுவைகலந்த அந்த புனிதமான இசை ஸ்ரீதியாகராஜரை இவ்வுலகுக்கு அடையாளம் காட்டியது. இவ்வுலக பந்தங்களில் பற்று இன்றி அந்த இராம பாத சேவையே அளவற்ற செல்வம் என்பதை உணர்ந்திருந்தார் தியாகராஜர். அதனால்தான் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர், அவரைத் தன் அவைக்கு அழைத்த போதும் அங்கு போய் செல்வம் தேட வேண்டுமென்கிற ஆசையை மறுத்துவிட்டு, தசரதராமனின் பாதாரவிந்த சேவையே நிறைந்த செல்வம் என்று பாடவும் செய்தவர். ஆகவே ஸ்ரீதியாகராஜரின் வாழ்வின் நோக்கம், குடும்ப வாழ்வு அல்ல; தேவைக்கு அவசியமான நிதியம் சேர்க்கும் எண்ணம் அல்ல; பின் என்னதான் அவருடைய ஆவல் என்றால் இசையில் ஈடுபட்ட தூய உள்ளம், அந்த இசையில் ஒன்றரக் கலந்துவிட்ட பக்தி, இவை இரண்டும் தான் தன் வாழ்வின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர் அவர்.

இசையை அவர் யோக மார்க்கமாகக் கையாண்டவர். சிலர் மூச்சை அடக்கி, மனதை ஒருநிலைப் படுத்தி யோகத்தில் ஈடுபடுவர், ஆனால் இவரோ பக்தி எனும் பேரருள் கருணையில் மூழ்கி, இசை வெள்ளத்தில் நனைந்து தன்னை மறந்து பாடி இறைவனைக் காண விழைகின்ற யோகத்தில் ஈடுபட்டவர். இப்புவியில் அவர் யாரை வழிகாட்டிகளாகக் கொண்டார் என்பதை அறிந்தால் அவர் இருந்த அந்த பக்தியோக நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். அவருக்கு ஆதர்சமாக இருந்தவர்கள் பிரகலாதன், துருவன், அனுமன் ஆகியோர். இவர்கள் அடியொற்றித் தன்னையும் ஒரு ஆழ்வாராக நிலைநாட்டிக் கொண்டவர் ராமபக்த தியாகராஜர்.

ஸ்ரீதியாகராஜருடைய சில கீர்த்தனங்கள் எந்த சூழ்நிலையில் பாடப்பட்டன என்பதற்கும் சில வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. ஒரு சமயம் இவருடைய குரு சொண்டி வெங்கடரமணையா தன் சீடர் தியாகராஜரைத் தஞ்சாவூருக்கு அழைத்துத் தன் இல்லத்தில் அவரைப் பாடச் சொல்லி கேட்டார். அப்போது பாடியதுதான் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான “எந்தரோ மகானுபாவுலு” எனும் ஸ்ரீராகத்தில் அமைந்தப் பாடல். சுவாமிகள் பாடிய பஞ்சரத்ன கீர்த்தனைகளில் மிகச் சிறப்பான இடம் பெற்றது இந்தப் பாடல். இதில் அவர் சொல்லும் கருத்து அவருடைய அடக்கம், பெருந்தன்மை இவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அவர் சொல்கிறார் "இந்த பரந்த உலகில் எத்தனை பேரருளாளர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேரையும் வணங்குகிறேன். நிலவினையொத்த பேரழகு வாய்ந்தவளைத் தன் இதயமெனும் தாமரையில் வைத்து மகிழ்ந்து வணங்கும் அத்தனை பேரையும் வணங்குகிறேன். சாமகானப் பிரியனே! மன்மதன்போன்ற எழிலுடையாய்! உலகில் சிறந்த பாக்கியசாலிகள் அனைவரையும் வணங்குகிறேன். மனக்குரங்கின் தாவுதலை நிறுத்தி உன் எழிலான தோற்றத்தைப் போற்றுகின்ற அனைவரையும் வணங்குகின்றேன்."

அரசவைக் கலைஞரான சொண்டி வெங்கடரமணையா தன் சீடரும், மாமேதையுமான தியாகராஜரின் பெருமையை மன்னரிடம் சொன்னார். உடனே அவரைத் தன் அவைக்கு வந்து பாடும்படி மன்னர் கேட்டுக் கொண்டார். இறைவன் சந்நிதியில் ராமனின் புகழை மனமுருக பாடுவதை விட்டு, பரிசுக்கும் பணத்துக்குமாகத் தான் அரசன் சந்நிதியில் பாட விரும்பாத தியாகராஜர் “நிதி சால சுகமா, ராம நின் சந்நிதி சேவா சுகமா” என்ற கல்யாணி ராகப் பாடலைப் பாடினார். இந்தப் பாடலின் உட்கருத்து "செல்வம் முதலானவை மிகுந்த இன்பம் பயக்கக்கூடியவைகளா? அல்லது இராமபிரானின் திருவடி சேவை இன்பம் பயப்பதா?" என்பதாகும். அதில் மேலும் அவர் சொல்வதாவது: "தயிர், வெண்ணை, பால் முதலியவை சுவையுடையனவா? அல்லது தசரதன் மகனை மனதிலிறுத்தி பஜனை செய்வது சுவையானதா?. அடக்கம், அமைதி எனும் கங்கையில் நீராடுவது சுகமா, அன்றி சேற்றுக் குட்டையில் மூழ்குவது சுகமா? ஆணவம்கொண்ட மனிதரைப் பாடுவது சுகமா? அல்லது தியாகராஜன் வணங்கும் சுவாமியை வணங்குவது சுகமா? என்று தன் மனத்திடம் கேட்கிறார்.

1810இல் தியாகராஜருடைய பெண் திருமணம் நடந்தபோது, அவருடைய சீடர் வாலாஜாபேட்டை வெங்கடரமண பாகவதர் அங்கிருந்து நடந்தே திருவையாற்றுக்கு வந்தாராம். திருமண பரிசாக ஒரு ராம பட்டாபிஷேகப் படத்தை  அன்பளிப்பாகத் தந்தாராம். அதை வாங்கிக் கொண்ட தியாகராஜர் அதைக் கொண்டு போய் தன் பூஜை அறையில் வைத்துவிட்டு “நனுபாலிம்ப” எனும் கீர்த்தனையைப் பாடி உருகினார். அந்தப் பாடலில் அவர் சொல்லுகின்ற கருத்து, இராமனைப் பார்த்து "என் பிராணநாதனே! என்னை ரட்சிக்கவென்று இங்கே நடந்து வந்தாயா? சதாகாலமும் நின் முகத்தைக் கண்டுகொண்டிருப்பதே என் வாழ்வின் லட்சியம் என்பதைத் தெரிந்து கொண்டு நடந்து வந்தாயா? கருநீலமணியெனும் உடலும், மார்பில் அசைந்தாடும் முத்துமாலைகளும், கையில் கோதண்டமும் கொண்டு, புவிமகளாம் சீதையுடன் என்னை ரட்சிக்க நடந்து வந்தாயா?" என்கிறார்.

இப்படி சில பாடல்கள் உருவான வரலாறுகள் இருந்தாலும், அவருடைய பாடல்களில் இருந்த சில வரிகளை வைத்துச் சில கற்பனையான நிகழ்ச்சிகளையும் சொல்லத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக திருப்பதியில இவர் போயிருந்தபோது பெருமாள் சந்நிதியில் திரை மறைத்ததாகவும், இவர் “தெர தீயகராதா” என்ற பாடலைப் பாடினதும் திரை அறுந்து விழுந்ததாகவும் சொல்கிறார்கள். ஒரு இராம பக்தர் பெருமாள் சந்நிதியில் திரை அறுந்து விழும்படி பாடுவாரா? உண்மையில் அந்தப் பாடலின் சரணங்களில் தத்துவார்த்தமான சில விஷயங்களை எடுத்துச் சொல்லி என் மனதில் நின்னை அடையமுடியாமல் மறைக்கும் அந்த மாயத் திரை நீங்கியுன்னை தரிசிக்க வேண்டாமா என்று பாடியிருப்பதைக் காணலாம்.  இதில் அவர் சொல்லும் கருத்து "திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் வேங்கடரமணா! என் உள்ளத்திலுள்ள பொறாமை எனும் திரையை நீ விலக்கிவிடக்கூடாதா? உயர்ந்த தெய்வமே! அந்த மாயத்திரை தர்மம் போன்ற உயர் நோக்கங்களை என்னால் எட்டமுடியாமல் செய்து விடுகின்றதே. விரும்பி உண்ணும் உணவில் ஈ விழுதல் போலும், ஹரியை வணங்கும்போது இழிவை நினைப்பது போலவும் என்னுள் தோன்றும் திரையை விலக்கக்கூடாதா? நீரில் மீன்கள் இறைதின்னும்போது அகப்பட்டுவிடும் வலைபோன்றும்; ஒளிதரும் விளக்கை மறைப்பது போன்றதுமான திரையை விலக்கிவிடக் கூடாதா? மிருகங்கள் தங்களைப் பிடிக்க விரித்த வலையில் விழுவதுபோன்று எனக்கு இந்தத் திரை இருக்கிறது. என் உள்ளத்திலிருந்து பொறாமை எனும் திரையை விலக்கி விடுவாயாக!" என்கிறார்.

ஆராதனையின் போது சங்கீத வித்வான்கள் ஒன்றுகூடி அவர் சமாதிக்கெதிரில் அமர்ந்து கொண்டு பக்தி சிரத்தையுடன் பாடுகின்ற பஞ்சரத்ன கிருதிகள் ஐந்து கன ராகங்களில் அமைந்தவை. அவை நாட்டை, கெளளை, ஆரபி, ஸ்ரீ ராகம், வராளி ஆகியவை. அந்த மகானை நினைவுகூரும் விதமாக ஒவ்வோராண்டும் அவருடைய சமாதியில் ஐந்து நாட்கள் இசை விழாவும் ஆராதனையும் நடைபெறுகின்றது.

ஸ்ரீதியாகராஜரின் நினைவாக இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் அமெரிக்க நாட்டில் கிளீவ்லாந்து, ஒஹையோ போன்ற இடங்களிலும், சென்னையில் திருவையாறு என்றும், மும்பை, டெல்லி, கல்கத்தா ஆகிய பெருநகரங்கள் தவிர, தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் தியாகராஜ உத்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  எனினும் அவர் வளர்ந்து, வாழ்ந்து முடிந்த திருவையாற்றில் சலசலத்தோடும் தெளிந்த நீரோடும் காவிரிக் கரையில் அவருடைய சமாதிக்கெதிரில் நடைபெறும் ஆராதனைக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உண்டு அல்லவா?

குழந்தை பூமியில் பிறக்கும் போதே ஓசையெழுப்பிக் கொண்டு பிறப்பதும், பின்னர் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இசை நம்மோடு பின்னிப் பிணைந்து இருப்பதையும் பார்க்கும் போது ஒவ்வொருவர் மூச்சுக் காற்றிலும் இசை கலந்து கிடக்கிறது என்ற உண்மையை உணர முடிகிறது. இசையப் பற்றி மகாகவி பாரதியார் தன்னுடைய “குயில் பாட்டில்” மிக அழகாகச் சொல்கிறார்.
இசையை ரசிக்கத் தனி தகுதி தேவையில்லை. காரணத்தையும் மகாகவி பாரதியார் சொல்கிறார். “காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டில் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்” என்கிறார். காட்டில் வாழும் விலங்குகளும், கைக்குழந்தையும், பாம்பும்கூட இசையைக் கேட்டு ரசிக்குமென்றால், ஐந்தறிவு மனிதர்கள் விரும்ப காரணம் கேட்க வேண்டுமா என்ன?

திருவையாற்றில் தெளிந்த காவிரி நீர் ஓடுவது போல், ஐயாறப்பர் ஆலயத்தின் கோபுரத்திலிருந்து ஏராளமான புறாக்கள் நாலா திசைகளிலும் ஒரே நேரத்தில் பறந்து செல்வதைப் போல, காற்றில் மெல்ல இசையின் ஒலி நான்கு திசைகளிலும் பரவ அதனை பல்லாயிரக்கணக்கானோர் கேட்டு மகிழும் அற்புதமான விழா இதோ திருவையாற்றில் நடந்து கொண்டிருக்கிறது. கேட்டு இன்புறுங்கள்.

கட்டுரை ஆக்கம்:
தஞ்சை வெ.கோபாலன்,   இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,    28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர் 613007.  தொலைபேசி எண்:  9486741885.


                        

Wednesday, January 20, 2016

சக்தி -- மகாகவி பாரதியாரின் "சக்தி" பாடல்கள் சில.


துன்ப மிலாத நிலையே சக்தி,
      தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி,
அன்பு கனிந்த கனிவே சக்தி,
      ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி,
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
      எண்ணத் திருக்கும் எரியே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
      முக்தி நிலையின் முடிவே சக்தி.

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
      சொல்லில் விளங்கும் சுடரே சக்தி,
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
      தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி,
பாம்பை அடிக்கும் படையே சக்தி,
      பாட்டினில் வந்த களியே சக்தி,
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
      சங்கரன் அன்புத் தழலே சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
      மாநிலங் காக்கும் மதியே சக்தி,
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
      சஞ்சல நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
      விண்ணை யளக்கும் விரிவே சக்தி,
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
      உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி. 

சக்தி விளக்கம் 

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்,
சூதில்லை காணுமிந்த நாட்டீர்! - மற்றத்
தொல்லை மதங்கள் செய்யுந் தூக்கம்.

மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்!
காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்.

காலை இளவெயிலின் காட்சி - அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி,
நீல விசும்பினிடை இரவில் - சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.

நாரண னென்று பழவேதம் - சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்,
சேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு
செல்வம் அறிவு சிவபோதம்.

ஆதி சிவனுடைய சக்தி - எங்கள்
அன்னை யருள் பெறுதல் முக்தி,
மீதி உயிரிருக்கும்போதே - அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் - பல
கற்றலில் லாதவனோர் பாவி.

மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த
நேரமும் போற்று சக்தி என்று.

சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் 

ராகம் - பூபாளம் தாளம் - சதுஸ்ர ஏகம்

கையை,
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சாதனைகள் யாவினையுங் கூடும் - கையை
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி யுற்றுக் கல்லினையுஞ் சாடும்.

கண்ணை,
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சக்தி வழியதனைக் காணும் - கண்ணை
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சத்தியமும் நல்லருளும் பூணும்.

செவி,
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் - செவி
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி திருப் பாடலினை வேட்கும்.

வாய்,
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி புகழினையது முழங்கும் - வாய்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி நெறி யாவினையும் வழங்கும்.

சிவ,
சக்திதனை நாசி நித்த முகரும் – அதைச்
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி திருச் சுவையினை நுகரும் - சிவ
சக்தி தனக்கே யெமது நாக்கு.

மெய்யை,
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி தருந்  திறனதி லேரும் - மெய்யைச்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சாதலற்ற வழியினைத் தேறும்.

கண்டம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சந்ததமும் நல்லமுதைப் பாடும் - கண்டம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி யுடனென்று  முறவாடும்.

தோள்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
தாரணியு மேலுலகுந்  தாங்கும் - தோள்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி பெற்று மேருவென வோங்கும்.

நெஞ்சம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியுற நித்தம் விரிவாகும் - நெஞ்சம்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அதைத்
தாக்க வரும் வாளொதுங்கிப் போகும்.

சிவ,
சக்தி தனக்கே யெமது வயிறு - அது
சாம்பரையு  நல்லவுண  வாக்கும் - சிவ
சக்தி தனக்கே யெமது வயிறு - அது
சக்திபெற வுடலினைக் காக்கும்.

இடை,
சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் - இடை
சக்தி தனக்கே கருவியாக்கு - நின்றன்
சாதிமுற்றும் நல்லறத்தி லூன்றும்.

கால்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சாடி யெழு கடலையுந்  தாவும் - கால்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சஞ்சல மில் லாம லெங்கு மேவும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை  கூடும் - மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அதில்
சாத்துவிகத் தன்மையினைச் சூடும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி யற்ற  சிந்தனைகள் தீரும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அதில்
சாரு நல்ல உறுதியுஞ் சீரும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி சக்தி சக்தியென்று பேசும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அதில்
சார்ந்திருக்கும் நல்லுறவுந் தேசும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி நுட்பம் யாவினையு நாடும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி சக்தி யென்று குதித்தாடும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியினை எத்திசையும் சேர்க்கும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சந்ததமுஞ் சக்திதனைச் சூழும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அதில்
சாவு பெறுந் தீவினையும் ஊழும்.

மனம்,
சக்தி தனக்கே யுரிமையாக்கு - எதைத்
தான் விரும்பினாலும் வந்து சேரும் - மனம்
சக்தி தனக்கே யுரிமையாக்கு - உடல்
தன்னிலுயர் சக்திவந்து நேரும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - இந்தத்
தாரணியில் நூறுவய தாகும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - உன்னைச்
சாரவந்த நோயழிந்து போகும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - தோள்
சக்தி பெற்றுநல்ல தொழில் செய்யும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - எங்கும்
சக்தியருள் மாரிவந்து பெய்யும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி நடையாவு நன்கு பழகும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - முகம்
சார்ந்திருக்கு நல்லருளு மழகும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - உயர்
சாத்திரங்கள் யாவு நன்குதெரியும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல
சத்திய விளக்கு நித்த மெரியும்.

சித்தம்,
சக்தி தனக்கே உரிமையாக்கு - நல்ல
தாளவகை சந்தவகை காட்டும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில்
சாரு நல்ல வார்த்தைகளும் பாட்டும்.

சித்தம்,
சக்தி தனக்கே யுரிமை யாக்கு – அது
சக்தியை யெல்லோர்க்கு முணர் வுறுத்தும் - சித்தம்
சக்தி தனக்கே யுரிமை யாக்கு
சக்தி புகழ் திக்கனைத்து நிறுத்தும்.

மனம்,
சக்தி தனக்கே யுரிமை யாக்கு - அது
சக்தி சக்தி என்று குழலூதும் - சித்தம்
சக்தி தனக்கே யுரிமை யாக்கு - அதில்
சார்வதில்லை யச்சமுடன் சூதும்.

சித்தம்,
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சக்தி யென்று வீணைதனில் பேசும் - சித்தம்
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சக்தி பரிமள மிங்கு வீசும்.

சித்தம்,
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சக்தி யென்று தாளமிட்டு முழக்கும் - சித்தம்
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சஞ்சலங்கள் யாவினையு மழிக்கும்.

சித்தம்,
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சக்தி வந்து கோட்டை கட்டி வாழும் - சித்தம்
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சக்தி யருட் சித்திரத்தில் ஆழும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சங்கடங்கள் யாவினையு முடைக்கும் - மதி
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அங்கு
சத்தியமும் நல்லறமுங் கிடைக்கும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சாரவருந் தீமைகளை விலக்கும் - மதி
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் - மதி
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சக்தியுறை விடங்களை நாடும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தர்க்க மெனுங் காட்டிலச்ச நீக்கும் - மதி
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அதில்
தள்ளிவிடும் பொய்ந்நெறியுமந் தீங்கும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அதில்
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
சக்தி யொளி நித்தமு நின் றிலகும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அதில்
சார்வதில்லை யையமெனும் பாம்பு - மதி
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அதில்
தான் முளைக்கும் முக்தி விதைக் காம்பு.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தாரணியி லன்பு நிலை நாட்டும் - மதி
சக்தி தனக்கே யடிமை யாக்கு - அது
ஸர்வ சிவ சக்தியினைக் காட்டும்.

மதி,
சக்தி தனக்கே யடிமை யாக்கு - அது
சக்தி திருவருளினைச் சேர்க்கும் - மதி
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
தாமதப் பொய்த் தீமைகளைப் பேர்க்கும்.

மதி,
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் - மதி
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
தாக்கவரும் பொய்ப்புலியை யோட்டும்.

மதி,
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
சத்தியாநல்லிரவியைக்  காட்டும் - மதி
சக்தி தனக்கே யடிமையாக்கு - அதில்
சாரவரும் புயல்களை வாட்டும்.

மதி,
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
சக்தி விரதத்தை யென்றும் பூணும் - மதி
சக்தி விரதத்தை யென்றுங் காத்தால் - சிவ
சக்திதரு மின்பமு நல் லூணும்.

மதி,
சக்தி தனக்கே யடிமையாக்கு - தெளி
தந்தமுதம் பொய்கையென வொளிரும் - மதி
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
சந்ததமு மின்பமுற மிளிரும்.

அகம்,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தன்னையொரு சக்தியென்று தேரும் - அகம்
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தாமதமும் ஆணவமும் தீரும்.

அகம்,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தன்னை யவள் கோயிலென்று காணும் - அகம்
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும்.

அகம்,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சக்தியெனுங் கடலிலோர் திவலை - அகம்
சக்தி தனக்கே யுடைமை யாக்கு - சிவ
சக்தி யுண்டு நமக்கில்லை கவலை.

அகம்,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அதில்
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் - அகம்
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சக்தி திருமேனி யொளி ஜ்வலிக்கும்.

சிவ,
சக்தி என்றும் வாழியென்று பாடு - சிவ
சக்தி சக்தி யென்று குதித்தாடு - சிவ
சக்தி என்றும் வாழியென்றுபாடு - சிவ
சக்திசக்தி யென்று விளை யாடு.


சிவசக்தி புகழ்

ராகம் - தன்யாசி தாளம் - சதுஸ்ர ஏகம்

ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு ,
சக்திசக்தி சக்தியென்று சொல்லி - அவள்
சந்நிதியி லேதொழுது நில்லு.

ஓம், சக்திமிசை பாடல்பல பாடு - ஓம்
சக்திசக்தி என்று தாளம் போடு.
சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே - சிவ
சக்திவெறி கொண்டுகளித் தாடு.

ஓம், சக்திதனையே சரணங் கொள்ளு - என்றும்
சாவினுக்கோ ரச்சமில்லை தள்ளு.
சக்திபுக ழாமமுதை அள்ளு - மது
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு.

ஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு - நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு.
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி - அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.

ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை - இதைச்
சார்ந்து நிற்ப தேநமக்கொ ருய்கை,
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில்
தன்னமுத மாரிநித்தம் பெய்கை.

ஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு,
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் - புவிச்
சாதிகளெல் லமதனைக் கேட்டு.

ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு - அவள்
தந்திரமெல் லாமுலகில் வழங்கு.
சக்தியருள் கூடிவிடு மாயின் உயிர்
சந்ததமும் வாழுநல்ல கிழங்கு.

ஓம் சக்திசெய்யுந் தொழில்கலை எண்ணு - நித்தம்
சக்தியுள்ள தொழில்பல பண்ணு,
சக்திகளை யேஇழந்துவிட்டால் - இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு.

ஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு - ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு,
சக்திசில சோதனைகள் செய்தால் - அவள்
தண்ணருளென் றேமனது தேறு.

ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து - சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து,
சக்தியும் சிறப்பும்மி கப்பெறுவாய் - சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து! 



Monday, January 18, 2016

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!

"Facebook"  இல் வெளியான அருமையான பதிவு இது. அனைவருக்கும் தெரியட்டுமென்று இதனை அதிலேயும் மீள்பதிவு செய்ததோடு, என் வலைப்பூவிலும் வெளியிடுகிறேன். தமிழ் பிறரால் வளர்ந்தது என்பதைவிட, தமிழால் வளர்ந்தவர்களே அதிகம் என்பதை நிரூபிக்கும் பதிவு இது. எழுதியவர், பதிப்பித்தவர் அனைவருக்கும் நன்றி.

Aatika Hasan added 2 new photos.
ஆதாரம் இதோ...........
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
==========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .
2015 ஆய்வுகளின் படி :
( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )
- சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .
தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .
மரத்தை கட்டுவதால் கட்டு மரம்
இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் " கட்டு மரம் " தான் .
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
→→→→நமது தமிழ்←←←←←←
கி.வீரலட்சுமி தலைவர் தா ம க

Saturday, January 16, 2016

திருவள்ளுவர்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுஎன்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும்திருக்குறள்என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர்.
உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர்.
இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
திருக்குறளை சிறப்பிக்கும் விதமாகஉலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பொதுவாக, அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பிரிவில் வீடு என்பது மோட்சம். அதை வள்ளூவர் இங்கு அதிகம் தொட்டுக் காட்டாமல், முதல் மூன்று பாலுடன் நிறுத்திக் கொண்டதும் அவரது உள்ளக் கிடக்கம் மானுட வர்க்கத்தை சீர்படுத்தவே என்பது புரிகிறது அல்லவா?
§  அறத்துப்பால்முதல் பிரிவானஅறத்துப்பாலில்மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
§  பொருட்பால்இரண்டாவது பிரிவானபொருட்பாலில்உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
§  இன்பத்துப்பால்மூன்றாவது பிரிவானஇன்பத்துப்பால்அல்லதுகாமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
திருவள்ளுவர் தினம்: தை மாதம் 2வது நாள் அதாவது ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும்.
ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர். அணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று புகழப்பட்டது திருக்குறள்.
133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார்

தொடங்கியவுடன் “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்கிறார். தமிழ் “அ” எனும் எழுத்தில் தொடங்குவது போல, இந்த உலகு ஆதி, பகவன் ஆகியோரை வழியொற்றி தொடர்கிறது என்கிறார்.
ஒருவன் கல்வி கற்றவன் என்பதற்கு எது அடையாளம்? ‘வாலறிவன்’ அதாவது மெய்யாய் விளங்குவோன் எனும் இறைவனை வணங்குவதுதான். அந்தக் குறள் “கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாரெனின்?”
இன்ன கடவுள் என்று பிரித்துப் பாராமல், பொதுவான சொல்லினால் இறைவனை முதல் 10 பாடல்களை கடவுள் வாழ்த்து எனும் தலைப்பில் கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து ‘வான் சிறப்பு’ எனும் தலைப்பில் மழையின் சிறப்பைக் கூறுகிறார். வேதங்களில் முதன்மையானது ‘ரிக்’ வேதம். அதில் இறைவன் என்று எவர் பெயரையும் குறிப்பிடவில்லை. அந்த பழமையான காலத்தில் இடி, மழை, காற்று, மின்னல் போன்ற இயற்கைத் தோற்றங்களை வணங்கினர். இந்திரன் என்பவனே முழு முதல் கடவுள்.
முதலில் “மழையை” வைத்ததால் உயிர்களுக்கு முதல் தேவை மழை என்கிறார். இதில் “தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காதெனின்” இந்தக் குறள் சொல்லும் நீதி, இவ்வுலகில் மழை பெய்யாமல் பொய்த்துப் போனால், தானம் ஏது, தவம் ஏது? என்கிறார்.
“அறன் வலியுறுத்தல் என்றொரு அதிகாரம்”. அதில் சொல்கிறார் “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற”. மனத்தால் ஒருவன் தூயவனாக இருத்தல் வேண்டும், அதைவிட வேறு ஒரு அறம் இல்லை என்கிறார்.
பொதுவாக மக்கள் நமக்கு ஒருவர் செய்த நன்மையை நன்றியோடு நினைப்பது இல்லை. அதனால்தான் அவர் “செய்நன்றி அறிதல்” என்றொரு தலைப்பில் சொல்லும் ஒரு பாட்டில் “நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்கிறார். நாம் செய்த நன்மைகளை மறந்து விடுவோம், ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிறர் செய்த தீங்கை மட்டும் காலம் முழுதும் நினைத்திருப்போம். இது தீது என்கிறார் வள்ளுவர்.
ஒழுக்கமுடைமை என்றொரு அதிகாரம். ஒழுக்கம் எத்துணை இன்றியமையாதது. அது உயிரைவிட மேலானது. ஒழுக்கம் தவறியவன் இறந்தவனுக்குச் சமம். இதை வள்ளுவர் சொல்கிறார் “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”. உயிரைக் காட்டிலும் ஒழுக்கம் அவசியம் என்பது அவர் கருத்து.
அழுக்காறு என்றால் பொறாமை. நாம் எதற்கும் எப்போதும் பிறரிடம் பொறாமை கொள்கிறோம் அல்லவா? அப்படி பொறாமை கொண்டவன் உலகில் பெருமை அடைவதில்லையாம். பொறாமை இல்லாமல் இருப்பவன் மேன்மை அடைந்தே தீருவான் என்கிறார். அந்தக் குறள் “அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.”
தீவினை அச்சம் என்றொரு அதிகாரம். நம்முடைய எந்த செயலிலும் தீய எண்ணம் கூடாது. அப்படி நம் உள்ளத்தில் தீமை இருந்தால் என்ன செய்யுமாம் தெரியுமா? அந்த எண்ணம் நமக்கே தீமை விளவிக்குமாம். ஆகையால் தீமையைக் கண்டு அஞ்சுதல் வேண்டும் என்கிறார். “தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப் படும்”.
மாமிசம் சாப்பிடுவது பற்றியும் வள்ளுவர் கூறுகிறார். மாமிசம், அதாவது புலால் உண்ணாமை என்பது அதிகாரம். அவர் சொல்கிறார், எந்தவொரு உயிரையும் கொன்று மாமிசம் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகிலுள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்குமாம். “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்”. படித்திருக்கிறீர்களா?
இப்படி அறத்துப் பால் நெடுக தர்ம நியாயங்களை வலியுறுத்திச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தக் கருத்துக்கள் அனைத்துமே, எல்லா காலத்துக்கும் ஏற்புடையது என்பது புரிகிறதல்லவா?
அடுத்தது பொருட்பால்.
பொருட்பாலில் இறைமாட்சி எனும் அதிகாரத்துடன் தொடங்குகிறார். ஒரு அரசன் எவ்வாறு இருக்க வேண்டும்? அரசனுக்குரிய குணங்கள் பற்றியெல்லாம் இங்கு வள்ளுவர் சொல்லுகிறார். இதை ஒரு அளவுகோலாக நாம் கொண்டோமானால், இந்த ஜனநாயக யுகத்தில் நம்மை ஆள்வோர் எப்படி இருக்க வேண்டுமென்பதை நாம் முடிவு செய்து கொள்ளலாம், இல்லையா?
ஒரு அரசனுக்குத் தேவை ஆறு அம்சங்கள்: அவை படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் இவைகளாகும்.
அவன் இயல்புகள் நான்கு.  அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆகிய நான்கும்.
அவனுக்கு வேண்டிய பண்புகள் மூன்று: விரைந்து செயல்படுதல்; கல்வி; துணிவு.
குணங்கள்: அறம் தவறாமை, அறமில்லாதவை நீத்தல், வீரம், மானம்.
செயல்பாடு: பொருள் வரவுக்கான வழிகளை காண்தல்; வந்த பொருளை சேமித்து வைத்தல்; அதை காத்தல்; காத்து வைத்தவற்றை பயனறிந்து செலவழித்தல்.
தோற்றம்: காண்பதற்கு எளியவனாய் இருத்தல்; கடுஞ்சொல் இல்லாதவன்;
புகழ்:  இனிய சொல் உடையவன்; தக்கோருக்கு உதவுபவன்; நீதி தவறாதவன்.குறைகளைக் கேட்டுக் கொள்ளும் நிதானம்; நிதானத்தைக் கடைபிடிப்பவன்.
யார் நல்ல அரசன்?  கொடை குணம் கொண்டோன், செங்கோல் தவறாதவன்; நலிவடைந்த குடிகளைக் காப்பவன் ஆகிய நான்கும் உடையோன்.
கம்ப ராமாயணத்தில் நிறைவாக இராம பட்டாபிஷேகம் நடக்கும் காட்சியை கம்பன் வர்ணிக்கிறார்:
“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த                                            பரதன் வெண்குடை கவிக்க,  இருவரும் கவரி வீச                                           விரிகடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை                        மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி.”
இந்தப் பாடலில் அரியணை அனுமன் தாங்க எனும் சொற்கள் சொல்லும் செய்தி என்ன? அனுமன் தாங்காவிட்டால், அந்த அரியணை தரையில் நிற்காதா? நிற்கும். ஆனால், இங்கு சொல்ல வந்த செய்தி என்னவென்றால், ஒரு நாட்டை ஆளும் தகுதிகள் அனைத்தும், மேலே சொன்ன தகுதிகள் அனைத்தும் அனுமனுக்கு இருப்பதால், அவன் இந்த இராம ராஜ்யத்தின் அரியணைக்கு, அதாவது ஆளுகைக்கு உறுதுணையாக இருப்பான் என்பது செய்தி.
இது போல எத்தனையோ செய்திகளைச் சொல்வது திருக்குறள். வாழ்க்கையில் நமக்கு எந்த சந்தேகம் எழுந்தாலும், திருக்குறளை எடுத்துத் தேடினால், நமக்கு விடை கிடைக்கும். அதனால்தான் திருக்குறளை பொது மறை என்கின்றனர்.
உலகத்திலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளும் ஒன்று. திருக்குறள் 1330 பாக்களையும் மனப்பாடம் செய்ய முடியும். அப்படிப்பட்ட வாய்ப்பை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி “ஒரு வார்த்தை ஒரு லட்சம்” எனும் பகுதியில் திருக்குறள் முழுவதையும் படித்தால்தான் கலந்து கொள்ள முடியும். இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் மாணவர்கள் பார்த்தால் போதும்.